Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்வலி ஆவணப்படம்: அற்புதம்மாளிடம் கேள்வி கேட்ட மாணவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னையில் நடைபெற்ற உயிர்வலி ஆவணத் திரைப்பட திரையீட்டு விழாவில் பங்கேற்ற அற்புதம்மாளிடம் சரமாரியான கேள்விகளை மாணவர்கள் கேட்டனர்.

unnamed.jpg

சென்னை லயோலாக் கல்லூரி மாணவர் விடுதி அரங்கத்தில் கடந்த 05.12.2013 வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் "உயிர்வலி" ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவிற்கு, மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவரும் உயிர்வலி ஆவணப்படத்தின் இயக்குனருமான செல்வராஜ் முருகையன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சேஷு சபையின் சென்னை மிஷனைச் சேர்ந்த அருட்தந்தை ஜெபமாலை, ஸ்டூடன்ஸ் ஜெராக்ஸ் உரிமையாளர் சௌரிராஜன் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர்.

உயிர்வலி ஆவணப்படம், விழாவில் பங்கேற்ற சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவர்களையும் அமைதியாக கட்டிப் போட்டு உட்கார வைத்திருந்தது. திரைப்படத்தை பார்த்த பல மாணவர்கள் கண்களில் நீர் கோர்த்திருந்தது. திரைப்படம் முடிந்ததும், ராஜீவ் வழக்கில் பேரறிவாளனின் பங்கு குறித்தும், மரண தண்டனை குறித்தும் மாணவர்கள் செல்வராஜ் முருகையனிடமும், பேரறிவாளனின் தாயாரிடமும் கேள்விகளை கேட்டனர்.

unnamed%201.jpg

முதலில் ஒரு மாணவன் எழுந்து, இங்கு எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கிறது, காரம் படைத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் மரண தண்டனை எதிர்ப்பை எடுத்துச் செல்லும்படி கேட்கலாமே? மாணவர்களால் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார்.

அதற்கு அற்புதம்மாள் எழுந்து, ''அரசியல் கட்சிகளுக்கு பல நெளிவு சுழிவுகள் இருக்கு. எப்போதும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள். ஆனால், மாணவர்களுக்கு நெளிவு சுழிவுகள் கிடையாது. தன்னலம் இல்லாமல், குறித்த ஒரே நோக்கத்துக்காக இறுதி வரை உறுதியோடு இருப்பார்கள்" என்றார்.

ருத்திரமூர்த்தி என்ற மாணவர் எழுந்து, கண்டிப்பாக பேரறிவாளனின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதோடு விடுதலையும் செய்ய வேண்டும். ராஜீவ் காந்தியை கொலை செய்கிறார்கள் என்றால், ஒன்று அவர் நல்லது செய்திருக்கனும் அல்லது கெட்டது செய்திருக்கனும். நாங்கள் பிறப்பதற்கு முன்பே நடந்த சம்பவம் என்பதால் அதுபற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறோம் என்றார்.

unnamed%202.jpg

''இதற்கு பதில் சொல்லணும் என்றால் அது நீண்ட நெடிய விளக்கமாக இருக்கும். அவரது இறப்புக்கு பின்னால் நீண்ட உலக அரசியல் இருக்கு. அவர் என்ன நல்லது, கெட்டது செய்தார் என்று நீங்களே தேடிப் புரிஞ்சுக்குங்கள்" என்றார் அற்புதம்மாள்.

பேட்டரி கட்டையை வாங்கி கொடுத்தவனுக்கு தூக்கு தண்டனை என்றால், அதனைக் கொடுத்த பெட்டிக்கடைக்காரன், அதனைத் தயாரித்த நிறுவனம் என அத்தனை பேருக்கும் அல்லவா தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். பேரறிவாளனை மட்டும் எதுக்கு சட்டத்துக்கு புறம்பா கைது செய்து தூக்குத் தண்டனையும் விதித்து இத்தனை நாட்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள்? என்று ஒரு மாணவர் ஆவேசமாக கேட்டார்.

