Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவினை ஆளும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இவ்வாரம் பொதுநலவாயத்தின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால் சிறிலங்காவின் ஆளும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். இவர்களில் சிலர் மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலும் இவர்கள் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதற்கு ஒன்றாக இணைந்துள்ளனர். ஆகவே இந்த ராஜபக்சக்கள் யார்?

2005லிருந்து சிறிலங்காவின் அதிபராக ராஜபக்ச உள்ளார். இவர் நாட்டில் வாழும் மக்களின் அரைவாசிப் பேரின் வாக்குகளை மட்டுமே பெற்று நாட்டின் அதிபராகினார். மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தை இவர் நிறைவுக்குக் கொண்டு வந்ததுடன் தமிழ்ப் புலிகளை அழித்ததன் மூலம் பிரபலமடைந்துள்ளார்.

2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச 58 சதவீதமான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து சிறிலங்காவின் நிறைவேற்று அதிபர் மூன்றாம் முறையாகவும் அதிபராகப் பதவியேற்க முடியும் என்கின்ற வரைபு அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டது. இதற்கு சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இவ்வாறான வரைபுகள் சிறிலங்காவில் சர்வதிகார ஆட்சி நிலவுவதற்கு வழிவகுப்பதாக ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவி பிள்ளை உட்பட பலர் சுட்டிக்காட்டினர்.

ராஜபக்ச என்கின்ற குடும்பப் பெயரில் சிறிலங்கா அதிபர் மகிந்த மட்டுமல்ல ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 29 உறுப்பினர்கள் பிரபலமடைந்துள்ளனர். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 29 உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கம், சிவில் சேவை, ஊடகம் மற்றும் தொழிற்துறை போன்றவற்றில் மிக முக்கிய உயர் பதவிகளை வகிப்பதாக 'சமாதானம் மற்றும் நீதிக்கான அமைப்பு' தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் இரண்டு சகோதரர்களான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மிக முக்கிய பதவிகளில் உள்ளனர். இவர்கள் சிறிலங்காவின் பாதீட்டின் 45 சதவீதத்தைக் கட்டுப்படுத்துவதுடன், அரசாங்க அமைச்சுக்களையும் முகாமை செய்கிறார்கள்.

மகிந்தவின் பிறிதொரு சகோதரரான சமல் ராஜபக்ச, சிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகராக உள்ளார். சிறிலங்கா அதிபரின் குடும்பம் மட்டுமல்லாது, மகிந்த பதவிக்கு வந்ததால் இவரது சொந்த இடமான அம்பாந்தோட்டையில் பொதுநலவாய அமைப்பின் இளையோர் அமைப்பின் மாநாடு இடம்பெறவுள்ளது.

10,000 வரையான மக்கள் வாழ்கின்ற மிகச் சிறிய மீன்பிடிக் கிராமமான அம்பாந்தோட்டையில் அனைத்துலக கருத்தரங்கு மையம், 235 ஏக்கர் நிலப்பரப்பில் திரையரங்கம், 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் துறைமுகம் மற்றும் அனைத்துலக துடுப்பாட்ட அரங்கம் உட்பட பல பில்லியன்கள் பெறுமதியான முதலீடு செய்யப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை அபிவிருத்தி செய்யப்படுவதற்கு அரசியல் செல்வாக்கே காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், தென்சிறிலங்காவில் 'ஆசியாவின் நுழைவாயில்' ஒன்றை அமைத்து வருவதாக சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். விடுதிகள், உணவு விடுதிகள், நிர்வாகக் கட்டடங்கள், வங்கிகள் போன்ற பல்வேறு வசதிகள் அம்பாந்தோட்டைக் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மகிந்தவைப் போலவே கோத்தபாய ராஜபக்சவும் பல்வேறு யுத்த மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். மகிந்த ராஜபக்ச 2005ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டார்.

சிறிலங்காவில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர், சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த தமிழ்ப் புலிகளை அழிப்பதற்காக, பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் தமது உயிர்களை இழப்பதற்குக் காரணமாக இருந்த, இறுதிக்கட்ட யுத்தத்தை நடாத்துவதற்கான கட்டளைகள் கோத்தபாயவிடமிருந்தே கிடைக்கப் பெற்றதாக சாட்சியம் வழங்குகின்ற இரண்டு சிறிலங்கா இராணுவ வீரர்களின் வாக்குமூலத்தை சனல் 04 தொலைக்காட்சிச் சேவையானது யூலை 2011ல் வெளியிட்டது.

எந்த வழியிலாவது போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு சிறிலங்கா இராணு வீரர்களுக்கு கோத்தபாய கட்டளை பிறப்பித்ததாக தமது வாக்குமூலங்களை வழங்கிய இராணுவ வீரர்களில் ஒருவர் தெரிவித்திருந்தார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த இரண்டு தமிழ்ப் புலிகளின் தலைவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தபாய கட்டளை வழங்கியதாக மற்றைய இராணுவ வீரர் தெரிவித்திருந்தார்.

போர் மீறல்களைப் புரியுமாறு கோத்தபாயவே கட்டளை வழங்கியிருந்ததாக, தமிழ்ப் புலிகளைப் போரில் தோற்கடிப்பதில் பிரதான பங்கு வகித்தவரும் போர்க் குற்றங்களுக்கு பொறுப்பளிக்க வேண்டியவர் எனக் குற்றம் சுமத்தப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 130,000 வரையான தமிழ் மக்கள் போர் வலயத்திற்குள் அகப்பட்டுத் தவித்தனர். சிறிலங்கா இராணுவத்தால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் கூடிய மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் எவ்வாறு திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பதை சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட 'பாதுகாப்பு வலயம்' என்கின்ற காணொலியில் சாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்கொலைக் குண்டுத்தாக்குதல் போன்ற பல்வேறு பயங்கரவாத போர் உத்திகளைப் பயன்படுத்திய தமிழ்ப் புலிகள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமது கட்டுப்பாட்டிலிருந்த புலிகளைத் தப்பிக்க அனுமதிக்காது அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது. இந்த இழப்புக்களுக்கு மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்சாவால் ஆளப்படும் சிறிலங்கா அரசாங்கமே காரணமாக உள்ளன. ஆனால் சிறிலங்காவை ஆளும் ராஜபக்சாக்களும் சிறிலங்கா அரசாங்கமும் இந்தப் போர்க் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளன.

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் உட்பட உலகத் தலைவர்கள் சிறிலங்காவை ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எதுஎவ்வாறிப்பினும் ராஜபக்ச குடும்பத்தின் அதிகார ஆட்சி என்பது தற்போதும் சிறிலங்காவில் நீடித்துள்ளது என்பது வெளிப்படை.

செய்தி வழிமூலம் : Channel 4
மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20131114109435

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.