Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடும் 5 மீனவர்கள் தாயகம் திரும்புவர் என கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ குடும்பங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது விடுதலையாகி தாயகம் திரும்புவார்கள் என கண்ணீருடன் காத்திருக்கின்றன அவர்களது குடும்பங்கள்.
 
fishermen-family-pamban.jpg இலங்கை சிறையிலுள்ள மீனவர் பிரசாத்தின் மனைவி ஸ்கெனிடா 

தனது குழந்தைகள் ரோசன் மற்றும் ஜெயஸ் உடன்

 
 

நவம்பர் மாதம் 28, 2011 அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அகஸ்டஸ், எமர்சன்,  வில்சன், பிரசாத் மற்றும் லாங்நெட் ஆகிய 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு அப்பாவி மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என உணர்ந்த தமிழக அரசு யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் உள்ள 5 மீனவர்களுக்காக தற்போது வழக்கை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மீனவர்களின் குடும்பங்களை பாம்பனில் சந்தித்தோம்.

பிரசாத்தின் மனைவி ஸ்கெனிடா, ''எங்க வீடுகள பார்த்தா போதைப்பொருள் கடத்துறவன் வீடு மாதிரியா இருக்கு சார். இரண்டு வருசம் ஆகிடுச்சு. வாய்தா மேல வாய்தா போடுதாங்க. என் மூத்த மகன் ஜெயஸ்க்கு இன்னைக்கு மூன்று வயசு. அவனோட முதல் பிறந்தநாளை கொண்டாடி விட்டுப் கடலுக்கு வீட்டுக்காரர் போனார். அப்ப நான்  ஆறுமாசம் கர்ப்பமாக வேற இருந்தேன். இரண்டாவது மகன் ரோசனுக்கு இன்னைக்கு ஒன்றறை வயதாச்சு. அவர் முகத்தை கூட அவர் பார்க்கல.

தமிழக அரசு எங்க மீது அனுசரையாக இருக்கு . இல்லைன்னா எப்பவோ மருந்த குடிச்சிட்டு குடும்பத்தோட தற்கொலை பண்ணியிருப்போம். இப்ப குழந்தைகள் வளர்ந்துட்டு வர்றாங்க. ரோசன் எல்.கே.ஜி போறான். அவங்க அப்பா பத்தி மத்தவங்கள் கேட்டால் குற்ற உணர்ச்சியில் பிஞ்சு வயசிலேயே குறுகி போயிடுறான் என்று....... அழத் துவங்கினார். கண்ணீரை துடைத்துவிட்டு தொடர்ந்தவர் மத்திய அரசு மனசு வைத்தால் எங்க வீட்டுக்காரங்ளோட சேர்த்து ஐந்து பேரும் விரைவில் வீட்டுக்கு வருவாங்க, என்றார் தளராத நம்பிக்கையோடு.

தற்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்த பாம்பன் மீனவர் நேசக்கரங்கள் அமைப்பின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ, '' கடந்த வாரம் பாம்பன் மீனவர்களின் விசைப்படகு மேல் விசாரணைக்கு சென்றபோது கொழும்பு வெளிக்கடை சிறையில் உள்ள 5 மீனவர்களை சந்தித்தேன். இதில்  மீனவர் எமர்சனுக்கு அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அரசு துரிதப்படுத்தினால் அப்பாவி மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.