''ஆமா தம்பி, உங்களுக்கு புரியுது, மற்றவங்களுக்கு புரியலையே என்றார் அற்புதம்மாள்.

பேரறிவாளனை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போகும்போது... என்று ஜோன்சன் என்ற மாணவர் அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பிக்கும்போது, இடைமறித்த அற்புதம்மாள், ''அது அரெஸ்ட் கிடையாது. நாங்கதான் அறிவை கொண்டு போய் ஒப்படைச்சோம். அதனால், தயவு செய்து அரெஸ்ட் என்கிற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்!" என்று கூறியவர், அந்த நேரம் எப்படி காவல் துறையினர் நடந்து கொண்டனர் என்பதனையும் மாணவர்களுக்கு விளக்கினார்.

மேலும், ''ரகோத்தமன் ஒவ்வொரு தடவையும் மாறி மாறி பேசிக்கிட்டு இருக்காரு. மல்லிகையில் நான்தான் தினமும் பார்க்கப் போனேன். போன ஒரு நாளும் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. ஆனால், அற்புதம்மாள் பார்க்க வரவில்லை, பேரறிவாளனோட அப்பா குயில்தாசன் தான் பார்க்க வந்தாருன்னு பொய் சொல்றார்" என்றார்.

ஒரு மாணவர் எழுந்து, சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகிவிட்டது, இவ்வளவு காலம் கடந்த பிறகு இப்போதானே அவரை குற்றமற்றவர் என்று சொல்கிறார்கள் என்று செல்வராஜ் முருகையனிடம் கேட்டார்.

''உயிர்வலி ஆவணத் திரைப்படம் தொடர்பாக நாங்கள் தியாகராஜனை பார்க்கப் போயிருந்தோம். அப்போது தான் இந்த உண்மைகளை எங்களிடம் அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வரை எல்லோரும் கருணை மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டார்கள். கடைசியில் பிரதிபா பாட்டீல்தான் மரண தண்டனையை இறுதி பண்ணினார். உண்மையான நிரபராதியை காப்பாற்றினேன் என்கிற மனநிம்மதி எனக்கு கிடைக்கும் என்பதால், இதனை நான் எங்கு வேணும் என்றாலும் சொல்லத் தயாராக இருக்கிறேன். சட்ட ரீதியாக எங்கேல்லாம பேச முடியுமோ அங்கெல்லாம் நான் பேசத் தயாராக இருக்கிறேன் எனக் கூறினார் தியாகராஜன்" என்றார்.

இன்னொரு மாணவர் எழுந்து செல்வராஜ் முருகையனிடம், இவ்வளவு துணிச்சலோடு இந்தப் படத்தை எடுத்திருக்கின்றீர்கள். உங்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல், நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதா? எனக் கேட்டார்.

''நெருக்கடி வரலாம். இதுவரைக்கும் நான் சந்தித்த நெருக்கடிகளைவிட பாராட்டுக்கள்தான் அதிகம். தமிழகம் முழுவதும் இந்த ஆவணப்படத்தை மாணவர்களாகிய நீங்கள் தான் எடுத்துட்டுப் போகணும்" என்றார்.

 

 

இறுதியாக மாணவர்கள் சார்பில் ஜோ பிரிட்டோ பேசும்போது, ''நிச்சயமாக நாங்கள் இந்த ஆவணப் படத்தினை தமிழ்நாட்டு மாணவர்களிடம் மட்டுமல்லாது, அதைக் கடந்தும் எடுத்துச் செல்வோம். பேரறிவாளன், காவல் துறையினரிடம் வாங்கிய அடி உதைகளை இங்கு யாராலும் விபரிக்க முடியாது. ஆனால், அதை இந்த ஆவணப்படத்தில் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார்கள். இதனை சிறப்பு வழக்காக உடனடியாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறி 3 கோடிப் பேரிடம் கையெழுத்து வாங்கும் போராட்டத்தை தமிழ்நாடு  நடத்தி வருகிறோம்" என்றார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=22116

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.