Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாருங்கள் - வரவேண்டாம் - செல்லுங்கள் - செல்ல வேண்டாம்:- செல்வோம் - செல்ல மாட்டோம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாநாட்டை புறக்கணித்தால் பிரச்சினைகளை யாரிடம் பேசுவது: ஞானதேசிகன்:-

இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணித்தால், இலங்கைத் தமிழர்கள் மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்து யாரிடம் பேசுவது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் குறிப்பிடுகையில்,

இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என பல்வேறு கட்சிகளும் தமிழக அமைப்புகளும் போராடி வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. உயர்மட்டக் குழுவைக் கூட்டி, விவாதித்து மத்திய அரசு முடிவெடிக்கும். தமிழக மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்கும்.

பொதுநலவாய மாநாடு போன்ற எந்த பிரச்சினைகளை முன்னிறுத்தினாலும், காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியாது. இலங்கை பிரச்சினைகளுக்கும், தமிழகத்திலுள்ள கட்சி அரசியலுக்கும், பொதுத் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இசைப்பிரியா கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

ஏற்காடு தேர்தலில் ஆதரவு கேட்டு, தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் மேலிடம் முடிவை அறிவிக்கும் என்று தி.மு.க தலைவருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

பொதுநலவாய மாநாடு குறித்து பா.ஜ.கவின் பல்வேறு மட்டத்திலுள்ள தலைவர்கள் வெங்கையா நாயுடு, முரளிதர் ராவ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். பா.ஜ.கவை பொறுத்தவரை, இதில் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது என்று ஞானதேசிகன் தெரிவித்தார்.

மன்மோகன் மாநாட்டில் பங்கேற்கா விட்டால் இலங்கை தமிழர்களுக்கு என்ன நன்மை?

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் பங்கேற்க செய்வதே நல்லது என எம்.பி.கண்ணன் கூறியுள்ளார்.

புதுச்சேரி ராஜ்யசபா உறுப்பினர் ப.கண்ணன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது,

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்பது என்று முடிவு எடுத்தால் அதில் பிரதமர் பங்கேற்க செய்வதே நல்லது.

தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுக்கு மதிப்பு அளித்து முடிவு எடுக்க வேண்டும். பிரதமர் பங்கேற்கவில்லை என்றால் இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு எப்படி குரல் கொடுக்க முடியும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களர்களுக்கு இணையான சம உரிமையுடன், வாழ வேண்டும் என்பதுதான் சீமான், கோமான் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கை.

இலங்கை வடக்கு மாகாணத்தில் ஏகோபித்த தமிழர்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட விக்னேஸ்வரன் இலங்கைக்கு இந்தியா வரக்கூடாது என்றால் இந்தியா பங்கேற்கக் கூடாது.

வரவேண்டும் என்றால் பங்கேற்க வேண்டும். இங்கிருந்து கொண்டு இலங்கை தமிழர்களுக்கு குரல் மட்டும் கொடுப்பதால் அங்குள்ள தமிழர்களின் வாழ்வு சிறப்படையாது.

இலங்கை பிரச்சனையை தீர்த்து வைப்பதே நமது நோக்கம், இலங்கை தமிழர்களை கை கழுவி விடுவது நமது நோக்கம் அல்ல. பிரதமர் பங்கேற்கவில்லை என்றால் இலங்கை தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று கூறினால் இப்போதே நான் பிரதமரை பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்துவேன்' என்றார்.

 

இந்தியாவினால் இலங்கையை தனிமைப்படுத்த முடியும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
06 நவம்பர் 2013
lg-share-en.gif

 

Thol_CI.jpg

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிப்பதன் மூலம் இந்தியாவினால், இலங்கையை தனிமைப்படுத்த முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை வழங்கக் கூடாது என நட்பு நாடுகளிடம் இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமைப்பின் தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டால்; அதன் பின்னர், யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் நடாத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

அமர்வுகளை புறக்கணித்தால் இலங்கையுடனான இரு தரப்பு உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என சிலர் அளவுக்கு அதிகமான வகையிலான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும் இரு தரப்பு உறவு என்ற விவகாரத்தில் சிக்கல் நிலவியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இசைப்பிரியா – காமன்வெல்த் - காங்கிரஸ் - மன்மோகன் சிங் - தொடரும் இழுபறி -
04 நவம்பர் 2013
lg-share-en.gif

 

jayanthi_CI.jpg

மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று ஜெயந்தி நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதனால், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு தொடர்பாக முடிவெடுப்பதில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இன்று (04.11.13) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், 'காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவு எடுப்பார். அவர் கலந்துகொள்ளக் கூடாது என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். அதைக் கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன். தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார். அத்துடன், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளேன்' என்றார்.

இசைப்பிரியா படுகொலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 'இசைப்பிரியா தொடர்பான ஆவணப் படத்தை ஊடகங்கள் மூலமும் பத்திரிகை மூலமும் அறிந்துகொண்டேன். அந்தக் காட்சிகளைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு பயங்கரமாக உள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறேன்' என ஜெயந்தி நடராஜன் கூறினார்.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள், தமிழகத்தில் மேலும் வலுவடையத் தொடங்கியுள்ளது.

பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரில் வலியுறுத்தினார். இதேபோல், தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறிவருவதும் கவனத்துக்குரியது.

 

இறுதிப்போரில் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும் - வி.நாராயணசாமி

இறுதிப்போரில் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இப்படியான நிகழ்வுகள் நடக்கவில்லை என இலங்கை மறைக்க முடியாது என இந்தியப் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி நேற்று (03.11.13) வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு இது தொடர்பான சனல் - 4  வீடியோ வலிமையான ஆதாரமாகும். இத்தகைய கொடூரங்களைப் புரிந்தவர்கள் மீது இலங்கை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதான இறுதி முடிவை இந்தியப் பிரதமர் எடுப்பார்.

இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்படுவதை காண்பிக்கும் வகையிலான வீடியோவை சனல்-4  தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் கொடூரமானவையாக இருந்தன. எந்தச் சமூகமும் இதை ஏற்றுக்கொள்ளாது.

மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்று இலங்கை அரசு தொடர்ச்சியாக கூறிவருகின்றது. ஆனால், அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு இசைப்பிரியா பற்றிய வீடியோ வலிமையான ஆதாரமாகும்.

இசைப்பிரியா தமிழர் என்பது ஒரு புறமிருக்கட்டும், ஒரு பெண்ணை இவ்வாறு நிர்வாணமாக்கி கொலை செய்வது மன்னிக்க முடியாத மனித விரோத நடவடிக்கையாகும், குற்றமாகும். இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது இலங்கை அரசு விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடு தொடர்பில் இந்திய மத்திய அரசு இன்னும் எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை. மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் மத்தியக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று வெளியான செய்திகள் தவறானவையாகும்.

கொழும்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கலைஞர் கருணாநிதியும் மாநாட்டுக்கு போக வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு புறம்பாக தமிழக காங்கிரஸ் தலைவரும் பிரதமரிடம் இதை வலியுறுத்தியுள்ளார்.

"மத்திய அமைச்சர்களான சிதம்பரம், வாசன் ஆகியோரும், நானும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முடிவெடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்."

பொதுநலவாய நடைபெறுவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. எனவே, மத்திய அரசு பிரதமரின் பங்குபற்றல் தொடர்பில் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.

அது இன்னும் பரிசீலனை மட்டத்திலேயே இருக்கின்றது. எது எப்படியிருந்த போதிலும், தமிழகத்தினதும் இலங்கைத் தமிழர்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே பிரதமர் மன்மோகன் சிங்கின் முடிவு அமையும் என்றார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98683/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.