Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையேயான முறுகல்நிலை அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CM-chanrasiri.jpg

தன்னால் நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் ஆர்.விஜயலக்ஸ்மிக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை விசாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, சிறிலங்கா காவற்துறையிடம் கோரியதையடுத்து ஆளுநருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது. 

"சிறிலங்கா அரசாங்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழிக்கும் நோக்குடன் முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதி ஒருவரைத் தனது தரகராக நியமித்துள்ளது" என முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 அன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போதும் பின்னர் டிசம்பர் 21 அன்று சர்வோதயப் பணியாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போதும் முதலமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஸ்மி அவரது பதவியிலிருந்து விலகவேண்டும் என அநாமதேயத் தொலைபேசி அழைப்பின் போது அச்சுறுத்தப்பட்டதாகவும் இதனை விசாரிக்குமாறும் ஆளுநர் சந்திரசிறி, யாழ்ப்பாண காவற்துறையினரிடம் கட்டளையிட்டதாக டிசம்பர் 25 அன்று வெளியிடப்பட்ட 'டெய்லி மிறர்' பத்திரிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அநாமதேய தொலைபேசி மிரட்டல்களில் சில சிறிலங்காவிற்குள்ளிருந்தும் சில வெளிநாடுகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

ஆளுநர் தன்னிடம் கலந்தாலோசிக்காது பிரதம செயலாளரை நியமித்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் முறையிட்டுள்ளார். ஆனால் மாகாண சபையின் 1987ன் 42வது சட்டத்தின் கீழ் சிவில் சேவையில் ஒருவரை நியமிப்பதற்கான நிறைவேற்று அதிகாரத்தைத் தான் கொண்டிருப்பதாக ஆளுநர் பதிலளித்துள்ளார். 

இராணுவத்தில் கடமையாற்றிய ஒருவருக்குப் பதிலாக சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என விக்னேஸ்வரன் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றார்.

இந்நிலையில், வடக்கில் 150,000 வரையான இராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பொதுமக்களின் நிலங்கள் மற்றும் பொதுமக்களுக்கான வேலைவாய்ப்புக்கள் போன்றவற்றையும் அபகரித்துள்ளதாகவும் வடக்கில் 'சிங்களமயமாக்கல்' இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை குற்றம் சுமத்தியுள்ளார். 

இவ்வாறான முரண்பாடுகளின் மத்தியில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் விரைவில் சந்திக்குமாறு அதிபர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுடன் இணைந்து கொள்ள வேண்டும் என அதிபர் மகிந்த ராஜபக்ச சில நாட்களின் முன்னர் நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தார். 

சிறிலங்கா அதிபர் வலியுறுத்திய போதும், இதுவரையில் ஆளுநரும் முதலமைச்சரும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச்சுக்களை நடாத்தவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுடன் இணைந்து கொள்ள மாட்டாது என செவ்வாயன்று இடம்பெற்ற கட்சிச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்தள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இரு தரப்புப் பேச்சுக்கள் மற்றும் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்போம் என ஏற்கனவே கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்வதற்கான ஒரேயொரு பொறிமுறையாக நாடாளுமன்றத் தெரிவுக் குழு உள்ளதாக ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். 

செய்தி வழிமூலம் : The New Indian Express - By P K Balachandran - COLOMBO

 

 

http://www.puthinappalakai.com/view.php?20131227109685

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.