Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது எதிர்பார்த்தளவு ஹோட்டல்களுக்கு வருமானமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது எதிர்பார்த்தளவு ஹோட்டல்களுக்கு வருமானம் கிட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அதிகளவான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குவார்கள என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், எதிர்பாத்தளவு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஹோட்டல்களில் தங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 4000 ஹோட்டல் அறைகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், வெறும் 2000 ஹோட்டல் அறைகளே பயன்படுத்தப்பட்டதாகவும் கொழும்பு நகர ஹோட்டல் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த 10ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் முக்கிய நட்சத்திர ஹோட்டல்களின் அறைகளை 2000 பேர் மட்டுமே பயன்படுத்தியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99227/language/ta-IN/article.aspx

அதே வருத்தம் ஸ்கொட்லண்டுக்கும் வர போகிறது. இந்த நோய்க்கிருமி அங்கும் செல்லுமாம்.

 

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் மகிந்த பங்கேற்றால் பல நாடுகள் புறக்கணிக்கும்? - சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை!

 

48a572e3-5b83-4230-922d-71eefa1e85811.jp

பொதுநலவாய அமைப்பின் தலைவராக அடுத்த இரண்டு வருடங்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஸ்கொட்லாந்தில் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் அவர் கலந்து கொண்டால், இப்போட்டியை பல நாடுகள் புறக்கணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ளன.

பொதுநலவாய அமைப்பின் தலைவர் என்ற வகையில் இந்நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டால், இந்த விளையாட்டுப் போட்டிகளை பல நாடுகள் புறக்கணிக்கலாம் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஸ்கொட்லாந்துப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இப்போட்டிகளைப் பார்வையிட ஸ்கொட்லாந்து வந்தால், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான கேள்விகளைத் தவிர்க்க முடியாது என்று பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டக்ளஸ் அலெக்சான்டர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்கொட்லாந்தில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்பது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
11/20/2013 3:22:11 AM

 

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=48a572e3-5b83-4230-922d-71eefa1e8581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.