Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவின் பொருளியலை பலவீனப்படுத்தப்படவேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ மண் மீட்ப்புப் போரில் வீரச்சாவை தழுவிக் கொணட மாவீரர்களுக்கு என் வீரவணக்கம்.

எல்லோரும் அவர்களின் கனவை விரைவாக்க இன் நாளில் முழுவீச்சாக செயல்படவேண்டும்.

- போரியல்(இராணுவம்), அரசியல், பொருளியல்(பொருளாதாரம்), மற்றும் மக்கள் பலப்படுத்தப்படவேண்டும்.

- சிறீலங்காவின் பொருளியலை பலவீனப்படுத்தப்படவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சிறீலங்காவுக்கான ஏற்றுமதி மற்றும் அன்னிய செலவாணியைக் குறைக்க வேண்டும்.

உங்கள் எல்லோரின் ஆக்க பூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

- நன்றி -

நல்லது ஆனால் எம்மால் அந்நியசெலாவணியை தான் முடக்கமுடியும்.அதுவும் மிகவும் கஸ்டம் எனெனின் எங்கல் உறவுகளுக்கு பணம் அனுப்பிதான் ஆக வேண்டும் ஆனால் அதனை குறைக்கலாம்.அதுமட்டும் அல்ல வெளிநாடுகளில் நாம் பாவிக்கும் இலங்கை பொருட்களை விடுத்து அதற்க்கு மற்றீடான் பொருட்களை பாவிக்கலாம் இலங்கை பொருட்களை முழுமையாக புறக்கணீக்கலாம்.அதற்கு எம் சனம் உடன்படாது.எம் சனம் எல்லாம் ஒத்துழைத்தால் எதிலும் வெல்லலாம்.ஏன் யாழ் கள உறவுகளீடமே இதற்கு வரவேற்பு இருக்குமோ தெரியவில்லை

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள தேசத்தின் பொருளாதார வீழ்ச்சியில்தான் ஈழத்தின் விடிவு உண்டு.

என்னதான் நடந்தாலும் கொழும்பை மையமாக வைத்த பொருளாதார உலகம் அவ்வளவு எளிதில் வீழ்ச்சியடையவில்லை. சண்டை உக்கிரமாக நடந்த காலத்தில், கொழும்பில் குண்டுகள் வெடித்த காலத்தில், எதிர்பார்த்த அளவுக்கு சிங்களப் பொருளாதாரம் சரியவில்லை. சுற்றுலாத்துறை மிகப்பெரிய அழிவைச் சந்தித்திருக்க வேண்டும். அனால் நடக்கவில்லை. கட்டுநாயக்கா தாக்குதலின்போது மட்டுமே குறிப்பிட்டளவு வீழ்ச்சியை சிங்களப் பொருளாதாரம் சந்தித்தது. இன்றும்கூட எந்த நாடுமே இலங்கைக்குப் போகாதீர்கள் என்று தமது மக்களை எச்சரிக்கவில்லை. மாறாக வடக்கு - கிழக்குக்குப் போகாதீர்கள் என்றே எச்சரிக்கின்றன.

இப்போது இன்னும் சிக்கலான நிலை. முன்பைப் போல நேரடியாக பொருளாதார இலக்குகளைத் தாக்க முடியாது. அத்தோடு கடந்த நாலரை வருட யுத்தமற்ற காலத்தில் மிகவலுவாக சிங்களப் பொருளதாரம் நிமிர்ந்துள்ளது.

அண்மையில் நடந்த சம்பவங்காற்கூட பெரியளவில் கொழும்புப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. தென்னாபிரிக்க கிரிக்கெற் அணி வெளியேறியது சுற்றுலாத்துறையில் குறிப்பிட்ட வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்த்தால், அதுவும் நடந்த மாதிரித் தெரியவில்லை. அல்லது இனிமேல்தான் அதற்குரிய பலன் தெரியுமோ? இன்றுவரை எந்த வெளிநாட்டுப் பிரஜையும் முன்பதிவு செய்த தமது பயண ஒழுங்குகளை நிறுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில் புலம்பெயர்ந்தவர்கள் தம்மாலான பங்களிப்பை இப்பொருளாதார வீழ்ச்சிக்குச் செய்ய வேண்டும். எந்தெந்த வழிகளில் என்று விவரம் தெரிந்தோர் இங்கே கருத்துக்களைப் பகிரலாம்.

பலவழிகளில் சிறிலங்காப் பொருதார முடக்கத்திற்கு நாங்களும் பங்களிப்பைச் செய்யலாம்.

