Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை: ராமதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை: ராமதாஸ்

 

ramadas-450x279.jpg

இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என்று கூறியிருகிறார் பாமக நிறுவுனர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

 

விடுதலைப்புலிகள் இயக்கத் தொலைக்காட்சியின்செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்த காணொலி காட்சியை  சேனல்-4 தொலைக்காட்சிவெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சத்தை பிளக்கும் வகையிலும், இதயத்தை உலுக்கும் வகையிலும் உள்ளன.

 

சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொலியில், சகதி நிறைந்த குளத்தில் கிடக்கும்  இசைப்பிரியாவை சிங்களப் படையினர் அழைத்து வருகின்றனர். அவர் மீது ஒரு வீரர் வெள்ளைத் துணியை போர்த்துகிறார். அப்போது, அவர் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் என்று சில வீரர்கள் கூற, அதை இசைப்பிரியா மறுக்கிறார். அடுத்த காட்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் பள்ளம் ஒன்றில் அவர் உயிரிழந்து கிடக்கிறார். இசைப்பிரியா உயிரிழந்து கிடக்கும் புகைப்படம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியானது. அப்போது சிங்களப் படையினரால் இசைப்பிரியா சீரழித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாற்று எழுந்தபோது, அதை மறுத்த இலங்கை அரசு, போரின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்திருந்தது.

 

ஆனால், இப்போது வெளியாகியுள்ள காணொலி காட்சிகளைப் பார்க்கும்போது இசைப்பிரியாவை சிங்களப் படையினர் பிடித்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாக்கிய பிறகு படுகொலை செய்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது. அதுமட்டுமின்றி, சில ஆண்டுகளுக்கு முன் இசைப்பிரியா இறந்து கிடக்கும் படம் வெளியான போது, அதில் இருப்பவர் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று கூறப்பட்டது. அதையும், இப்போதுள்ள காணொலியில் இசைப்பிரியாவை பிரபாகரனின் மகள் என்று சிங்கள வீரர்கள் சிலர் கூறுவதையும் பார்க்கும்போது, பிரபாகரனின் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் இராஜபக்சே அரசு செயல்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சேனல்&4 தொலைக்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட படங்கள் இதை உறுதி செய்கின்றன. இலங்கையில் நடந்தது போன்ற கொடுமைகள் உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை. இவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்பதற்கும், அங்கு போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் நடத்தப்பட்டன என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கைப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்களப்படை கொன்றது என்பதை ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்அமைத்த மார்சுகி தருஸ்மென் குழு உறுதி செய்துள்ளது. டப்ளின் நகரில் அமைக்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயமும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று தீர்ப்பளித்துள்ளது.

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்து நேற்று கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்,‘‘ இது மிகவும் கொடூரமானது. மனித உரிமையை மீறிய செயல். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை பல நாடுகள் கண்டித்த பிறகும், அது தனது தவறுகளை திருத்திக் கொள்ளாமல்  தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறது’’ என்று கூறியுள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் இலங்கை மீது நேரடியாகவோ அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மூலமாகவோ நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்குவது ஏன்? என்பது தான் எனது கேள்வியாகும்.

அரசியலிலும், பொருளாதாரத்திலும் இப்போதிருக்கும் அளவுக்கு வலிமை பெறுவதற்கு முன்பாகவே உலகில் எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா தான் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. ஆனால், இப்போது இலங்கையில் நடந்த   கொடுமைகளை கண்டிக்கவும், தண்டிக்கவும் இந்தியா முன்வராதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

எனவே, இனியும் தாமதிக்காமல் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இரத்து செய்யவும், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தவும் முன்முயற்சி எடுக்க வேண்டும். இதற்கானத் தீர்மானத்தை ஜெனிவாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணையத்தின் 25 ஆவது கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

http://tamil24news.com/news/archives/113806

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.