Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியர்களின் கழிவறைப் பயன்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக கழிப்பறை நாளாக நவம்பர் 19 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் உலக கழிவறை உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. 2007ல் இந்தியாவில் டெல்லியில் நடைபெற்றது. உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் இணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துவதாக சொல்லப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல்.

தமிழ்நாட்டில் 60 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்றும், அதுவே கிராமங்களில் 75 சதவீதமாக உள்ளதாகவும் 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' அமைப்பு கூறுகிறது.

நெருக்கமான குடியிருப்புப் பகுதிகள் காரணமாக கழிவறைக் கழிவு நீர், குடிநீர் நிலைகளுடன் கலந்து நோய்க் கிருமிகள் பரவுகின்றது. இதுமட்டும் இல்லாமல், முறையான கழிவறைகள் இல்லாததால், பெண்கள் இயற்கை உபாதைக்காக வெளியே செல்லும் போதுதான் பெரும்பாலான பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நடைபெறுவதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிரிஜா வியாஸ் கூறி இருக்கிறார்.

evidance%20kathir.jpgஇதுகுறித்து மனித உரிமை  செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கூறுகையில், "கழிவறை இல்லாமல் சுகாதாரம் பாதிக்கப்படுவதால் அதிகமான குழந்தைகள் நோஞ்சான் குழந்தைகளாக மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். 44 சதவீத தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் கழிவுகளைக் கொண்டு போய் வெளியில் கொட்டுகின்றார்கள். அதுவும் ஒரு மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னைக்கு வழி வகுக்கின்றது.

கழிவறை இல்லாமை என்பது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம், சரியான கழிவறைப் பயன்பாடு விழிப்புணர்ச்சி பெரும்பாலான மக்களிடம் இருப்பதில்லை. மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் சரியான முறையில் கிடைக்காத இந்தச் செயற்பாடானது ஒரு மனிதா உரிமை மீறலாகவே பார்க்க வேண்டும்.

இந்தியாவில் செல்போன் அதிகம் பயன்படுத்தப்படும் அளவிற்கு கழிவறை பயன்பாடு குறைவாக இருக்கிறது. அரசுகள் அக்கறை காட்ட வேண்டிய விஷயங்களில் அக்கறையின்மையுடன் நடந்து கொள்கின்றன. கிராமப்புறங்களில் திறந்த வெளிகள், காட்டுப் புறங்களை டாய்லெட்டாக பயன்படுத்தும் போது நிறையப் பேர் பாம்பு கடித்து இறந்து போகிறார்கள். டாய்லெட்டுக்காக மக்கள் தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கிறார்கள். இதனால், தாழ்வு மனப்பான்மை அவர்கள் மத்தியில் வந்து விடுகின்றது. இது இன்று மிகப்பெரிய சமூக அவலமாக மாறிக்கொண்டு இருக்கிறது. விரைவில் அரசாங்கம் மக்களுக்கு மிகவும் அத்தியவசியமான கழிவறைகளை முறையாக பராமரித்துக் கட்டிகொடுக்க வேண்டும்" என்றார்.

balabarathi.jpgதிண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியிடம் இதுபற்றி கேட்டோம். "சுகாதார விழிப்புணர்வை கிராமப்புறங்களில் அதிகப்படுத்த வேண்டும். இப்போ கிராமப்புறங்களில ஓரளவுக்கு கழிப்பறை வசதிகளை குறிப்பாக பெண்களுக்கு ஏற்பாடு செய்துகொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் பல இடங்களிலும் மூடப்பட்ட நிலையில்தான் கழிவறைகள் இருக்கின்றன. நகர்ப்புறங்களில் வருமானத்துக்காக கான்ட்ராக்ட் எடுத்து இதனை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள்.

எந்தப் பகுதிகளில் கழிவறைப் பயன்பாடு குறைவாக உள்ளதோ அந்தப் பகுதிகளில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதுவும் வாடகை வீடுதாரர்களின் நிலைதான் பரிதாபத்துக்கு உரியது. வீட்டின் சொந்தக்காரரர் கழிவறை இல்லாமல் கட்டி இருந்தால் அப்படியேதான் அவர்களும் அதனைப் பயன்படுத்த வேண்டும். பல நகரங்களில் டாய்லெட் கழிவுகள் பொதுச் சாக்கடையிலேயே கலந்து விடும். இதுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் இன்னும் பல ஊர்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவேறவில்லை.

