Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தி முடிவு செய்வார் மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி

Featured Replies

narayansamy1114.jpg

 

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி முடிவு செய்வார் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

பேட்டி

காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி வி.நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் எந்தவொரு திட்டங்களும் நிறைவேற்றப்படாதது வருத்தத்திற்குரியது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும் பாராளுமன்ற உறுப்பினரையும் குறை கூறி ஆட்சி நடத்த முதல்–அமைச்சர் நினைக்கிறார். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர்.

காங்கிரஸ் அரசில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொன்னி அரிசி 20 கிலோவும், 10 கிலோ கோதுமையும் வழங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 10 கிலோ அரிசி மட்டுமே வழங்குகிறார்கள். மத்திய அரசு ஒரு கிலோ அரிசிக்கு ரூ.24 மானியமாக தருகிறது. ஆனால் அந்த மானியத்தையும் பெற்றுக் கொண்டு தரமற்ற அரிசியை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். தேர்தல் நேரத்தில் ரங்கசாமி அரசு மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுவதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வறட்சி நிவாரணம் தருவதாக பலமுறை சட்டமன்றத்திலும், பொதுமக்களிடத்திலும் வாக்குறுதி அளித்தார்கள். அதன்படி ஓரளவு தந்தார்கள்.

தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது தமிழக அரசு மத்திய அரசை உடனடியாக அணுகி தேவையான நிதியை பெற்று தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்கியது. ஆனால் புதுச்சேரி அரசு காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க மத்திய அரசை அணுகி நிதி கேட்கவில்லை. நான் மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத்பவாரை சந்தித்து காரைப்பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டபோது, மாநில அரசிடமிருந்து எந்தவித கோரிக்கையும் வரவில்லை, வந்தால்தானே தரமுடியும்? என்று என்னிடம் கூறினார். அதனால்தான் காரைப்பகுதி விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் கிடைக்கவில்லை. இதன் முழுப்பொறுப்பையும் ரங்கசாமி ஏற்க வேண்டும்.

மீனவர்கள் பாதிப்பு

இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்கள் கடந்த சில மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் 20 முறை நாம் மீட்டுத் தந்துள்ளோம்.

ஆனால் இப்பொழுது இலங்கை அரசு ஒரு கடினமான நிலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் கொந்தளித்துள்ளார்கள். அவர்களது குடும்பத்தினர் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்க வேண்டும் என்றும் மீனவ சமுதாயத் தலைவர்கள் பிரதமரையும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மீனவர்கள் பேச்சுவார்த்தை

தமிழகம், காரைக்கால் மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர் பாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு இரண்டு முறை கடிதம் எழுதியது. ஆனால் கடந்த 6 மாதங்களாக தமிழக அரசிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக முதல் அமைச்சர் பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் இலங்கை–தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வரும் 20–ந் தேதி இலங்கை மற்றும் தமிழக, காரைக்கால் மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

அவரை நேற்று சந்தித்து, இந்த பேச்சுவார்த்தைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்தம் போட வேண்டும் என்றும், தமிழக–காரைக்கால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும், பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளேன்.

காரைக்கால் பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்மணி, கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற தனது கணவர் பழனிச்சாமி அங்கு இறந்து விட்டதாகவும், இறந்து போன தனது கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர புதுச்சேரி அரசிடமும், மாவட்ட கலெக் டரையும் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதும், சவூதியில் உள்ள இந்திய தூதரகம் மூலம், பழனிச்சாமியின் உடலை இந்தியாவுக்கு அனுப்பு வைக்கவும், அவர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து அவரது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில தினங்களில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து சவூதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பணிக்கு சென்றுள்ள தொழிலாளர்களில் யாராவது இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு காப்பீடு வழங்கவும், இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முழு செலவையும் அரசே ஏற்பது என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சவூதி அரேபியாவில் இறந்து போன சுமதியின் கணவர் பழனிச்சாமியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

சோனியா முடிவு செய்வார்

கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலிலும், 2009–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க 9 ஆண்டுகளாக இணைந்திருந்தது. கடந்த 15 தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக காங்கிரசுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை காங்கிரஸ் கட்சித் தலைவி அன்னை சோனியாகாந்திதான் முடிவு செய்வார். சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங், 2014–ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி, இந்திய நாட்டின் பிரதமராக ஆவதற்கு தகுதி வாய்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். 2014 பொதுத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர்? என்பதை சோனியாகாந்தி அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

 

http://www.dailythanthi.com/2014-01-12-Told-Sonia-Gandhi%252C-will-the-Minister-Narayanaswamy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.