Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாடு சிறீலங்காவில் நடப்பது மகிந்தவிற்கு சாதனையா?, சங்கடமா..?

Featured Replies

 

பொதுநலவாய (கொமன்வெல்த்) அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு அடுத்த மாத நடுப்பகுதியில் சிறீலங்காவின் ஹம்பாத்தோட்ட நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை நடத்தி தங்கள் மீதுள்ள இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக் கறைகளை அழித்துவிடலாம் என்றெண்ணிய சிங்களத்தின் சிந்தனையில், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடில்லாமல் தற்போது அச்சம் படரத்தொடங்கியுள்ளது.

மாநாட்டை சிறீலங்காவில் நடத்தமுனைந்து, வேலியிலை போன ஓணானை மடியிலை பிடித்துக் கட்டியவன் நிலையில் மகிந்த சிக்கித்திணறத் தொடங்கியுள்ளார். கறைகளைக் கழுவிவிடலாம் என்று எதிர்பார்த்த மாநாடு, மேலும் பல கறைகளை தங்கள் மீது ஏற்படுத்திக் கொடுக்கும் மாநாடாக அமைந்துவிடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.

ஏற்கனவே, மனித உரிமை மீறல்களைக் காரணமாக்கி பொதுநலவாய மாநாட்டை கனடா புறக்கணித்துவிட்டது. அத்துடன், இந்திய நாட்டவரான பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா சிறீலங்காவிற்கு சார்பாக இயங்குவதாக கனடா வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியுமுள்ளது. ஏற்கனவே, இலங்கை விடயத்தில் ஐ.நா.வும் குற்றவாளியாகி நிற்கும் நிலையில், பொதுநலவாய அமைப்பும் கனடாவின் குற்றச்சாட்டினால் இலங்கை விடயத்தில் நெருக்கடியை  எதிர்கொண்டுள்ளது. 

இதற்கிடையே, பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மனித உரிமைகளை மீறிய சிறீலங்கா மீது பிரித்தானியா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருப்பதுடன், அங்கு பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு பிரித்தானியா அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், பிரித்தானியா இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றது. தனது தலைமையின் கீழ் உள்ள நாடுகள் (பிரித்தானிய கொலனித்துவ நாடுகள்) என்பதால் பிரித்தானியா இந்த மாநாட்டைப் புறக்கணிக்க முடியாத நிலையில் உள்ளது.

Eelamurazu%20logo%20lead.jpgஎனினும், மாநாட்டிற்கு தலைமையேற்க வேண்டிய எலிசபெத் மகராணி தனது பயணத்தை இடைநிறுத்திவிட்டார். அவர் சார்பாக இம்மாநாட்டில் இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார். இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரூன், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து பிரச்சினைகளை எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமரின் இந்தக் கருத்து மகிந்த ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிறீலங்காவின் எதிர்க்கட்சியான ஐ.தே.ககூட பிரித்தானியப் பிரதமரின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ‘சிறீலங்காவிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்காகவே பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதுதாக பிரித்தானியா தெரிவித்ததன் மூலம் தனது மோசமான எண்ணத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக’ குற்றம்சாட்டிய ஐ.தே.க. ஊடகப்பேச்சாளர் கயந்த கருணாதிலக, சிறீலங்காவிற்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நாடுகளும் அழுத்தங்களை கொடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், மனித உரிமை விடயங்கள் குறித்து பிரித்தானிய பிரதமர் கடும் செய்தியுடன்தான் சிறீலங்கா வருவார் என சிறீலங்காவிற்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ராங்கின் குறிப்பிட்டுள்ளார். தற்போது மாநாட்டில் கலந்துகொள்ளும் நியூசிலாந்தும் இவ்வாறானதொரு முடிவிற்கே வந்துள்ளது. பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு, அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளதாக நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

எனவே, முக்கிய நாடுகள் இந்த மாநாட்டைப் பயன்படுத்தி மகிந்தவைக் கண்டிப்பதற்கே முனைந்துள்ளன என்பது உறுதியாகின்றது. இதேவேளை இம்மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பும் அந்நாட்டில் நிலவி வருகின்றது. மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் கூடாது எனவும் அங்கு பொதுநலவாய மாநாடு நடத்த அனுமதிக்கூடாது எனவும் இந்தியாவில் பல அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும், விடுதலை அமைப்புக்களும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.

குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து கடும் அழுத்தத்தை மத்திய அரசு சந்தித்து வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை மீண்டும் அனுப்பிவைத்துள்ளார். ஒரு எச்சரிக்கைக் கடிதம்போல் அமைந்துள்ள அதில், பொதுநலவாய மாநாட்டில் இந்திய மத்திய அரசு கலந்துகொள்வது தமிழ்நாட்டின் பாதுகாப்பு நிலைமையில் மோசமான விளைவுகளை உருவாக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், இந்தியா, மாநாட்டில் பங்கேற்பது சிறீலங்கா அரசின் அத்துமீறல்களை அங்கீகரிப்பதாகிவிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, இந்தியா, மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், சிறீலங்கா அரசுக்கு துணிச்சலை ஏற்படுத்துவதுடன், இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினை தமிழக மக்களிடையே மேலும் கொந்தளிப்பை உண்டாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அழுத்தங்கள் காரணமாக பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இந்தியா இன்னமும் திரிசங்கு நிலையிலேயே உள்ளது. போவேனா, மாட்டேனா என்பதை வெளிப்படையாக அறிவித்து, உறுதியான முடிவை எடுக்க முடியாது மன்மோகன் சிங் திணறுகின்றார். அதனால், மன்மோகன் சிங் இம்மாநாட்டில் கலந்து கொள்வது சந்தேகமே என இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.

