Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2013ல் இந்திய சிறிலங்கா உறவின் முறுகலுக்கு காரணம் ஈழத்தமிழரின் அரசியல் - இந்திய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டுப் போரின் முடிவில் பொதுமக்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ்வாண்டு முழுவதும் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்கள் இடப்பட்டுள்ளன. 

இவ்வாறு இந்திய ஊடகமான Hindustan Times இந்திய செய்தி நிறுவனமான PTI யினை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாதி. 

2013ல் இந்திய சிறிலங்கா உறவானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டமை போன்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்காவின் வடக்கில் மீளிணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முதலாக சிறிலங்கா அரசாங்கமானது மாகாண சபைத் தேர்தலை நடாத்திய போதிலும் இங்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. நவம்பரில் சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடு இடம்பெற்றது. சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களைக் காரணங்காட்டி சில உலக நாட்டுத் தலைவர்கள் இதில் கலந்து கொள்ளாது இந்த உச்சி மாநாட்டைப் புறக்கணித்தனர். 

சிறிலங்காவில் தனிநாடு கோரிப் போராடிய புலிகள் அமைப்பு அழிக்கபட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி சிறிலங்காவில் இடம்பெற்ற உச்சி மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்நாட்டு அரசியற்கட்சிகள் அழுத்தம் கொடுத்ததன் காரணத்தால், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இதில் கலந்துகொள்ளவில்லை. 

எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டதுடன், இந்தியாவானது தமிழ் மக்களின் நலன்களைக் கருத்திற் கொள்வதாகவும், 'திறந்த தேசிய நலனை' அடிப்படையாகக் கொண்டு சிறிலங்காவுடன் இந்தியா உறவைப் பேணுவதாகவும் தெரிவித்திருந்தார். 

சிறிலங்காவானது 1948ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்ததன் பின்னர், போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடக்கைப் பார்வையிடச் சென்ற முதலாவது உலகத் தலைவரான பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக காலக்கெடு விதித்திருந்தார். 

சிறிலங்காவானது 2014 மார்ச் மாதத்திற்குள் தன்மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான விசாரணையை மேற்கொண்டு பொறுப்பளிக்காவிட்டால், தான் சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணையை மேற்கொள்வதற்கான நகர்வை முன்னெடுப்பேன் என பிரித்தானியப் பிரதமர் அறிவித்திருந்தார். 

ஆனால் சிறிலங்காவானது அதன் சொந்த நாட்டால் முன்னெடுக்கப்படும் விசாரணை மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக அதிபர் மகிந்த ராஜபக்ச பதிலளித்திருந்தார். 

உள்நாட்டுப் போரின் முடிவில் பொதுமக்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ்வாண்டு முழுவதும் சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்கள் இடப்பட்டுள்ளன. 

இந்தியாவின் ஆதரவுடன் இவ்வாண்டு மார்ச்சில் அமெரிக்கா தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. சிறிலங்காவானது தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைசெய்து பொறுப்பளிப்பதுடன், மீளிணக்கப்பாட்டு நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவை வழங்கியமை தொடர்பில் சிறிலங்காவில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா மீதான சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையில் 'தீவிர மாற்றங்கள்' கொண்டுவரப்பட வேண்டும் என சிறிலங்காவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்தது. 

செப்ரெம்பரில், சிறிலங்காவானது போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் வாழும் தமிழ் மக்களுடன் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நகர்வாக வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்தியது. இந்தத் தேர்தல் மூலம் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவானது போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்ப தனது ஆதரவை வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். 

13வது திருத்தச் சட்டத்தைத் துரிதமாக அமுல்ப்படுத்துதல், சிறிலங்காச் சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை விடுவித்தல் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் போன்ற சில விடயங்கள் இவ்வாண்டு இந்தியா மற்றும் சிறிலங்காவுக்கு இடையே தீர்க்கப்படாத மிகப் பெரிய பிரச்சினைகளாக உள்ளன.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20131231109702

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.