Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் மாளிகை அழிக்கப்பட்டதன் அவசரம் என்ன..? - தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

வன்னியில் தமிழீழத் தேசியத் தலைவர் வசித்ததாக கருதப்படுகின்ற நிலக்கீழ் மாளிகை வீடு ஒன்று சிறீலங்காப் படையினரால் அழிக்கப்பட்டிருக்கின்றது. புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த வீடு மிகவும் ஆச்சரியம் மிக்க கட்டுமானமாக அமைந்திருந்தது.

sri-lanka-james-morgan-80.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளைத் தவிர இளநிலைத் தளபதிகளால் கூட கால்பதிக்க முடியாத இடமாக இருந்த இந்த வீடு, இன்று இடித்தழிக்கப்பட்டிருக்கின்றமையானது தமிழ் மக்களிடையே பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. போரியல் ரீதியில் மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழத் தேசியத் தலைவரும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதற்கு இந்த நிலக்கீழ் மாளிகை வீடு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. ஆனால், இந்தக் கட்டுமானம் இன்று அடியோடு சாய்க்கப்பட்டிருக்கின்றது.

வித்தியாசமான போரியல் நுட்ப முறைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதில் புலிகள் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். உலகிலுள்ள பல விடுதலை அமைப்புக்களுக்கு எடுத்துக்காட்டான பல உத்திகளை விடுதலைப் போராட்டத்தில் பயன்படுத்திய பெருமை புலிகள் அமைப்பையே சாரும். அரசாங்கப் படைகளாக இருக்கின்ற சிறீலங்காப் படைகள் பில்லியன் கணக்கான நிதி மூலங்களுடன் செயற்படுகின்ற போதிலும் போரியல் ரீதியில் அவர்கள் சிறந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை.

ஆனால், விடுதலைப் புலிகள் கட்டுமானத்துறை, பொறியியல்துறை, அரசியல்துறை, நீதி நிர்வாகத்துறை போன்றவற்றிலும் மீள் கட்டுமானங்களிலும் சிறந்து விளங்கியிருந்தனர். இதனை சிறீலங்கா அதிகாரிகள் உட்பட உலகத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்த வகையிலேயே விடுதலைப் புலகளின் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியிலிருந்த நிலக்கீழ் வீட்டின் கட்டுமானமும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது.

நிலத்தை மிக ஆழமாகக் குடைந்தெடுத்து நான்கு அடுக்கில் ஒரு மாளிகை அமைப்பது என்பது ஒரு சாதாரணமான விடயமல்ல. நிலத்திற்கு மேலே எத்தனை தளத்திலும் மாளிகை அமைக்க முடியும். ஆனால், நிலத்திற்கு கீழே மாளிகை அமைப்பதற்கு மிகச் சிறந்த தொழில்நுட்ப அறிவு தேவை. பூமி அதிர்வுகள், பாறைகளின் உடைவுகள், நீரோட்டங்களின் திசைகள், நிலக்கீழ் நீரின் வேகம், மண்ணின் தன்மை போன்ற இன்னோரன்ன காரணிகளை ஆராய்ந்து அவைகளுக்கு ஏற்பவும் எதிரியின் சக்திமிக்க ஆயுதங்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய விதத்திலும் பல வாசல்களுடன் கூடிய சுரங்க வடிவத்தில் நிலக்கீழ் மாளிகை அமைப்பதற்கு சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அவசியம். இவற்றுக்கு மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது தொழில்நுட்ப வலுவைப் பயன்படுத்தி இந்த மாளிகையை அமைத்தமையானது சிறீலங்கா படைகளை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.

‘புலித் தலைவர் பிரபாகரன் வசித்த நிலக்கீழ் மாளிகையை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்’ என்ற அகங்காரத்துடன் இந்த வீடு தொடர்பான விபரங்களை சிறீலங்கா படைகள் வெளியே கொண்டுவந்தன. இறுதி யுத்தத்திற்கு முன்னர் உயர் தளபதிகளை விட இளநிலைத் தளபதிகளுக்கோ நடுத்தரப் போராளிகளுக்கோ களநிலைப் போராளிகளுக்கோ தெரியாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக இறுக்கமான பாதுகாப்புக் கொண்ட இடமாக இந்த வீடு இருந்தது. ஆனால், துரதிஸ்டவசமாக இதை இன்று உலகமே பார்க்க வேண்டிய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை வேதனையான விடயம்.

