Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் விசேட தூதுவரிடம் முக்கிய ஆவணங்கள் கையளிக்கவுள்ளது கூட்டமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
suresh-MP-150-seithy.jpg

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வரும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப், நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். நாளைமறுதினம் புதன்கிழமை வடபகுதிக்குச் செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார்.

  

இந்தத் தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று யாழ் "உதய' னிடம் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரச படைகளினால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பிலான முக்கிய ஆவணங்களை இலங்கை வரும் போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ரெப்பிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் கையளிக்கத் தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் தடவையாக இலங்கை வந்த ஸ்ரீபன் ஜே.ராப்பை கொழும்பில் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வன்னியில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான விடயங்களை அவரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசும் அதன் படைகளும் சர்வதேச விதிமுறைகளை மீறிப் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன என்றும், அரச படைகளினால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாதவாறு கொடூரமானவை என்றும் இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகள் பகிரங்கமாகக் கூறியுள்ளன.

அத்துடன், வன்னியில் இறுதிக் கட்டப்போரில் தமிழினப் படுகொலையை இலங்கை அரசு அரங்கேற்றியதாக இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலரை சித்திரவதை செய்து சுட்டுக் கொன்ற இராணுவத்தினர், பலரைக் காணாமற்போகவும் செய்துள்ளனர் என்று "சனல் - 4' உட்பட சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களையும், காணொலிகளையும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

அத்துடன், இதுதொடர்பில் போரில் உயிரிழந்த, காணாமற்போன தமிழர்களின் உறவினர்கள் ஐ.நாவிடம் மகஜர்களையும் சமர்ப்பித்துள்ளனர். இதேவேளை, தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி ஜெனிவாவில் இம்முறை தீவிர பரப்புரையில் ஈடுபடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வரும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப்பை நாளை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரச படைகளினால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான முக்கிய ஆவணங்களையும் அவரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

இதேவேளை, இரண்டாவது தடவையாக இலங்கை வரும் ஸ்ரீபன் ஜே.ராப், நல்லிணக்க ஆணைக்குழுவில் போர்க்குற்றங்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா நிறைவேற்றியுள்ள இரண்டு தீர்மானங்கள் ஆகியவற்றை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளதா என்பதை ஆராயவுள்ளதுடன், போர்க்குற்றங்களுக்குத் தண்டனை விதித்தலில் முக்கிய கவனம் செலுத்துவார் என்று தாம் எதிர்பார்க்கின்றோம் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று "உதய'னிடம் தெரிவித்தார்.

அது மட்டுமன்றி அமெரிக்காவுக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற வேளைகளில் ஸ்ரீபன் ஜே. ராப்பை பல தடவைகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர் என்றும், இறுதியாக கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, தாமும் அமெரிக்காவுக்குச் சென்ற வேளை ஸ்ரீபன் உட்பட அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இலங்கை நிலைமை தொடர்பில் கலந்துரையாடியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஸ்ரீபன் ஜே ராப், இலங்கைப் பயணத்தின்போது அரச உயர் அதிகாரிகள், எதிர்க்கட்சியினர், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நீதித் துறையினர் உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அவர், இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை நேரடியாக ஆராய்வார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100773&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்லசெய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.