Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் மன்னார் ஆயர்களும் பயங்கரவாதிகளே - பிர­தி­ய­மைச்சர் வீரசேகர

Featured Replies

Sarath-Weerasekara.jpg

 

நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வா­தத்தை ஏற்­ப­டுத்தும் விதத்தில் அமெ­ரிக்­காவின் பிரி­வி­னை­வாத சதித்­திட்­டத்­திற்கு துணை போகும் யாழ். மன்னார் ஆயர்­களும் பயங்­க­ர­வா­தி­களே ஆவார்கள். இந்த இரண்டு ஆயர்­களும் அழிந்து போன பயங்­க­ர­வா­தத்­திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பயங்­க­ர­வா­தி­களே ஆவார்கள். எனவே இவ்­வி­ரு­வ­ருக்கும் எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். எனவே அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்­டு­மென தொழில் மற்றும் தொழி­லா­ளர்கள் உற­வுகள் பிர­தி­ய­மைச்சர் ரியர் அட்­மிரல் சரத் பி.வீர­சேகர தெரி­வித்தார்.

 
எந்­த­வொரு விசா­ர­ணை­களை நடத்தும் தகுதி எமக்கு உள்­ளது. எனவே சர்­வ­தேச விசா­ர­ணைகள் அவ­சி­ய­மில்­லை­யென்றும் அவர் தெரி­வித்தார்.
 
அமெ­ரிக்­கா­வின் விசேட தூதுவர் ஸ்டீபன் ரெப்­பிடம் யாழ்.ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் மற்றும் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆகியோர் தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்­பாக கருத்து தெரி­வித்த போதே பிர­தி­ய­மைச்சர் ரியர் அட்­மிரல் சரத் பி.வீர­சே­கர இதனைத் தெரி­வித்தார்.
 
பிர­தி­ய­மைச்சர் இது தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில்,
பயங்­க­ர­வா­திகள் என்றால் நாட்­டுக்கு எதி­ரா­ன­வர்கள் என்­பதே அர்த்­த­மாகும். அதற்கு வேறு எந்த அர்த்­தமும் கிடை­யாதது மட்­டு­மல்ல. பயங்­க­ர­வாதம் என்­ப­தற்கு நடுவில் வேறு எவரும் அல்­லது வேறு அர்த்­தமும் வழங்க முடி­யாது.
 
எமது படை­யினர் மனி­தா­பி­மான யுத்­தத்­தையே மேற்­கொண்­டனர். எமது கடற்­ப­டை­யினர் பலரை கொன்ற புலி­களின் கடற்­ப­டையின் தள­பதி சூசையின் மனைவி பிள்­ளை­களை இறுதி யுத்­தத்தில் கடற்­ப­டை­யினர் கைது செய்­தனர்.
 
இது யாருக்கும் தெரி­யாது. அவர்­க­ளுக்கு எதி­ராக எத­னையும் செய்­தி­ருக்­கலாம். ஆனால் எமது படை­யினர் அவர்­களை பாது­காத்­தனர். இன்று அவர்கள் மகிழ்ச்­சி­யாக உயிர் வாழ்­கின்­றனர்.
 
அதே போன்று தான் இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போது பிர­பா­கரன் 250 மக்­களை பணயக் கைதி­யாக வைத்­துக்­கொண்டு சுற்­றி­வர கண்­ணி­வெ­டி­களை புதைத்து இரா­ணு­வத்­தினர் மீது தாக்­குதல் நடத்­தினார்.
 
எமது படை­யினர் நினைத்­தி­ருந்தால் பீரங்கித் தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருக்­கலாம். ஆனால் அதைச் செய்­ய­வில்லை. மாறாக கண்ணி வெடி­க­ளுக்கு மேலாக நடந்து சென்று பிர­பா­க­ரனை பிடித்­தனர் மக்­களை பாது­காத்­தனர்.
 
இதனால் எமது படை­யினர் 300 பேர் கால்­களை இழந்­தனர். புலிகள் மக்­களை, புத்­தி­ஜீ­வி­களை கொன்­றனர். சிறு­வர்­களை படைக்கு சேர்த்­தனர். அப்­பொ­ழு­தெல்லாம் இந்த ஆயர்கள், சுமந்­திரன், கூட்­ட­மைப்­பினர் எங்கே இருந்­தனர்.
 
யுத்தம் முடிந்த பின்னர் புலிகள் புதைத்து வைத்த 5 இலட்­சத்­திற்கு மேலான கண்ணி வெடி­களை எமது படை­யி­னரே உயிரை பணயம் வைத்து அகற்­றினர்.
 
