Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் சோகம் நிறைந்த தீபாவளி - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சோகம் நிறைந்த தீபாவளி - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
02 நவம்பர் 2013


இறுதி யுத்தம் நடந்த வடபகுதியில் தீபாவளி தினம் சோக முகத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களின் முன்னர் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இசைப்பிரியா தொடர்பான வீடியோ வடக்கு மக்கள் மத்தியில் தீபாவளி தினமான இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் பலரும் குறித்த வீடியோக் காட்சியை கண்டு கதி கலங்கிப் போயுள்ளனர். வடக்கில் பட்டாசு கொளுத்தும் வெடிச்சத்தங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. புதிய ஆடை வாங்க முண்டியடிக்கும் மக்களை வடக்கு நகரங்களில் காணவும் கிடைக்கவில்லை.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் திரைப்படங்களில் நடித்தவருமான இசைப்பிரியா வன்னி மக்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். இவர் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட வீடியோ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால் காணாமல் போனவர்களின் வீடுகளில் அழுகையும் சோகமும் அதிகரித்துள்ளது. இறுதி யுத்தகளத்தில் தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்று அவர்கள் கொந்தளிக்கின்றனர். இன்றைய நாள் காணாமல் போன தமது பிள்ளைகளின் நினைவுகளை கிளறியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98429/language/ta-IN/article.aspx

உண்மை அண்ணா இந்தக்காட்சியை காணும் எந்த இளைஞ்சனுக்கும் ................கோபத்தையும் ,சீற்றத்தையுமே தரும் ............................மீண்டும் ஒருதடவை இரும்பல்ல இளைஞ்சர் உள்ளம் என்னும் வரலாற்றை புதுப்பிக்க வேண்டிய தேவையை இங்கே அப்பட்டமாய் சொல்லி நிற்கிறது ..........................உலகம் எமக்கு எதுவும் செய்யாது ........................இந்த கொடூர காட்சிகளை ,மிருகபண்புகளுக்கும் அப்பாற்பட்ட காட்சிகளை ஆவணப்படுத்திய இந்த உலகம் இன்றுவரை அதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் தமக்கு விரும்பிய நேரங்களில் திரைப்படம்[போல பிரசுரிக்கும் ஓர் நிலையில் .....................நாம் ஆயுதம் என்திப்போராடினால் மட்டுமே தனித்தன்மையுடன் மீண்டும் எழமுடியும் என்ற அப்பட்டமான உண்மையை சொல்லி நிற்கும் தருணங்கள் இவை ..............................................உலகம் இருண்டவனின் கையில் தற்போது உள்ளது [பைபிள்] 

இன்று கனடாவில்....

 

வரிசை வரிசையாக தியேட்டருக்கு முன்னால் அணி வகுத்து நிற்கும் இளையோர்கள் (வங்கிக்கி போகும் போது வூட் சைட் திரையரங்கின் முன் கண்டது..)

வினாடிக்கு வினாடி தீபாவளி வாழ்த்துச் சொல்லும் FM அலைவரிசைகள்..அதில் தங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கும் வாழ்த்து சொல்லும் தமிழர்கள்

இனிப்பு வழங்கும் தமிழ் கடைகள்

தொலைபேசியில் வாழ்த்துச் சொல்ல முண்டியடிக்கும் உறவுகள்

தீபாவளிக்காக ஸ்பெசல் உணவு என்று விளம்பரம் போடும் தமிழ் ஹோட்டல்கள், அதில் வரிசையாக வாடிக்கையாளர்கள்

 

எங்கள் தமிழ் உளவியலை புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னைத் தோற்கடித்த ஒரு நிகழ்வை தன் இன அடையாளமாக வரித்துக் கொண்டு கொண்டாடும் இந்த உளவியல் எத்துணை ஆபத்தானது என்று இவர்களுக்கு புரியவில்லை. நாங்கள் தோற்றதற்கான காரணமாக அமைந்தது இந்த உளவியல் தான். இந்த உளவியலை உடைத்து கொண்டு வெளியேறாத வரைக்கும் நாம் எக்காலத்திலும் வெல்லப் போவதில்லை.

 

 

இன்று கனடாவில்....

 

வரிசை வரிசையாக தியேட்டருக்கு முன்னால் அணி வகுத்து நிற்கும் இளையோர்கள் (வங்கிக்கி போகும் போது வூட் சைட் திரையரங்கின் முன் கண்டது..)

வினாடிக்கு வினாடி தீபாவளி வாழ்த்துச் சொல்லும் FM அலைவரிசைகள்..அதில் தங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கும் வாழ்த்து சொல்லும் தமிழர்கள்

இனிப்பு வழங்கும் தமிழ் கடைகள்

தொலைபேசியில் வாழ்த்துச் சொல்ல முண்டியடிக்கும் உறவுகள்

தீபாவளிக்காக ஸ்பெசல் உணவு என்று விளம்பரம் போடும் தமிழ் ஹோட்டல்கள், அதில் வரிசையாக வாடிக்கையாளர்கள்

 

எங்கள் தமிழ் உளவியலை புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னைத் தோற்கடித்த ஒரு நிகழ்வை தன் இன அடையாளமாக வரித்துக் கொண்டு கொண்டாடும் இந்த உளவியல் எத்துணை ஆபத்தானது என்று இவர்களுக்கு புரியவில்லை. நாங்கள் தோற்றதற்கான காரணமாக அமைந்தது இந்த உளவியல் தான். இந்த உளவியலை உடைத்து கொண்டு வெளியேறாத வரைக்கும் நாம் எக்காலத்திலும் வெல்லப் போவதில்லை.

உண்மை சகோதரா ................அந்த உளவியல் என்பது எமது கலாச்சாரத்தை ,எமது நல்ல பண்புகளை ,மனிதநேயத்தை வைத்து  இந்த தீய சக்திகள்; எமக்கு வைக்கும் ஓர் ஆப்புதான் உந்த உளவியல் ..................உங்கள் கருத்தில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ....................மனித நேயம் என்னும் சொல்லிற்கு உதாரணமாக திகழும் எம் இனத்திற்கு இவ்வளவு சாபக்கேடு .தவிக்கமுடியாது ...............நான் படித்த பைபிளில் இதுதான் யதார்த்தம் ........உலக ஆட்சி இருண்டவனின் [சாத்தானின்] கையில் தற்போது உள்ளது .................................இது மாறும் ,மாற்றம்பெறும் ..................அதற்கான அத்திவாரமே தமிழீழ விடுதலைப்புலிகள்  என்னும் அமைப்பு .........அத்திவாரம் போட்டாச்சு ...கட்டிடம் உயர எழும்பும் ..நம்பிக்கையே வாழ்க்கை .

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.