Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு.ப.சிதம்பரம் பேச்சை ஏளனம் செய்கிறது இலங்கை.. ! பதிலையே காணோமே -ஏன் ..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற சனியன்று (30/11/13) சென்னையில் உட்லண்ட்ஸ் 

ஓட்டல் மண்டபத்தில் ‘இலங்கைத் தமிழர்களின்

வாழ்வுரிமையும் மத்திய அரசின் நிலையும்’ என்கிற

தலைப்பில் பேசும்போது மத்திய அமைச்சர் 

திரு.ப.சிதம்பரம் அவர்கள் சில விஷயங்களை வலியுறுத்திப்

பேசினார். சுருக்கமாக -

pc-woodlands-meeting.jpg?w=640

1) இலங்கையில் இறுதிப் போரில் 65 ஆயிரம் பேர் 

கொல்லப்பட்டனர். இலங்கையின் உள்நாட்டுப் போரை 

நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது.

ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு

செவிசாய்க்கவில்லை.

இந்திய அரசின் முயற்சிக்கு இரு தரப்பினரும் 

உடன்பட்டிருந்தால், பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார். 

இனப் படுகொலை நடந்திருக்காது.

(குறிப்பு - இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது

என்று திரு ப.சிதம்பரம் அவர்கள் சொன்னார் – அதற்குப் பின்

தான் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன் 

என்பது கலைஞரின் அந்நாள் statement ..!)

அதற்காக இனப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருக்க

முடியாது. இலங்கையிலே நடைபெற்ற இந்த 

இனப்படுகொலையைப் பற்றி 

ஒரு விரிவான, 

உண்மையான,

விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அந்த விசாரணை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய 

அளவுக்கு உண்மையான விசாரணையாக இருக்க வேண்டும்.

அந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் 

காட்டப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுதான் நம்முடைய கோரிக்கை. தொடர்ந்து நாம் அந்த

கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.

இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை 

தண்டிக்கும் வரை, இந்திய அரசு ஓயாது – 

இதை நம் அன்புத் தலைவர்

ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம்.

2) இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், 

வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின் 

வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத் தரும் 13-வது 

திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை 

இந்தியா ஓயாது.

3) பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு 

இதுவரை சுமார் 500 கோடி ரூபாய் வரை பல வகைகளில், 

இந்திய அரசு உதவியுள்ளது. ரயில் பாதைகள், பஸ்கள்,

மருத்துவ மனைகள், 50,000 வீடுகள் கட்டித்தருதல்

என பல பணிகளை மேற்கொண்டுள்ளது. நடப்பாண்டில்

ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது.

————

திரு.ப.சிதம்பரம் அவர்களின் இந்த பேச்சுக்கு,

மிக ஏளனமாகவும், பலத்த பதிலடி கொடுக்கும் 

விதத்திலும் இலங்கை அமைச்சர்கள் பேசியுள்ளனர் -

———–

ஓட்டல் மண்டபத்தில் அல்ல -

இலங்கை நாடாளுமன்றத்திலேயே,

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேயின் சகோதரரும்,

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான

பசில் ராஜபக்ச – பதிலடி கொடுக்கிறார் -

“போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின்

தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டும் என்று விரும்பிய 

சில நாடுகள், இப்போது தமிழர்களுக்காக முதலைக் 

கண்ணீர் வடிக்கின்றன. பிரபாகரனை அழிக்கும் வேலையை 

முடிக்க வேண்டும் என்று எமக்குக் கூறியவர்கள் இப்போது 

முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

போரின் இறுதிக்கட்டத்தில், தாம் என்ன செய்தன மற்றும் 

எவ்வாறு பங்களித்தன என்பதை மறந்து விட்டு சில நாடுகள் 

நடிக்கின்றன.

நமக்கு யாரும் உத்திரவிட முடியாது. எதிர்க்கட்சிகள் இங்கு

அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த நாட்டை ஆளப்போவது 

ராஜபக்சக்கள் தான்”.

—————–

இதைதவிர,

இந்த விஷயம் குறித்து பிபிசி க்கு பேட்டியளித்துள்ள 

இலங்கையின் மூத்த அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்த,

திரு.ப.சிதம்பரம் அவர்களின் பேச்சு குறித்து

மிகக்கேவலமாகவும், ஏளனமாகவும் – கருத்து 

தெரிவித்திருக்கிறார் -

“இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு 

வெளியாட்களுக்கு உரிமை கிடையாது.