உலகிலுள்ள சில நாடுகள் இணைந்து மேற்கொண்ட படுமோசமான செயற்பாடுகள் காரணமாக இன்று நாங்கள் மீண்டும் அடிமை கொள்ளப்பட்ட இனமாக மாறியிருக்கின்றோம். நாங்கள் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் மேற்படி சிறந்த கட்டுமானம் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் இந்த வீட்டை தென்னிலங்கை சிங்கள மக்கள் மட்டுமே பார்வையிட படையினர் முதலில் அனுமதித்திருந்தனர். சில மாதங்களின் பின்னரே தமிழ் மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்த வீட்டைப் பார்வையிடச் சென்ற தமிழ் மக்கள் கூறிய வியப்புக்களைக் கேட்டு இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இந்த வீட்டைத் தேடிச் சென்று பார்வையிட்டனர். எங்கள் தலைவர் பிரபாகரன் வசித்த வீட்டை நாங்கள் பார்வையிட வேண்டுமென்ற ஆசையினால் இந்த வீட்டைப் பார்வையிட தமிழ் மக்கள் முண்டியடித்தனர். இந்த வீட்டைப் பார்வையிட்ட தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகள், தங்கள் உறவினர் எத்தகைய ஆற்றல் மிக்கவர்களாக திகழ்ந்தார்கள் என்பதை உணர்ந்துகொண்டனர். அவர்களின் ஆற்றல்களையெண்ணிப் பெருமை கொண்டனர்.

சிறீலங்கா அரசாங்கமோ சிறீலங்காப் படைகளோ கூறுவது போன்று இந்த வீடு தலைவர் பிரபாகரன் உல்லாசமாக வாழ்வதற்காகக் கட்டப்படவில்லை. போரியல் ரீதியாக உலக நாடுகளே வியக்கும் சாதனைகளை நிலைநாட்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆவணக் காப்பகமாகவே இந்த வீடு பயன்படுத்தப்பட்டது. முப்பது வருடம் போராட்டம் நடத்திய புலிகள் அமைப்பு போராட்ட காலத்திலேயே நிர்வாக நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள், மாவீரர்கள், பொதுமக்கள், போராட்டத்திற்கு உதவிய பொதுமக்கள், கடந்த கால போராட்ட வரலாறுகள் போன்ற பல ஆவணங்களை எதிரியின் தாக்குதல்களுக்கு எட்டாத இடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை புலிகளுக்கு ஏற்பட்டது. அதைவிட உயர் தளபதிகளின் கருத்தரங்குகள், மந்திராலோசனை, களமுனைத் திட்டமிடல்கள் போன்ற பலவற்றையும் மிக இரகசியமான முறையில் செயற்படுத்துவதற்கு இப்படியான நிலக்கீழ் கட்டமைப்புகள் தேவைப்பட்டன. இதனை விடுத்து தலைவர் பிரபாகரன் வசிப்பதற்காகவே இந்த வீடு அமைக்கப்பட்டது என்பது சிறீலங்கா அரசினதும் படைகளதும் அப்பட்டமான பொய்யாகும்.

நிற்க, போர் முடிந்து நான்கு வருடங்களாகிய நிலையில் தற்போது இந்த வீட்டை இடித்தழிக்க வேண்டிய தேவை படையினருக்கு ஏன் ஏற்பட்டது? இதற்கு காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கள் வெற்றி பெற்றிருக்குமாயின் இந்த வீடு இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே இருந்திருக்கும். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றமையும் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களுமே இந்த வீடு இடித்தழிக்கப்படக் காரணமாகும்.

தமிழர் தாயகத்தில் எந்த வேளையாயினும் புலிகள் மீண்டும் தோற்றம் பெறலாம் என்ற அச்சம் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் படைகளுக்கும் இருந்து வருகின்றது. அவ்வாறு புலிகள் தோன்றினால் மீண்டும் பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியும். இந்த அச்சத்தின் மத்தியில் இருந்த படைகளுக்கும் அரசாங்கத்திற்கும் வடக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தன. அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழ தேசியத் தலைவரும் அவர்கள் செய்த போரியல் வெற்றிகளுமே வடக்குத் தேர்தலில் பேசுபொருளாக, கூட்டமைப்பின் வெற்றிக்கான படிக்கட்டுக்களாக அமைந்தன. 

