Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நரிக் கூட்டத்தின் மாநாட்டிற்கு முயல்களுக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக  பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த  ராஜபக்­ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதியின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது சரியா? பிழையா? என்று நாம் இங்கு பட்டி மன்றம் நடத்த வரவில்லை.

மாறாக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான அழைப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்த காலசூழல் மிகவும் சரியானது என்பதை மட்டும் நாம் இவ்விடத்தில் சொல்லித்தான்  ஆகவேண்டும்.

ஏனெனில், பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் கானதென்ற பேரில் சர்வதேசத்தின் அழுத்தத்தில்  இருந்து இலங்கை அரசு தப்பித்துக் கொள்வதற்கான ஒரு திட்டமாகும்.

எனவே இத்திட்டத்தை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டால் அது தமிழர்களுக்கு கிடைக்கக் கூடிய நல்லதொரு சந்தர்ப்பத்தை பறி கொடுப்பதாக இருக்கும்.

ஆகையால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது மிகவும் சரியானது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

இதன் காரணமாகவே நரிக் கூட்டத்தின் மாநாட்டிற்கு முயல்களுக்கு அழைப்பு என இவ்விடத்தில் பிரஸ்தாபித்திருந்தோம்.

அதேநேரம் இலங்கைத் தமிழர்களாகிய எங்களின் எழுகைக்கு உலகநாடுகளின் ஆதரவு தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. உலகின் பலமான நாடு ஒன்றின் உதவியோடு தான், எங்களால் எழுந்திருக்க முடியும் என்பது எங்கள் விதியாயிற்று.

அதற்காக விதியை நொந்து கொள்ளாமல், பலமான நாடொன்றைப் பற்றிப்பிடித்து எழுந்து எங்களைப் பலப்படுத்துவதே ஒரேவழி. இதற்கு நல்ல உதாரணம் ஆலமரம்.

ஆம், ஆலமரம் மிகப் பெரிய விருட்சம். ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேரூன்றி என வாழ்த்தும் மரபு எங்களிடம் உண்டு. அவ்வாறான ஆலவிருட்சத்தின் முளைப்பு-உயிர்ப்பு பற்றி இவ்விடத்தில் நாம் சிந்திப்பது அவசியம்.

ஆலம்விதை ஒருபோதும் நிலத்தில்-தரையில்  முளைப்பது கிடையாது.ஆலமரத்தின் முளைப்புக்கு இன்னொன்றின் உதவியும் ஆதரவும் தேவை. அது மரமாக கல்லும் மண்ணும் சேர்ந்த அத்திபாரமாக-கட்டிடமாக இருக்கலாம்.

இவற்றின் உதவியோடு தன் முளைப்பை ஆரம்பிக்கும் ஆலமரம் சற்று வளர்ந்ததும் தன் முதற்பணியாக, தனக்கு முளைப்பதற்கு இடம் தராத நிலத்தில்-தரையில் விழுதை ஊன்றுகின்றது. 

ஓ! நிலமகளே! இந்த உலகத்தில்  மரங்க ளுக்கும் செடிகளுக்கும் உன்மடியில் தான் பிரசவம். ஆனால் எனக்கு மட்டும்  அந்தப் பாக்கியத்தை நீ தரவில்லை. இருந்தும் பரவா யில்லை. நான் அழிந்து போக மாட்டேன். உன் மடியில் பிரசவமானவர்கள் காற்றில் கடும் புய லில் சரிந்துபோகலாம். ஆனால் இன்னொன் றின் உதவியோடு உயிர்ப்புப் பெற்ற என்னிடம் நிறைந்த அனுபவம் உண்டு. 

அதனால்தான் என்விழுதை உன்னில் ஊன்றி விருட்சமாக்கிக் கொண்டேன்.

ஆம்,ஆலமரத்தின் முளைப்பும் இருப்பும் குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் சிந்திப்பது மிக மிக அவசியமாகும்.

........வலம்புரி......

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10801:2013-12-27-11-43-45&catid=1:latest-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.