இலங்கை தனி இறையாண்மை கொண்ட ஒரு நாடு,

இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள்

பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு எந்த விதமான

உரிமையும் கிடையாது.

இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், 

வாக்கு சேகரிக்கும் நோக்குடன் அரசியல்வாதிகள் 

எதையும் பேசுவார்கள். அமைச்சர் சிதம்பரம் தேர்தல் 

வாக்குகளுக்காக பேசிய கருத்துக்களை – இலங்கை

கணக்கில் எடுக்காது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வடக்கு-கிழக்கு 

இணைப்பு குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்துகொண்ட

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாகவே 

வடக்கு கிழக்கு பிராந்தியம் இணைக்கப்பட்டது.

பின்னர், வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு 

முரணானது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர், 

அதுபற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது.

அன்று 13வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டபோது

சிறிலங்காவில் இருந்த நிலை இன்றில்லை.

இன்று எல்லாம் மாறிவிட்டது.

எங்கள் நாட்டுப் பிரச்சனைகள் பற்றி அவர்கள் 

பேசவேண்டியதில்லை- அவற்றை நாங்கள்

பார்த்துக்கொள்கிறோம்.

எங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த கழிப்பறைகள் 

இருக்கின்றன. முதலில் அவர்களை அவர்களின் மக்களின் 

பிரச்சனைகளைத் தீர்க்கச்சொல்லுங்கள்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களின் அரசியல்

தேவைகளுக்காக ஒவ்வொன்றைக் கூறிக் கொண்டிருக்கக்

கூடாது.

வடக்குகிழக்கு மக்களுக்கு முழுநேரம் மின்சாரம் இருக்கிறது.

சாலைப் போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.

பாடசாலைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாழ்க்கையை இந்தியாவா கொடுத்தது?

எங்கள் தெற்கிலுள்ள மக்களின் வரிப்பணத்தில் தான் அந்த

வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒருசதம் கூடக் கொடுக்கவில்லை.

எல்லாவற்றையும் கடனுக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள்.

கனவுலகில் இருந்துகொண்டு அவர்கள் 

பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் சிதம்பரத்தை முதலில் இங்கு வந்து நிலைமையை

பார்க்கச் சொல்லுங்கள். தென்னிந்தியாவை விட

வடக்கு-இலங்கையிலுள்ள மக்கள் நல்ல வாழ்க்கையை

அனுபவிக்கிறார்கள்.

—————-

“போரின் இறுதிக்கட்டத்தில், தாம் என்ன செய்தன மற்றும்

எவ்வாறு பங்களித்தன என்பதை மறந்து விட்டு சில நாடுகள் 

நடிக்கின்றன”.

“இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி

பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது”.

“வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது

என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர், அதுபற்றி பேச 

எவருக்கும் உரிமை கிடையாது”.

“இந்தியா ஒருசதம் கூடக் கொடுக்கவில்லை.

எல்லாவற்றையும் கடனுக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள்”.

“கனவுலகில் இருந்துகொண்டு அவர்கள்

பேசிக்கொண்டிருக்கிறார்கள்”.

“எங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த கழிப்பறைகள்

இருக்கின்றன. முதலில் அவர்களை அவர்களின் மக்களின்

பிரச்சனைகளைத் தீர்க்கச்சொல்லுங்கள்”.

———

இந்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் பேசிய 

பேச்சுக்கு – இந்த அளவிற்கு கேவலமாக

பதிலளிக்கும் இலங்கைக்கு -

அந்த அமைச்சரோ, இந்திய வெளியுறவு அமைச்சரோ,

இந்திய அரசாங்கமோ -தகுந்த விதத்தில் பதிலடி கொடுக்கும் 

என்று காத்திருந்தால் -

மூன்று நாட்களாகி விட்டன -

கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது -

மூச்சு, பேச்சு – எதுவுமே இல்லை !

இலங்கை -இந்தியாவை blackmail 

செய்வது போல் தோன்றவில்லை …?

ஏன் இப்படி …?

யாருக்காவது – எதாவது புரிகிறதா …?

http://vimarisanam.wordpress.com/2013/12/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8F/

Share this:
  •  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.