கனடா புறக்கணித்துவிட்ட நிலையில், அயலில் உள்ள இந்தியாவும் கலந்துகொள்ளாதுபோனால் அது சிறீலங்காவிற்கு பெரும் பாதிப்பாகவே அமையும். எனவே, இந்தியாவை இழுத்துவருவதற்கு மகிந்த அரசு பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றது. ஏற்கனவே இதற்காக சம்பூரைத் தரைவார்த்துவிட்ட பிறகும் மேலும் விட்டுக்கொடுப்புக்களை செய்வதற்கு மகிந்த அரசு தயாராகவே இருக்கின்றது. ஆனால், இந்தியா இறங்கிவருமா இல்லையா என்பது மாநாட்டின் இறுதி நேரமே தெரியவரும்.

இதேவேளை, அவுஸ்திரேலியா மட்டும்தான் சிறீலங்காவின் மனித உரிமைகள் குறித்து வாய்திறக்க மறுப்பதுடன், மாநாட்டிற்கு செல்லப்போவதாக தொடர்ந்து கூறிவருகின்றது. தனது நாட்டுக்குப் படையெடுத்து வரும் இலங்கை அகதிகளைக் கட்டுப்படுத்த முடியாது மூச்சுத்திணறும் அவுஸ்திரேலியா, சிறீலங்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டினால் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு நியாயபூர்வமான காரணங்களை அடுக்கமுடியாது.

எனவே, மகிந்தவை மனித உரிமைவாதியாக காண்பிக்கவேண்டியது தேவை அதற்குள்ளது. இல்லாதுபோனால் மேற்குலகம் எடுக்கும் முடிவையே அவுஸ்திரேலியாவும் எடுத்திருக்கும். இதேவேளை, பொதுநலவாய அமைப்பிற்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவதற்கும், குறைப்பதற்கும் கனடாவும், பிரித்தானியாவும் முடிவு செய்திருக்கின்றன. பொதுநலவாயத்துக்கு நிதியுதவி வழங்கும் நாடுகளில் முதலாவது இடத்தில் பிரித்தானியாவும், இரண்டாவது இடத்தில் கனடாவும் இருக்கின்றன. இந்த இரு நாடுகளும் எடுத்துள்ள முடிவு பொதுநலவாய அமையத்தின் எதிர்கால நடவடிக்கைகளில் பாரிய தாக்கம் செலுத்தும். ஏற்கனவே, பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறும் சிறீலங்கா, பொதுநலவாய மாநாட்டிற்காக பல நூறு மில்லியன் டொலர்களை செலவழித்து வருகின்றது. ஆனால், அவை மீளமுடியாத கடனையே சிறீலங்காவிற்கு ஏற்படுத்தும் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

‘குருவி தலையில் பனங்காயை வைத்ததுபோல்’, மகிந்த தலையில் பொதுநலவாய மாநாட்டின் சுமையை ஏற்றியுள்ளார்கள். பொதுநலவாய மாநாடு நடைபெறு முன்னரே சிறீலங்கா மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.தே.க., மாநாடு முடிந்த பின்னர் சிறீலங்காவின் நிலை இன்னமும் மோசமாகும் என்று எச்சரித்துள்ளது கவனிக்கத்தக்கது. 

இதேவேளை, ‘பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகள், சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. ‘பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை சிறீலங்காவிற்கு வழங்கக் கூடாது’ என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு கடும் எதிர்ப்புக்களுடனும், செலவுகளுடனும் மாநாட்டை நடத்தி மகிந்த எதனைச் சாதிக்கப்போகின்றார்..? பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்கான கதையாக, பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தி சாதனை படைத்துவிடலாம் என்று எதிர்பார்த்த மகிந்தவிற்கு இப்போது சங்கடமே உருவாகிவருகின்றது. இதிலிருந்து மீள பொதுநலவாயத்தில் உள்ள சிறிய நாடுகளே சிறீலங்காவைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவர்களாக இருக்கின்றனர்.

ஆசிரியர் தலையங்கம்

நன்றி: ஈழமுரசு

"பொதுநலவாய மாநாடு சிறீலங்காவில் நடப்பது மகிந்தவிற்கு சாதனையா"?

 

அது கதிர்காமரின் சாதனை. அதை சிங்கள இராஜதந்திரமாக சில குழம்பிப்போன தலைகள் சிந்திக்கின்ற்ன. உலகத்திறமைமை வாய்ந்த தமிழனை ஒரு கோப்பை தேனீருடன் வாங்கலாம், அவனை தமிழனுக்கு எதிரியாக்கலாம் என்ற ஈனத்தனம் நம்மில் இருப்பதே உணமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.