என் மனதில் பட்டவை சில

1. சிறிலங்கா எயார்லைன்ஸ் விமானங்களைத் தவிர்த்தல்

2. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் ஆடம்பரமான செலவுகளைத் தவிர்த்தல்.

3. சிறிலங்கா வங்கிகளில் பணத்தை முதலிடுவதைத் தவிர்த்தல்

4. விடுமுறையில் செல்லும் காலத்தில் விமான நிலையத்தில் (Duty Free) பொருட்கொள்வனவைத் தவிர்த்தல்

5. புகலிட நாடுகளில் சிறிலங்காவின் சிங்கள உற்பத்திப் பொருட்களைத் தவிர்த்தல்.

6. இலங்கையின் நிலமையினையும் பாதுகாப்பற்ற சுூழலைப் பற்றியும் இங்குள்ளவர்களுடன் அளவளாவி அவாகள் இலங்கைக்குச் சுற்றுலாச் செல்வதைத் தவிர்த்தல்.

இது போலப் பல வழிகளில் எங்களுடைய சிறு பங்களிப்பைச் செய்யலாம்.

பலவழிகளில் சிறிலங்காப் பொருதார முடக்கத்திற்கு நாங்களும் பங்களிப்பைச் செய்யலாம்.

என் மனதில் பட்டவை சில

1. சிறிலங்கா எயார்லைன்ஸ் விமானங்களைத் தவிர்த்தல்

2. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் ஆடம்பரமான செலவுகளைத் தவிர்த்தல்.

3. சிறிலங்கா வங்கிகளில் பணத்தை முதலிடுவதைத் தவிர்த்தல்

4. விடுமுறையில் செல்லும் காலத்தில் விமான நிலையத்தில் (Duty Free)  பொருட்கொள்வனவைத் தவிர்த்தல்

5. புகலிட நாடுகளில் சிறிலங்காவின் சிங்கள உற்பத்திப் பொருட்களைத் தவிர்த்தல்.

6. இலங்கையின் நிலமையினையும் பாதுகாப்பற்ற சுூழலைப் பற்றியும் இங்குள்ளவர்களுடன் அளவளாவி அவாகள் இலங்கைக்குச் சுற்றுலாச் செல்வதைத் தவிர்த்தல்.

இது போலப் பல வழிகளில் எங்களுடைய சிறு பங்களிப்பைச் செய்யலாம்.

அருமை :):D

கனடாவில் சில மாதங்களிற்கு முன்னர் அப்படி ஒரு முயற்சி எடுக்கப் போவதா அறிவித்தார்கள் ஆன என்ன நடந்ததோ தெரியா. இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை பாவிக்காது விடுவது. இது பற்ற கடை உரிமையாளர்களை பாதிக்காத வகையில் அவர்களது இருப்பில் இருக்கும் பொருட்களை விக்கவும் மாற்று இறக்குமதி நாடுகளை வழிகளை தெரிவு செய்யவும் என்று கொஞ்ச காலம் கொடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை அரசின் மனிதஉரிமை மீறல்கள் பற்றி ஆசிய மனித உரமைகள் அமைப்பு ஜநா விடம் முறைப்பாடு செய்திருக்கிறது. இது போன்ற உத்தியோக பூர்வ அறிக்கைகளை ஆதாரமாக வைத்து இலங்கைக்கு உல்லாசப்பயணிகளை அனுப்பும் பாரிய தனியார் நிறுவனங்கள், இலங்கையிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் பாரிய தனியார் நிறுவனங்களை அணுகலாம். அவர்கள் இலங்கையோடு செய்யும் வியாபாரம் இரத்த கறை படிந்தவர்களோடானது பற்றி தெளிவுபடுத்தலாம். தற்போது உள்ள மக்களின் உணர்வலைகளை பயன் படுத்தி இதை அமுல்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் சும் கதைத்துப் போட்டு முன்னர்போல் விடுபட்டுவிடும்.

ம்.. போறபோக்கைப்பார்க்க அரசாங்கம் பொருளாதாரமா பலவீனமாகுதோ இல்லையோ புலம்பெயர் தமிழர் பலவீனமாகிக்கொண்டே போகின்றார்கள்.. என்ன பொருளாதாரத்தால்தான்..

:idea:

ஒருசாராரைத் தவிர..

:P :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும்மொரு வழி இருக்கிறது. சிறீலங்கா கடவுச்சீட்டையே கிழித்தெறிந்து விடலாமே :):D

ம்.. நீங்கலெல்லாம் சுவிஸ் பிரஜாஉரிமை பெற்றாச்சுப்போலை.. சரி சரி.. நடக்கட்டும்.. இதைத்தான் ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்னம் தெரிவித்திருந்தேன்.. நம்ம சனம் காட்டு கிடைச்சா போகாதெண்டு..

