Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த ஆதாயத்திற்காக குட்டையைக் குழப்பி தமிழர்களைக் கொன்ற கருணாநிதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1486683_770182609665867_1591303709_n.jpg

 

நிருபர்:இறுதி போரின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தீடிரென்று ஏன் ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார்?அல்லது எந்த அடிப்படையில் போர் நின்றுவிட்டது என்று உலகக்கு அறிவித்தார்.

 

மே 17 திருமுருகன் பதில்: கருணாநிதியின் இந்த உண்ணாவிரதத்திற்க்கு பின் மிகப்பெரிய ஒரு நாடகம் நடந்திருக்கிறது.அது என்னவென்றால் ஏப்ரல் 23’ 2009 அன்று போரில் நெருக்கடி அதிகமாகிறது.அதாவது 2009 ஏப்ரல் இராண்டாவது வாரத்தில் தாக்குதல் என்பது மிகக்கொடூரமாக நடக்கிறது பல்லாயிரக்காண மக்கள் கொல்லப்படுகிறார்கள்.இந்த நிலையில் அமெரிக்காவின் தூதர் பெர்லே இந்தியாவின் அதிகாரிகளான சிவசங்கர் மேனன் மற்றும் M.K.நாரயணன் ஆகியோரை கூப்பிட்டு இலங்கையில் உடனே போர் நிறுத்ததை கொண்டு வாருங்கள் என்று கேட்கிறார்.அதற்க்கு இவர்கள் இது சம்பந்தமாக பிரணாப் முகர்ஜி ஹிலாரி கிளிண்டனிடம் பேசுவார் என்று சொல்கிறார்கள். அதற்க்கு முன்பாக நாங்களும் இலங்கை அரசாங்கத்திடம் இது சம்பந்தமாக பேசுகிறோம் என்றும் உறுதி கொடுக்கிறார்கள். இதன்படி 2009 ஏப்ரல் 24ம்தேதி சிவசங்கர மேனனும், M.K.நாராயணும் இலங்கைக்கு சென்று அதிபர் இராசபக்சேவுடன் பேசினார்கள்.இதன்படி தற்காலிகமாக போர்நிறுத்தத்திற்க்கு ஒத்துக்கொள்கிறார் இராசபக்சே. இதன்மூலம் போர் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற உதவுகிறோம் என்று சர்வதேசத்திற்க்கு அறிவித்துவிடுகிறார்கள் மேனன்கள். இந்த செய்தியை தெரிந்துக்கொண்டே ஏப்ரல் 27ம்தேதி ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார் கருணாநிதி.அதாவது எப்படியும் போர் நிறுத்தம் வந்து விடும் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து ப.சிதம்பரமும் கருணாநிதியும் போட்ட நாடகம் தான் இந்த உண்ணாவிரதம். ஆனால் என்ன நடந்தது எந்தவித போர்நிறுத்தமும் நடைபெறவில்லை.ஆனால் கருணாநிதி போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று சொல்லி நாடகத்தை முடித்துக் கொண்டார்.ஆனால் இவரின் பேச்சை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியில் வந்த அப்பாவி மக்கள் இலங்கை இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இதை பற்றி இன்றுவரை இந்தியாவும், அமெரிக்காவும் ஏன் கருணாநிதியும் வாய்திறந்து பேசாமல் அமைதி காத்து இலங்கையை காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இதுதான் கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தின் பின்னாலும் முன்னாலும் நடந்த நிகழ்ச்சி நிரல். இந்த துரோகத்தை மறைப்பதற்க்குதான் போர் நிறுத்தத்திற்க்கு வழியிருந்தது அதை இவர்கள் கெடுத்துவிட்டார்கள் அவர்கள் கெடுத்து விட்டார்கள் என்று பொய்யை சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

 

நன்றி மே 17 இயக்கம்: முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.