மத்திய, மாநில அரசுகள் இதற்கான செயல்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். இவையெல்லாம் உருப்படியாக செயல்படுகின்றதா என்பதனை அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பும் கிராமங்களில் இருந்து மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி படை எடுப்பதுமே இந்தப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாகும். இந்தப் பிரச்னை தொடர்பில் கருத்துக் கணிப்புக்களை நடத்திய அமைப்புக்களிடமிருந்து, ஆய்வறிக்கைகளை வாங்கி அவற்றை உண்மையா எனப் பரிசீலித்து, மறு ஆய்வு செய்து, அந்த ஆய்வறிக்கைகளை ஏற்றுச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்" என்றார் உறுதியாக.

Sivasubramani.jpgதாம்பரம் நகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியத்திடம் கழிவறை பிரச்னை குறித்து கேட்டோம்.

"சென்னையை பொறுத்தவரை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை. 1995ல் லோக்காஸ் சானிடேஷன் திட்டத்தில் கழிப்பறை இல்லாத வீடுகளின் சர்வே எடுக்கப்பட்டு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு கட்டிக்கொடுக்கப்பட்டது. இருப்பினும் சில இடங்களில் இடப்பற்றாக்குறை இருந்தது. ஒரு கழிவறை கட்டுவதானால் குறைந்த பட்சம் 10 அடிக்கு 10 அடி இடம் வேண்டும். அரசு பல இடங்களிலும் பொதுக்கழிப்பறை திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் மக்கள் அதனை விரும்புவதில்லை. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் திறந்த வெளியில் மல, ஜலம் கழிப்பதே தங்களுக்கு சௌகரியமாக இருப்பதாக நினைப்பதாலும், சின்ன வயதில் இருந்து கழிவறையை பயன்படுத்தாததினாலும் அவர்கள் திறந்த வெளியையே நாடுகின்றனர். ஆனால், இளைஞர் சமுதாயமானது கழிப்பறையை மட்டுமே பயன்படுத்துவதற்கு வீடுகளில் கழிவறைகளைக் கட்டிக் கொண்டு வருகின்றார்கள்."

"ஏழை, எளிய மக்களுக்கு பல இடங்களில் கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. ஆரம்பத்தில் 20 பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த தாம்பரம் சேலையூரில் உள்ள பாரத் நகர் கழிவறையை இன்று 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றார்கள். கழிப்பறையைக் கட்டிக் கொடுப்பது உள்ளூராட்சி அமைப்புக்களின் கடமை. அதனை சரியாக பயன்படுத்துவதனை தினசரி கண்காணிக்கும் பொறுப்பை அப்பகுதி சுய உதாவிக் குழுக்களே ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்குடன் தாம்பரம் நகராட்சியால் 'நம்ம டாய்லெட் திட்டம்' ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இது வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. சூரிய ஒளியில்தான் இந்த கட்டமைப்பு இயங்குகின்றது. எவ்வித கட்டணமும் கிடையாது. நவீனமான முறையில் சுத்தமான கழிப்பறையாக அமைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தினை IEC (information, education, communication) ஒவ்வொரு இடமாக செய்து கொண்டு வருகிறோம். இளம் சமுதாயம் எங்கே டாய்லெட் இருக்கோ அங்கு எவ்வளவு தூரம் என்றாலும் நடந்து போய் பயன்படுத்துகின்றார்கள். திறந்த வெளியில் மல,ஜலம் கழிக்காத நகராட்சி என்ற பெருமையை தாம்பரம் நகராட்சி இன்னும் 6 மாதங்களுக்குள் பெற்றுவிடும்" என்றார் நம்பிக்கையோடு.

pugalenthi.jpgமுறையான கழிவறைப் பயன்பாடு இல்லாததினால் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படும்? என டாக்டர் புகழேந்தியிடம் கேட்டோம். "கழிவறை வசதி சரியாக இல்லாததினாலும், கழிவறைகளை சுத்தமாக பயன்படுத்தாத காரணத்தினாலும் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக சத்துக் குறைபாடும் ஏற்படுகின்றது. இதனால் இறக்கக்கூட நேருகிறது.

கழிவறையை பயன்படுத்திய பிற்பாடு சோப்பு போட்டு கையைக் கழுவினாலே 40

 

விகிதமான நோய்களைக் குறைத்துவிட முடியும். இந்தியாவில் அதிகமாக டயரியா, நிமோனியாவால் தான் குழந்தைகள் இறக்கிறார்கள் என்பது உண்மை. மஞ்சள் காமாலை, டைபாயிட், காலரா, வயிற்றுப் போக்கு போன்ற நீரால் பரவும் நோய்கள் அனைத்தும் கழிவறை இல்லாத பிரச்னைகளால்தான் ஏற்படுகின்றது. மனித ஆரோக்கியத்திற்கு தேவை சுகாதாரமான கழிப்பறை தான்" என்றார்.

செ. கிரிசாந்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=21980

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.