பிரச்சாரக் கூட்டத்தில் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரித்தவுடன் அதற்கு மக்களிடையே இருந்து எழுந்த ஆதரவுக் குரல்களையும் ஆதரவுக் கோசங்களையும் பதிவு செய்த புலனாய்வுத்துறையினர் இவற்றை உடனுக்குடன் கோத்தபாயவிற்கு அனுப்பி வந்தனர். இவற்றைப் பார்வையிட்ட கோத்தபாயவிற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அதிலும் தலைவரின் பெயரை உச்சரித்து அவரின் வீர சாதனைகளைச் சொல்லியபோது இளைஞர், யுவதிகள் செய்த ஆரவாரங்களையும் கரகோசங்களையும் பார்த்த கோத்தபாய மிகவும் கொதிப்படைந்தார். இந்தக் கொதிப்பின் மறு வடிவமாகவே இந்த நிலக்கீழ் மாளிகை வீடு தகர்க்கப்பட்டுள்ளது.

இந்த வீடு அழிக்கப்பட்டமைக்கு நாம் இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். முதலாவது, மீண்டும் புலிகள் தோன்றினால் இந்தக் கட்டுமானங்கள் அவர்களுக்கு சார்பானதாக அமையும் என்பது. மற்றையது, இராணுவ வெளியேற்றத்தை வலியுறுத்தி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் சில வேளைகளில் இந்த நிலக்கீழ் மாளிகையை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோர முடியுமென்றும் படைத்தரப்பு அஞ்சியது. கூட்டமைப்பு இந்த வீட்டைப் பெற்று தங்கள் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் கோத்தபாய அஞ்சினார். இதனாலேயே இந்த வீட்டை உடனடியாக இடித்தழிக்குமாறு அவர் படையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். அவரின் உத்தரவுப்படி படைகள் தமது பணியைச் செய்து முடித்துள்ளன.

இந்த இடத்தில் நாங்கள், குறிப்பாக தாயகத்திலுள்ளவர்களும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். எமது போராட்டத்தை அழித்த சிங்களப் படைகளும் சிங்கள அரசும் புலிகளின் எந்த எச்சங்களும் அவர்களின் தாயகத்தில் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளன. தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீடு என்ற பெயரில் வன்னியிலுள்ள மேலும் சில வீடுகளை அழிப்பதற்கு கோத்தபாய முயற்சியெடுத்துக்கொண்டிருப்பதாக தெரியவருகின்றது. அவர்கள் எதை அழித்தாலும் எமது போராட்ட உணர்வை அழிக்க முடியாது என்பது வெளிப்படையான உண்மையாகியுள்ளது.

தேசியத் தலைவர் பிரபாகரனின் பெயர் எங்கு உச்சரிக்கப்பட்டாலும் அங்கு ஆர்ப்பரிப்பு எழுந்துகொண்டிருக்கும் வரையில் எமது போராட்டம் வாழ்ந்துகொண்டிருக்கும். எமது போராட்ட உணர்வை எவராலும் மாற்ற முடியாது. புலிக்கு போர்க்குணம் மாறாது. எங்களுக்கு ஜனநாயக வழியில் உரிமை கிடைக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் நாங்கள் மீண்டும் ஆயுதம் தூக்குவதை எவராலுமே தடுக்க முடியாமல்போகும்.

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/34282/64//d,fullart.aspx

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ அலரிமாளிகை ரேஞ்சில எங்கட ஆக்கள் சிங்களவன வெண்டு தலைப்புப் போடுறாங்கப்பா. அது விமானத்தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புப் பெற அமைக்கப்பட்ட பதுங்கு கூடம். அவ்வளவே..! போர் நடக்கும் நாடுகளில் உயர் மட்டத் தலைவர்களை பாதுகாக்க உள்ள ஏற்பாடுதான். இதுக்குப் போயி.. மாளிகை.. மன்னர்.. என்று கொண்டு.

 

ஒன்றை உடைச்சா இன்னொன்றை இதை விட வடிவாக் கட்டிட்டுப் போகலாம். ஆனால் ஆக்கிரமிப்பாளனை விரட்டனும்.. அதுதான் இப்ப எங்கள் இலக்கு. அதைவிட்டிட்டு.. அவன் செய்யிற அநியாயங்களுக்கு சொந்த வியாக்கியானம் கொடுத்து எதுவும் ஆகப்போறதில்லை..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.