Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த களத்தை ஆட்டிப்படைக்கும் மல்ரி பரல்கள்!

Featured Replies

முறியடிப்பு சமர், தற்காப்பு போரென விடுதலைப்புலிகளும் அரச முப்படைகளும் யாழ். குடாநாட்டில் புதியதோர் போர் முனையை திறந்துள்ளதால் இதுவரைக்கும் 300 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள அதேவேளை, பொது மக்கள் தரப்பிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.

ஆட்லறிகள், பல்குழல் பீரங்கிகள் (மல்ரிபரல்) மோட்டார்கள், கிபீர் விமானங்கள், எம்.ஐ. 24 சண்டை ஹெலிகள், கடற்படைப் படகுகளென இருதரப்பும் மூர்க்கமாக மோதுவதால் கடந்த ஒரு வாரமாக குடாநாடு குலுங்கிக் கொண்டிருக்கின்றது. முகமாலை முன்னரங்கப் பகுதியில் வெடித்த மோதல், நாகர் கோவில், கிளாலி, மண்டைதீவு, அல்லைப்பிட்டி, ஊர்காவற்றுறையென பரவி இறுதியில் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி முப்படைத்தளம் வரைக்கும் சென்றுள்ளது.

புலிகளிடமிருந்து தாம் தற்காப்பு போர் நடத்துவதாக கூறும் படைத்தரப்பு கடந்த ஒருவாரகால சமரில் புலிகள் தரப்பில் 650 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தமது தரப்பில் 106 படையினர் பலியானதாகவும் அறிவித்துள்ள அதேநேரம், இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை தடுக்கும் தமது முறியடிப்புச் சமரில் இதுவரை 300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தமது தரப்பில் 60 போராளிகள் உயிரிழந்துள்ளதாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.

இருதரப்பும் இவ்வாறு கூறிக் கொண்டிருக்க, பொது மக்கள் தரப்பில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கி தாக்குதல்களினாலேயே மக்கள் பேரழிவை சந்தித்துள்ளனர். அல்லைப்பிட்டி தேவாலயம் மீது நடத்தப்பட்ட பல்குழல் பீரங்கித் தாக்குதலில் மட்டும் சிறுவர்கள், பெண்கள் உட்பட 50 இற்கு மேற்பட்டோர் உடல் சிதறிப் பலியானார்கள். இதுதவிர இராணுவத்தால் ஆங்காங்கே வைத்து பல இளைஞர், யுவதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

...

.....

அதேவேளை, தாக்குதல் இடம்பெறும் பகுதிகளிலுள்ள மக்களை வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போதும் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து மக்களின் வெளியேற்றத்தை தடைசெய்துள்ள படையினர் பொதுமக்களை கேடயமாகவே பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன், பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இளைஞர், யுவதிகளை கைது செய்யும் இராணுவத்தினர் அவர்களை பொலிஸாரிடமோ, நீதிமன்றிலோ ஒப்படைக்காது மோதல்கள் இடம்பெற்று வரும் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களில் தடுத்துவைத்துள்ளனர்.இவ்வாறே கடந்த வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியை சுற்றிவளைத்து 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை சாவகச்சேரி இந்துக்கல்லூரி மைதானத்திற்கு அழைத்து சென்ற இராணுவத்தினர் அவர்களை தலையாட்டிகள் முன் நிறுத்தி யுவதிகள் உட்பட 16 பேரை கைது செய்து வரணியிலுள்ள இராணுவ முகாமொன்றில் தடுத்து வைத்துள்ளனர்.குடாநாட்டு போர்முனை புலிகளுக்கு சாதகமாகவே அமைந்துள்ளபோதும் புலிகள் போர்முனை செய்திகளை வெளியிடுவதில் ஒருவித இறுக்கமான போக்கை கடைப்பிடிக்கின்றனர். தோல்விகளையே பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் புலிகள் வெற்றிகளை வெளியிடக் காட்டும் இறுக்கமான போக்கு பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, இராணுவ உயர்மட்டத்தில் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, புலிகள் போர்முனை செய்திகளை வெளியிட கடைப்பிடிக்கும் இறுக்கமான போக்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரச தரப்பினர் மகா பொய்ப்பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமது பிரசார கூட்டங்களில் இராணுவத்தினரின் வீர பிரதாபங்களென பொய்க் கதைகளை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் யாழ். குடாநாட்டு போர்முனை தினமும் புலிகளுக்கு சாதகமாகவே மாறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், குடாநாட்டிலுள்ள படைகளுக்கு போர் முகத்தின் உண்மைத் தன்மை தெரிந்ததாலேயே பொது மக்களை கேடயமாக்கியுள்ளதுடன் குடாநாட்டு இராணுவத்தின் விநியோக பாதைகளை துண்டித்துவரும் புலிகளின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டதால் அரச தலைமைக்கு குடாநாட்டு நிலை தொடர்பில் அழுத்தங்களை கொடுத்தும் வருகின்றனர். இதனாலேயே இந்தியாவிடம் இலங்கையரசு சில தினங்களுக்கு முன்னர் கடற்படையின் உதவியை கோரியது. இவ்வாறான நிலையில் குடாநாட்டின் போர் நிலைமை இன்னும் உக்கிரமானால் படையினரால் தமிழ் மக்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாத நிலையே ஏற்படும்.

http://www.thinakkural.com/news/2006/8/20/...es_page8937.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.