Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசைப்பிரியாவின் காணொலி இராணுவச் சிப்பாயே தந்தார்; சனல் - 4 இயக்குநர் கலம் மக்ரே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற காணொலியை இலங்கை இராணுவ சிப்பாய்  ஒருவரே தனக்குத் தந்தார் என சனல் - 4 இயக்குநர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். 
இந்தக் காட்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு பார்த்திருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படும் காணொலியை சனல் - 4 ஊடகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.  இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளையும் கடந்த வருடம் சனல் - 4 ஊடகமே வெளியிட்டிருந்தது.
 
இந்தக் காட்சிகள் மற்றும் இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் இரு ஆவணப் படங்களை தயாரித்து வெளியிட்ட கலம் மக்ரேக்கு இந்தியா செல்வதற்காக நுழைவிசைவு (விஸா)  மறுக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில்  இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார் கலம் மக்ரே. இதன் போது இசைப்பிரியாவின் காணொலி போலியானது என்றும் அது நாடகம் என்றும் இலங்கை அரசு மறுத்திருப்பது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்குப் பதிலளித்த அவர் 'எல்லாவற்றையும் எடுத்த எடுப்பிலேயே மறுக்கும் போக்கை இலங்கை அரசு கைவிட வேண்டும். இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.  இந்த  காணொலிகளை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் தனது நாட்டு அரசிடம் கொடுக்காமல் எங்களிடம் கொடுத்திருக்கிறார்.
 
இது இலங்கை அரசு இந்தக் காட்சிகளை ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எல்லா காணொளிகளையும் பார்த்த பின்னர் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டதாகவே தோன்றுகின்றது. இது உண்மையில் சிக்கலான பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98593/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள சிப்பாய்களிடம் பணத்தை கொடுத்தால் மேலும் ஆதாரங்களை பெறலாம். என்றாலும் சர்வதேச விசாரணைக்கான செயல்கள் ஆமை வேகத்திலேயே நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஜே.வி.பியின் ஸ்தாப தலைவர் ரோஹன விஜேவீர ஆகியோர் சிறந்த தலைமைத்துவ குணாதிசயங்களை கொண்டவர்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வேறுப்பட்டவர்கள். உண்மையில் இவர்கள் இருவரையும் ஒருவரோடு ஒருவர் ஒப்பிட முடியாது.
முதலில் விஜேவீர 1971 ஆம் ஆண்டுகளில் செயற்பட்டது போன்று 87,88,89 ஆம் ஆண்டுகளில் செயற்படவில்லை. ஜே.வி.பியினர் இந்த காலப் பகுதியில் பிரபாகரனின் செயல் முறைகளையே பின்பற்றினர்.

இவர்கள் இருவரும் இரண்டு நோக்கங்களுக்காக செயற்பட்டனர். அது பற்றி எந்த தர்க்கங்களும் இல்லை.

பிரபாகரன் இனவாத்திற்காக குரல் கொடுத்தார். இனவாதமே இலகுவாக மக்களிடம் சென்றடைய கூடிய வழிமுறையாகும்.

இனவாதத்தின் மூலம் மக்களை வென்றெடுக்க முடியும். பிரபாகரன் மக்களை வென்றெடுத்தார்.

எனினும் விஜேவீர முதலாளித்துவத்திற்கு எதிராக வகுப்பு நிலை தொடர்பில் செயற்பட்டார். அவரால் அதனை நோக்கி செல்ல முடியாது போனது.

சமவுடமை, மாக்ஸிம், கம்யூனிசம் போன்றவற்றை விட இனவாதம் வலுவானது. இவர்கள் இருவரில் பிரபாகரன் இனவாதி. இவர்கள் இருவருக்கும் இருக்கும் பொதுவான அடையாளம் இருப்பு.

சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்துவது இவர்கள் ஏற்படுத்திய அமைப்புகளின் பொதுவான வழிமுறையாக இருந்தது. அச்சம் என்ற காரணத்தை அடிப்படையாக கொண்டே இந்த இரண்டு அமைப்புகளும் செயற்பட்டன.

பிரபாகரனின் அச்சுறுத்தல் என்ற செயற்பாட்டையே விஜேவீர 87,88,89 ஆம் ஆண்டுகளில் கடைபிடித்தார். இதுவே இந்த இரண்டு அமைப்புகளினதும் பிரதான நடைமுறையாக இருந்தது.

விஜேவீர ஏற்படுத்திய அடிப்படையில் அவர்கள் இன்றும் ஒரு அரசியல் கட்சியாக உள்ளனர். விஜேவீரவிடம் சிறந்த தலைமைத்துவ குணாதிசயம் இருந்தது. அவர் ஒரு திறமைசாலி.

பிரபாகரன் , துரையப்பாவை கொலை செய்து சிறிதாக தனது அமைப்பை ஆரம்பித்த காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அந்த காலத்தில் பிரபாகரனுக்கு பெரிய ஆதரவு இருக்கவில்லை. அறிவும் இருக்கவில்லை. நோக்கம் இருக்கவில்லை.

நாமே அவருக்கான அடிப்படையை ஏற்படுத்தி கொடுத்தோம் . 83 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம், ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் என்பன காரணமாக தமிழ் மக்கள் பிரபாகரனிடம் நெருங்கி சென்றனர். அத்துடன் இந்தியாவும் கூடியளவில் உதவியது.

அன்று மற்றுமொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு இந்தியாவே பயற்சி வழங்கியது. அது பற்றி அன்று உலக நாடுகளோ, மனித உரிமை அமைப்புகளோ பேசவில்லை.

அன்று 10 போருடன் பிரபாகரன் ஆரம்பித்த அமைப்பு, பிற்காலத்தில் பாரிய இராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளை கொண்ட வலுவான அமைப்பாக ஒரு பிரதேசத்தை கைப்பற்றி வைத்திருந்தது.

அது மாத்திரமல்ல உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆயுதங்களை கொண்டு வந்து அவற்றை கொண்டு இலங்கையிலேயே பயிற்சிகளை பெற்று செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

இது இலகுவான காரியமல்ல. ஒரு நாட்டின் பாரிய இராணுவம் ஒன்றுக்கு சாவலை ஏற்படுத்தி, கட்டமைப்பு ஒன்றை கட்டியெழுப்பும் வல்லமை திறமையாளருக்கே இருக்கும். சாதாரணமான ஒருவருக்கு அப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது.

இதனால் விஜேவீரவை போன்ற சிறந்த தலைமைத்துவ குணாதிசயங்களை நான் பிரபாகரனிடமும் காண்கிறேன். அதேபோல் பிரபாகரன் ஒரு திறமைசாலி என்றார்.

 

http://news.tamilstar.com/archives/52826#more

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.