Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டுகளை காங்கிரஸ் வீணடித்துவிட்டது’ நரேந்திர மோடி

Featured Replies

சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று நரேந்திர மோடி கூறினார்.

உள்துறை மந்திரியின் கடிதம்

கோவா மாநிலம் பனாஜியில் நடந்த பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும்போது முஸ்லிம்களை கைது செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எழுதுகிறார். ஏன் அப்படி செய்ய வேண்டும்? சட்டத்தை மீறுபவர்களுக்கு என்று ஏதாவது மதம் இருக்கிறதா?

வாக்கு வங்கி அரசியல்

அவர்களது வெட்கமில்லாத துணிவை பாருங்கள். அவர்கள் மதவாத அரசியல் நடத்துகிறார்கள். சட்டத்தை மீறும் ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமா? அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமா? என்ற விதியை மதம் தான் முடிவு செய்கிறதா? மத அடிப்படையில் அதில் எந்த பகுத்தறிவும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் தண்டிக்கப்படக்கூடாது என்றால், அது எல்லா மக்களுக்கும் இருக்க வேண்டும். இதில் வாக்கு வங்கி அரசியல் நடத்தக்கூடாது.

50 ஆண்டுகள் வீண்

பிரதமர் எப்போது இதுபோன்ற கடிதத்தை பற்றி கேட்கப்போகிறார்? இதுபற்றி ஆச்சரியம் அளிப்பதாக கூறிய அவர், தான் இதுபற்றி கவனிப்பதாக கூறியிருக்கிறார். இது தான் அவரது பொறுப்பும், பதிலும்.

நாடு சுதந்திரம் பெற்றபின் அரசியலமைப்பு நிறுவனங்களை வலுவிழக்கச் செய்தும், ஆட்சி அதிகாரத்தை ஒரு மையத்தில் குவித்துவைத்தும், கடமையுணர்ச்சி இல்லாமல் 50 ஆண்டுகளை வீணாக்கி விட்டனர். 21–ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு வழிநடத்திச் செல்வதாக ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் எதுவும் மாறவில்லை.

ஊழல் சின்னமாக

நீங்கள் எப்படி இதில் வேறுபட்டவர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நாங்கள் இந்த சிக்கலுக்கு எல்லாம் விடை காண்போம் என்று நான் அவர்களிடம் கூறினேன். நாங்கள் அதிகார பரவலாக்கலில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இதில் எங்களுக்கு கடமையுணர்ச்சி உள்ளது.

ஊழல், பரம்பரை அரசியல், குடும்ப ஆட்சி, மதவாதம், வாக்கு வங்கி அரசியல் போன்ற கலாசாரங்களின் சின்னமாக காங்கிரஸ் ஆகிவிட்டது. பாரதீய ஜனதா இந்த அனைத்து சிக்கல்களில் இருந்தும் நாட்டை விடுவிக்க மனஉறுதி கொண்டுள்ளது.

 

http://www.dailythanthi.com/2014-01-13-Wasting-Congress%2527-attack-on-Narendra-Modi

  • கருத்துக்கள உறவுகள்

மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன்;பிரபல எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தி!

 

பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரபல கன்னட எழுத்தாளரும் ஞானபீடம் விருது பெற்றவருமான மருத்துவர்.யூ.ஆர்.அனந்த மூர்த்தி;

மோடி பிரதமரானால்,அப்படி ஒரு சம்பவம் நடைபெறுமானால் நான் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று தெரிவித்தார்.

156857_634115486618958_1039123414_n1-550

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராவதை நான் விரும்பவில்லை என்றும் மோடிக்கு நாடாளும் அதிகாரம் கிடைத்தால் மஹாதமா காந்தியும்,ஜவஹர்லால் நேருவும் கனவு கண்ட இந்தியாவை பிறகு ஒரு போதும் காண இயாலமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்.மேலும் அனைத்து சமூகத்தவரும் இணைந்து வாழ்ந்து வரும் இந்தியா என்றே நாடே இல்லாமல் போய்விடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

நேரு எழுதிய ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ என்ற நூலை வாசித்தவர்களும் சீரிய சிந்தனை கொண்டவர்களும் இந்தியாவில் வாழ விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்த அனந்த மூர்த்தி,

மோடி ஆளும் இந்தியா என்பது சனநாயகம் போற்றும் நாடாக இருக்காது.மோடிக்கு பயந்து மக்கள் உயிர் பாதுகாப்பு தேடி ஓடும் கொடும் காலமாக தான் அது இருக்கும்.

மோடியின் ஒரு முகத்தை மட்டும் உயர்த்தி காட்டி மோடியை பிரதமராக ஆக்குவதற்கு ஊடகங்கள் போராடுகின்றன.ஆனால் மோடிக்கு மற்றொரு முகம் கூடி உண்டு.அந்த முகத்தை ஊடகங்கள் மறைத்து வைக்கின்றன.இவ்வாறான செயலால் அது நாட்டையும் மக்களையும் ஒரு தீரா துன்பத்திற்கு கொண்டு செல்லும் என்றும் யூ.ஆர்.அனந்த மூர்த்தி தெரிவித்தார்.

 

- See more at: http://www.vkalathur.com/?p=13685#sthash.079VNg2P.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.