Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் அனைத்துலக செய்தி நிறுவனத்தின் செயல்பாடு தடை செய்யப்பட்டது அம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் முன்னாள் போர்வலயத்தில் இவ்வாரம் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற Agence France-Presse – AFP ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளியன்று சிறிலங்கா இராணுவம் உறுதியளித்துள்ளது. 

முன்னாள் போர் வலயத்திற்குள் நுழையும் ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட வேண்டும் என தமக்குக் கட்டளை வழங்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். AFP ஊடகத்தைச் சேர்ந்த காணொலிப் பதிவு ஊடகவியலாளரும், ஒளிப்பட ஊடகவியலாளரும் வடக்கு மாகாணத்தில் செய்திகளைச் சேகரிப்பதற்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் திங்களன்று தடைவிதித்தனர்.

தமது கட்டளைத் தளபதிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற கட்டளையின் அடிப்படையிலேயே தாம் இதனைச் செய்வதாக குறித்த இராணுவ அதிகாரிகள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.

பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்காவால் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாடுகளின் தலைவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததைத் தொடர்ந்தே இந்த ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது.

“நீங்கள் இங்கு எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆனால் இவற்றை ஒளிப்பதிவு செய்வதற்கு எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என எமக்கு கட்டளையிடப்பட்டுள்ளது” என முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி ஒருவர் AFP ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என சிறிலங்கா இராணுவத்தின் பிரதம பேச்சாளர் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

“இவ்வாறான ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பில் நாம் வருத்தப்படுகிறோம். நாங்கள் இதனை விசாரணை செய்யவுள்ளோம். AFP ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்வதற்குத் தடைவிதித்தவர்களை இனங்கண்டு நாம் தண்டனை வழங்குவோம்” என இராணுவப் பேச்சாளர் வணிகசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவச் சிப்பாய்களை ஒளிப்பதிவு செய்வதை அவர்களது கட்டளைத் தளபதிகள் விரும்பவில்லை எனவும் ஆனால் போர் நினைவகங்கள் உட்பட பொது இடங்களைக் காணொலிப் பதிவுகள் செய்வதற்கு எவ்வித தடையும் வழங்கப்படவில்லை எனவும் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.

தம் மீது சிறிலங்காப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பை மேற்கொண்டதாகவும், தமது நடவடிக்கைகளில் தலையீடு செய்ததாகவும் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த பிரித்தானியாவின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையைச் சேர்ந்த ஊடகவியலாளர் குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

பொதுநலவாய அமைப்பின் உச்சிமநாடு தவிர வேறு செய்திகளையும் சேகரிக்க முடியும் என வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் மாநாட்டை ஒழுங்குபடுத்தியவர்கள் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிலங்காவில் செய்திகளைச் சேகரிப்பதற்கான போதியளவு ஊடக அத்தாட்சிகளை சிறிலங்காவின் மக்கள் தொடர்பு சாதனங்கள் மற்றும் தகவல் அமைச்சிடமிருந்து AFP பெற்றிருந்தது.

AFP யானது தனது பணியாளர்கள் சிறிலங்காவை விட்டுப் பாதுகாப்பாக வெளியேறும் வரை, இவர்கள் காணொலிப் பதிவுகளை எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட செய்தியை வெளியிடவில்லை.

சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில், போர் வலயத்திற்குள் சென்று செய்திகளைச் சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இது சாட்சியங்கள் எதுவுமற்ற யுத்தம் என விமர்சிக்கப்படுகின்றது. போரில் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், 40,000 வரையான தமிழ் மக்களை சிறிலங்காப் படையினர் போரின் இறுதிக்கட்டத்தின் போது படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் இதனை சிறிலங்கா இராணுவத் தரப்பு மறுத்துள்ளது.

போர் முடிவடைந்த பின்னரும் கூட, ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கான மிகவும் ஆபத்து மிக்க நாடாக சிறிலங்கா உள்ளதாக ஊடக உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

http://nerudal.com/nerudal.60478.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.