Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அரசாங்கத்திற்கு ஏற்றமாதிரியே குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது : சுரேஷ் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அரசாங்கத்திற்கு ஏற்றமாதிரியே குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது : சுரேஷ் எம்.பி

 

 
 
உண்மைகளை மூடி மறைத்து அரசாங்கத்திற்கு தேவையான விதத்திலேயே தொகை suresh-premachandran_3.jpgமதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களத்தினால் குடிசன மதிப்பீடு வடக்கில் மேற்கொள்ளப்பட்டது. எனவே இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
வடக்கில் சர்வதேச நிறுவனங்களை வெளியேற்றி சாட்சியமில்லாத யுத்தத்தை அரசாங்கமே நடத்தியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
தொகை மதிப்பு புள்ளி விபரத்திணைக்களத்தின் புள்ளி விபரத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விமர்சிப்பது அவர்களது உண்மைகளை மூடி மறைப்பதற்கே என அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தொடர்ந்து கருத்து தெரிவித்த போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத்தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
 
உண்மைகளை மறைக்க வேண்டிய தேவை கூட்டமைப்புக்கு கிடையாது. அரசாங்கத்திற்கே உண்மைகளை மறைக்க வேண்டிய தேவை உள்ளது.
 
யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்துவிட்டது. இப்போது தான் தொகை மதிப்பு புள்ளி விபரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
 
உண்மையில் யுத்தம் முடிந்தவுடன் மக்களை மீள்குடியேற்றி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அதன் பின்னர் தொகை மதிப்பு புள்ளி விபரத்தினை மேற்கொண்டிருக்க வேண்டும்.
 
ஆனால் 4 வருடங்களுக்கு பின்னர் அவசர அவசரமாக கிராம அறிவுத்து அரசுக்கு தேவையான விதத்தில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இத்தகவல்களில் உண்மை இல்லை. ஜெனிவாவை இலக்கு வைத்தும் சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கத்திலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
யுத்தம் நடந்த காலத்தில் படையினரால் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் காணாமல் போயுள்ளனர்.
 
தமது பிள்ளைகளை பெற்றோர் இழந்துள்ளனர். வெளிநாடுகளில் வாழும் பொது மக்களின் உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இம்மதிப்பீடு தொடர்பாக விபரங்களை பெறுவதற்காக வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவங்களில் அவ் விபரங்களை எழுதுவதற்கான இடங்கள் இல்லை. ஏன்? எதற்காக? இவ் விபரங்களை பெற்றுக் கொள்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கமே உண்மைகளை மறைப்பதற்கு முயற்சிக்கின்றது.
 
கூட்டமைப்பினரிடம் மறைப்பதற்கு எதுவுமே கிடையாது. இந்த மதிப்பீட்டில் உண்மைத்தன்மை கிடையாது. எனவே தான் வவுனியாவில் இடம்பெற்ற எமது மாநாட்டில் இதனை நிராகரித்தோம். அத்தோடு சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் அரசாங்கத்தின் புள்ளி விபர நாடகத்தை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வோம்.
 
தகவல்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் உண்மையை கண்டறிவதில் அக்கறை காட்டப்படவில்லை. எனவே அரசாங்கமே குற்றமிழைத்துள்ளது நாங்கள் குற்றமிழைக்கவில்லை.
 
யுத்த காலத்தில் ஐ.நாவோ சர்வதேச நாடுகளோ அதனை நிறுத்த முன்வரவில்லை எனக்கூறுவதில் உண்மையில்லை. ஏனென்றால் யுத்தக்காலத்தில் வடக்கில் இருந்த ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் உட்பட சர்வதேச அமைப்புக்களை அரசாங்கமே வெளியேற்றியது.
 
இவ்வாறு வெளியேற்றி சாட்சியமில்லாத யுத்தத்தை அரசாங்கமே நடத்தியது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்தார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இறந்த, காணாமல் போனவர்களின் பட்டியலை 4 வருடங்களில் தயாரித்து இருக்க முடியும். ஏன் செய்யவில்லை. ஐ.நா போன்றவற்றுக்கும் இப்புள்ளி விபரங்களை காட்டி இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.