மக்­க­ளுக்கு 3000 மேல் வீடு­களை நிர்­மா­ணித்து கொடுத்­தனர். அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்­தினர்.
இதன் போது கூட்­ட­மைப்­பி­னரோ ஆயர்­களோ ஏதா­வது உத­வி­களை செய்­தார்­களா ஒன்றும் செய்யவில்லை.
அவ்வாறானவர்கள் இன்று அமெரிக்காவின் பிரிவினைவாதத்திற்கு துணை போகின்றனர். பயங்கரவாதத்தை உருவாக்க முயல்கின்றனர்.
 
இவர்கள் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக செயல்படவில்லை. மாறாக அதற்கு எதிரானவர்களாகவே செயல்படுகின்றனர்.

 

 

http://virakesari.lk/?q=node/360567

இப்பவும் இரசாயன ஆயுதங்கள் ஆயர்மார் அமெரிக்க பிரதி நிதியுடன் பேசிய பற்றி ஒன்றும் சொல்லாமல் அதனையே மனதில் வைத்து பயத்தில் உளரல் எடுக்க வெளிக்கிட்டது... அடுத்த சனல் 4 இல் இது வந்தால்..

  • கருத்துக்கள உறவுகள்

sarath-weerasekara.jpg

அமெரிக்காவின் சதித்திட்டத்திற்கு துணைபோகும் யாழ், மன்னார் ஆயர்கள் பயங்கரவாதிகளே என்றும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் றியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர தெரிவித்துள்ளார். 

போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ராப்பிடம், யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆகியோர் தெரிவித்திருந்தனர் .

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரிகளில் ஒருவரும், தற்போது பிரதியமைச்சராக இருப்பவருமான றியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர – 

“பயங்கரவாதிகள் என்றால் நாட்டுக்கு எதிரானவர்கள் என்பதே அர்த்தம். அதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது .

பயங்கரவாதம் என்பதற்கு நடுவில் எவரும் வேறு எந்த அர்த்தமும் கூற முடியாது. 

எமது படையினர் மனிதாபிமானப் போரையே நடத்தினர். 

எமது கடற்படையினர் பலரைக் கொன்ற, கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி பிள்ளைகளையும் இறுதிப் போரில் கடற்படையினர் கைது செய்தனர். 

இது யாருக்கும் தெரியாது. அவர்களை எதுவும் செய்திருக்கலாம். ஆனால் எமது படையினர் அவர்களைப் பாதுகாத்தனர். இன்று அவர்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழ்கின்றனர். 

அதுபோன்றே, இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 250 பொதுமக்களை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு சுற்றிவர கண்ணிவெடிகளை புதைத்து இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார். 

எமது படையினர் நினைத்திருந்தால் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. 

மாறாக கண்ணிவெடிகளுக்கு மேலாக நடந்து சென்று பிரபாகரனைக் கொன்று மக்களை பாதுகாத்தனர். இதனால் எமது படையினர் 300 பேர் கால்களை இழந்தனர். 

விடுதலைப் புலிகள் பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் கொன்ற போதும், சிறுவர்களை படைக்கு சேர்த்த போதும் இந்த ஆயர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் எங்கே இருந்தனர். 

போர் முடிந்த பின்னர் புலிகள் புதைத்து வைத்த 5 இலட்சத்திற்கு மேலான கண்ணி வெடிகளை எமது படையினரே உயிரை பணயம் வைத்து அகற்றினர். 

மக்களுக்கு 3000 மேற்பட்ட வீடுகளை நிர்மாணித்து கொடுத்தனர். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினர். 

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ ஆயர்களோ ஏதாவது உதவிகளை செய்தார்களா? - ஒன்றும் செய்யவில்லை. 

அவ்வாறானவர்கள் இன்று அமெரிக்காவின் பிரிவினைவாதத்திற்கு துணை போகின்றனர். பயங்கரவாதத்தை உருவாக்க முனைகின்றனர். 

இவர்கள் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக செயல்படவில்லை. மாறாக அதற்கு எதிரானவர்களாகவே செயல்படுகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140111109757

ஶ்ரீலங்கா அமைச்சரை முந்திக்கொண்டு யாழ் களத்தில் ஏற்கனவே ஆயர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு விட்டது. சிங்கள அமைச்சரை விட விசுவாசிகள் ரொம்ப speed.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.