:P :D:)

இன்னும்மொரு  வழி இருக்கிறது. சிறீலங்கா கடவுச்சீட்டையே கிழித்தெறிந்து விடலாமே :D :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க யாரைக்கேட்டாலும் தமிழீழம் தான் என் மூச்சு என் பேச்சு என்டுறாங்கள். அதே நேரம் சுவிஸ் புத்தகம் எடுக்கிறதுக்கு அவங்கள் படுகிற பாட்டையும் பாக்கிறம். நாடு கிடச்சா போய்டுவம் என்டுவினம். பிறகு என்னத்துக்க இங்கத்தேல் புத்தகம்?

இங்க யாரைக்கேட்டாலும் தமிழீழம் தான் என் மூச்சு என் பேச்சு என்டுறாங்கள். அதே நேரம் சுவிஸ் புத்தகம் எடுக்கிறதுக்கு அவங்கள் படுகிற பாட்டையும் பாக்கிறம். நாடு கிடச்சா போய்டுவம் என்டுவினம். பிறகு என்னத்துக்க இங்கத்தேல் புத்தகம்?

இலங்கை புத்தகத்தை வேண்டாம் எண்டு எறியுறது தெரிய இல்லையே...??? தமிழீழ புத்தகம் தந்தா சொல்லுங்கோ வாங்க முதல் ஆளாய் வந்து லைனில நிக்கிறன்....! :wink: :P

கொலைகாற சிறிலங்காவின் குடியாய் வாழ்வதில் எங்களுக்கு என்ன பெருமை வேண்டி கிடக்குது...??

நல்ல திட்டம் அப்புமார் இதை யார் நடைமுறைபடுத்திறது ??யாருக்கு நடைமுறைபடுத்திறது?? சும்மா போய் வெளிநாட்டிலை இருக்கிறவை சிறீலங்கா சாமானைகளை புறக்கணிக்கட்டாம் எண்டால் சனம் என்ன சொல்லும் ...... "அவை மாத்திரம் வாய்க்கு ருசியா சாப்பிடுவினம் நாங்கள் தம்பியன் அனுப்பிற காசிலை வாங்கித்திண்டா.....உங்களுக்கு என்னவெண்டு" எங்கடை சனத்தை திருத்திறது வலு கஸ்டம் கண்டியளோ அல்லாட்டி மூதூரிலை அடிபட்டு அகதியா பள்ளிகூடத்திலை வந்திருக்கிற பெடிச்சிமார் மினிக்கிக் கொண்டு வந்து றோட்டிலை நிக்கிகுங்களோ????.......... (முகத்தானும் தேவையில்லாக் கதைகளை கதைச்சுக் கொண்டு...........).

பலவழிகளில் சிறிலங்காப் பொருதார முடக்கத்திற்கு நாங்களும் பங்களிப்பைச் செய்யலாம்.

என் மனதில் பட்டவை சில

1. சிறிலங்கா எயார்லைன்ஸ் விமானங்களைத் தவிர்த்தல்

2. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் ஆடம்பரமான செலவுகளைத் தவிர்த்தல்.

3. சிறிலங்கா வங்கிகளில் பணத்தை முதலிடுவதைத் தவிர்த்தல்

4. விடுமுறையில் செல்லும் காலத்தில் விமான நிலையத்தில் (Duty Free) பொருட்கொள்வனவைத் தவிர்த்தல்

5. புகலிட நாடுகளில் சிறிலங்காவின் சிங்கள உற்பத்திப் பொருட்களைத் தவிர்த்தல்.

6. இலங்கையின் நிலமையினையும் பாதுகாப்பற்ற சுூழலைப் பற்றியும் இங்குள்ளவர்களுடன் அளவளாவி அவாகள் இலங்கைக்குச் சுற்றுலாச் செல்வதைத் தவிர்த்தல்.

இது போலப் பல வழிகளில் எங்களுடைய சிறு பங்களிப்பைச் செய்யலாம்.

மிகவும் சரியான கருத்து. அதோடு இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பெரிய தொகை பணங்களை வைப்பில் இடுவதானால் இலங்கைக்கு வருமானம் குறைவான நம்பிக்கையான வெளிநாட்டு வங்கிகளில் வைப்பில் இட்டால் அது இலங்கைக்கு மோசமான பொருளாதார இழப்பை எற்படுத்தும் என்று நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வழிமொழிகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.