Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் நிழலைக் கூட சிங்கள இராணுவத்தால் தொட முடியாது

Featured Replies

பிரபாகரனின் நிழலைக் கூட சிங்கள இராணுவத்தால் தொட முடியாது: கவிஞர் வைரமுத்து

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நிழலைக் கூட சிங்கள இராணுவத்தால் தொட முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழர் பேரவையின் சார்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது.

தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆற்காடு நா. வீராசாமி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

அவர் தனது உரையில்,

செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இந்திய அரசாங்கம் அனுப்பி வைத்த உணவுப் பொருட்களை சிங்கள அரசாங்கம் தடுத்துள்ளது என்று கேள்விப்பட்டோம். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை அகதிகளாக வந்த ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் சந்தித்து நிலைமைகளை விளக்கினார். தமிழர்கள் இன்னமும் கொல்லப்பட்டு வருகிறார்களே என்று கலைஞர் கண்ணீர் சிந்தினார். அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள முதல்வர் கலைஞர் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து வகைகளிலும் ஈழத் தமிழர்களை பாதுகாப்பார் என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், செஞ்சோலையில் 61 சிறுமிகளைக் கொன்றுவிட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டுவது மிகவும் கோழைத்தனமானது. ஈழத் தமிழர்கள் விடியலையும் சுதந்திரக் காற்றையும் விரைவில் சுவாசிப்பார்கள் என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

கும்பகோணம் தீ விபத்தில் மாணவிகள் எரிந்தபோது தமிழ்நாடே எழுந்து அழுதது. செஞ்சோலையில் மாணவிகள் கொல்லப்பட்டபோது அப்படி நிகழ்ந்ததா என்பதை நம் நெஞ்சைத் தொட்டுப் பார்க்க வேண்டும். விபத்துக்கு அழுகின்ற தமிழன் கொலைக்கு அழமாட்டானா?

விடுதலைப் புலிகளை வெல்லவே முடியாது என்று சிங்கள இராணுவம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்தியாவின் இறைமைக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்திலே இறைமைக்கு உட்பட்டு கண்டனத் தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றியுள்ளார் என்பது அவரது வலியை வெளிப்படுத்துகிறது. இந்திய அரசே! சிங்களவருக்கு ஆயுதம் கொடுப்பது தமிழருக்கு விரோதம். இந்தியா ஆயுதம் கொடுக்காதபோது பாகிஸ்தானிடம் சிங்களவர் ஆயுதம் வாங்குவது இந்திய இறைமைக்கு விரோதம்.

சிங்களவன் சூழ்ச்சிக்காரன். வங்களா விரிகுடாவிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். அரபிக் கடலிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். சிங்கள இராணுவத்தால் பிரபாகரனின் நிழலைக் கூட தொட முடியாது.

அன்னை சோனியா காந்தி அவர்களே! நீங்கள் தியாகத்தின் உருவம்.

எங்கள் தமிழ் மண்ணில் உங்கள் கணவரை இழந்தீர்கள். நாங்களும் பாதிக்கப்பட்டோம். எங்கள் வீடுகள், மானம் எல்லாம் எரிக்கப்பட்டது. நீங்கள் உங்கள் கணவரை இழந்தீர்கள். ஆனால் நீங்கள் தியாகத்தின் உருவம். ஏன் தெரியுமா? உங்கள் மாமியாரை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தவரை மன்னித்து அந்த சீக்கிய இனப் பிரமுகரையே இந்திய பிரதமராக்கினீர்களே அதற்குத்தான் நீங்கள் தியாகத்தின் உருவம். பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்ததற்காக அல்ல.

அந்த சீக்கிய இனத்தின் மீது காட்டிய கருணையை எங்கள் தமிழினத்தின் மீது காட்டக் கூடாதா? என்றார் வைரமுத்து.

இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கவிஞர்கள் அறிவுமதி, மு.மேத்தா, இயக்குநர்கள் சீமான், செல்வபாரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில தொண்டரணிச் செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதி, வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் பலராமன், தி.மு.கவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உசேன், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், தியாகராய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பெருந்தொகையான எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க 8 ஆவது மாநில மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தீர்மானத்தில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு செஞ்சோலைப் பகுதியில் ஆதரவற்ற சிறுமிகள் மீது குண்டுகளை வீசி 55 மாணவிகளைக் கொன்றும் மேலும் 195 மாணவிகளைப் படுகாயத்திற்குள்ளாக்கிய இலங்கை ராணுவத்தினரைக் கண்டிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க நிர்வாகி பெர்னார்ட் பாத்திமா, தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவர் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காந்தி நகரில் நேற்று திங்கட்கிழமை அப்பகுதி பொதுமக்களால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரியூட்டி அழிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்லில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு அக்கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக்கணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

http://www.eelampage.com/?cn=28513

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சத்தியராஜ் க்க நன்றிகள்....அவ்வளவு நடிகர்கள் இருந்தும் இந்த போராட்டத்தில் இனைந்து கொண்ட ஒரே நடிகர் சத்தியராஜ் தான்..

  • தொடங்கியவர்

ஆம் சினிமா நடிகரின் சுயநல மகத்திரைகள் இப்போது கிழிக்கப்படுகின்றன..

ஏன் விஜய்காந் தான் ஈழத்தமிழருக்காக பிறந்த நாளே கொண்டாடாமல் இருக்கிறன் என்டார்...!

அதுசரி...எவர் நிழலையும் எவரும் தொட ஏலாதுதானே...! அதை வைரமுத்துதான் வந்து சொல்லனுமாக்கும்..! :wink: :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி...எவர் நிழலையும் எவரும் தொட ஏலாதுதானே...! அதை வைரமுத்துதான் வந்து சொல்லனுமாக்கும்..! :wink: :D

பெரிய கண்டுபிடிப்பு.. :D

உமக்கு விளங்கக்கூடியவாறு வைரமுத்து கதைக்கனும் எண்டால் நாள் முழுக்க கதைக்க வேண்டி இருக்கும் பறவாயில்லையா, உமக்கு வேலை வெட்டி இல்லை எண்டால் போல (A4 கடதாசில கட்டுரை சா கருத்து எழுதுறத பார்த்தால் அப்படித்தான் இருக்கு) வைரமுத்துவுக்கும் அப்படியா? சாதரண மக்களுக்கு விளங்ககூடியவாறு வைரமுத்து சொல்ல அதில பெரிய குற்றத்தை கண்டுபிடிச்ச மாதிரி பீத்திக்கிறீர்... :P :wink:

பி.கு: தப்பா நினைச்சிடாதேங்க, உங்களுக்கு ஏற்றமாதிரி எழுதுறதுக்கு நாங்கள் ஒண்டும் கூட்டுக்குடும்பம் இல்லையே அதால உண்மையை சும்மா எழுதிப்பார்த்தன், :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விஜய்காந் தான் ஈழத்தமிழருக்காக பிறந்த நாளே கொண்டாடாமல் இருக்கிறன் என்டார்...!

அதுசரி...எவர் நிழலையும் எவரும் தொட ஏலாதுதானே...! அதை வைரமுத்துதான் வந்து சொல்லனுமாக்கும்..! :wink: :D

விஜயகாந் தான் இந்த முறை தனது பிறந்த நாளை கொண்டாடி விட்டாரே தெரியாதா? சுமார் 1000 க்கு மேல் புரியானி செய்து கொண்டாட பட்டதாம்... :D

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந் தான் இந்த முறை தனது பிறந்த நாளை கொண்டாடி விட்டாரே தெரியாதா? சுமார் 1000 க்கு மேல் புரியானி செய்து கொண்டாட பட்டதாம்... :D

ஜோவ்வ் சுண்டல் என்ன லொள்ளா? பின்ன என்ன உதெல்லாத்தையுமா (விஜயகாந்த் புரியாணி செய்து குடுத்ததை) பி.பி.ஸிலா சொல்லுவாங்கள்... :evil: :evil: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.