Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியக் குழு யாழ்ப்பாணம் செல்வது குறித்து முடிவில்லை:- வெளியுறவு அமைச்சர் குர்ஷித்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பு: சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்!

 

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அக்பருதீன் மேலும் தெரிவிக்கையில்,

பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கும். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார். யாழ்ப்பாணத்துக்கு இந்திய குழு செல்வது பற்றியும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார்:- இணைப்பு 2

இலங்கையில் வருகிற 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும், மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது.

 

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மத்திய உயர்நிலைக்குழுவும் பிரதமர் மன்மோகன் சிங், இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் எனவும், எனினும், இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இலங்கை அரசிடம் இதுவரை அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டெல்லி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98705/language/ta-IN/article.aspx

புதுடெல்லி: தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச நடத்தும் அந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

காமன்வெல்த் அமைப்பில் உள்ள 53 உறுப்பு நாடுகளில் இந்தியா முக்கிய அங்கம் வகிக்கும் நாடு என்பதால் கொழும்பு மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை கூறியது. இதையடுத்து மன்மோகன் சிங்கின் கொழும்பு பயணத்துக்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் செய்து வந்தது.

இந்நிலையில் தமிழக மக்களின் மன உணர்வுக்கு எதிராக செயல்படக் கூடாது. எனவே இலங்கைப் பயணத்தை மன்மோகன் சிங் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கூறினர். இதையடுத்து மத்திய அமைச்சரவை சபை கூடி இதுபற்றி விவாதித்தது. அதில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

அதன்பிறகு நடந்த காங்கிரஸ் உயர் மட்டக்குழு கூட்டத்திலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களால் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்வதா? வேண்டாமா? என்பதில் பிரதமருக்கு குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே இலங்கைக்கு பிரதமர் செல்லக்கூடாது என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்தது. கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. வரும் 12ஆம் தேதி முழு அடைப்பு நடத்தவும் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

இதனால் பிரதமர் மன்மோகன்சிங் தன் முடிவை உடனடியாக வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனவே முடிவு எடுப்பதற்காக நேற்று காங்கிரஸ் உயர்மட்டக்குழு மீண்டும் கூடி ஆலோசனை நடத்தியது.

சுமார் ஒன்றறை மணி நேரம் நடந்த அந்த கூட்டத்தில் பிரதமர் மன்மேகான்சிங் பங்கேற்க கூடாது என்று மத்திய அமைச்சர்கள் அந்தோணி, ப.சிதம்பரம் இருவரும் வலியுறுத்தினர்.

இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்திலும் முடிவு எட்டப்படாததால் மன்மோகன் சிங்கும், சோனியாவும் தனியாக 10 நிமிடம் பேசினர். அதன்பிறகு பேசிய சோனியா, இந்த விவகாரத்தில் பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றார்.

இதனால் இந்த விவகாரத்தில் நேற்றும் சஸ்பென்ஸ் நீடித்தது. ஆனால் இன்று இந்த விவகாரத்தில் தெளிவான முடிவு தெரியத் தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்லமாட்டார் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் உறுதிப்படுத்தின.

இதற்கிடையே இலங்கையில் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறவில்லை. எனவே காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்ளமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் துணை ஜனாதிபதி அன்சாரியும் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. பிரதமர் புறக்கணிப்பதால், துணை ஜனாதிபதியும் இலங்கை செல்லமாட்டார் என்று கூறப்படுகிறது.

என்றாலும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாக புறக்கணிக்கவில்லை. பிரதமர் சார்பில் அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நமது பிரதிநிதியாக கலந்து கொள்ள உள்ளார் என்றும், அவருடன் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், இணை செயலாளர்கள் நவதேஷ் சர்மா, பவன்குமார் ஆகியோரும் செல்கிறார்கள் என்றும் கூறினார்.

அதேநேரத்தில், மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் அக்பரூதின்.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக முதன் முதலில் கனடா நாடு அறிவித்தது. கனடாவில் கணிசமான அளவுக்கு புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் வசிப்பதால், அவர்கள் மன உணர்வுக்கு மதிப்பு கொடுத்து கனடா பிரதமர் ஸ்டீபன் கார்பெர் கடந்த மாதமே புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக்கும் இடையில் இந்தியா பங்கேற்பது  உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=21171

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.