Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா: போரை நிறுத்துக; இலங்கை ஏற்க மறுப்பு.

Featured Replies

இந்தியா: போரை நிறுத்துக; இலங்கை ஏற்க மறுப்பு.

____________________________________________________

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் வன் முறைகளுக்கும் போருக் கும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு உடனடி யாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தி யாவும் அனைத்துலக சமூகமும் இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

ஆனால் இலங்கை அரசோ மறுப்புத் தெரிவித்து வருகிறது. திருகோணமலையை மீண் டும் தங்கள் கட்டுப் பாட் டுக்கொண்டு வரும்வரை தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கப் போவதாக அது தெரி வித்துள்ளது.

இந்தியாவும் அமெரிக் காவும் இணைந்து இலங்கை அரசிடம் நேரடியாகவும் மறைமுக மாகவும் பேச்சு வார்த்தை நடத்தி விட்டன.

இலங்கையில் நடை பெற்று வரும் ரத்தக் களறியை நிறுத்துவதற்கு நீண்ட கால நோக்கில் தீர்வு காணவேண்டும். அண்மைய காலங்களில் ஒரு சில மாதங்களுக் குள்ளேயே நுìற்றுக்கணக் கானவர்கள் மடிந்துள் ளனர்.

இந்தியாவும் இலங்கை அமைதிப் பேச்சின் மற்ற உறுப்பினர்களும் அமெரிக்கா, ஐநா, ஜப் பான் மற்றும் நார்வேயும் அமைதிக்கு இணக்கம் காணும்படி இலங் கைக்கு மட்டும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள் ளனர்.

கொழும்பு ராணுவம் பீரங்கித் தாக்குதலையும் ஆகாயத் தாக்குதலையும் கைவிட்டால் அதைத் தொடர்ந்து நாங்களும் எங்கள் நிலையில் இருந்து சற்றுக் கீழே வரலாம் என்று விடுதலைப்புலிகள் நார்வேயிடம் தெரி வித்துள்ளனர்.

ஆனால் கொழும்பு அரசோ இந்தத் தருணம் தான் விடுதலைப்புலி களைத் தாக்குவதற்குச் சரியான தருணம் என் றும் எனவே தொடர்ந்து தாக்குதலை ராணுவம் நிறுத்தப்போவதில்லை என்று கூறியதாகத் தகவல்கள் கூறு கின்றன.

இதை எதையும் பொருட்படுத்தாமல் இலங்கை மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. விடுதலைப்புலிகளின் எல்லைக்கு அருகேயுள்ள சம்பூர் என்னும் ஊரை மீட்பதற்காகவும் திரு கோணமலையிலுள்ள நாட்டின் முக்கிய கடற் படைத் தளத்தை மீட்ப தற்காகவுமே பெரிய அள வில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

முடிவே இல்லாத போர் எந்த ஒரு வகை யிலும் தீர்வைக் கண்டு விடாது என்று அனைத் துலக சமூகம் கருதுகிறது.

எங்களுக்கு வேண்டிய தெல்லாம் போர் நிறுத் தப்பட வேண்டும். முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக் கும் போருக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்துலக சமூ கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், எதற்கும் செவிசாய்க்காமல் இலங்கை ராணுவம் திரு கோணமலையில் பெரிய அளவில் தாக்குதலை நடத்தியுள்ளது. போரி னால் இரு தரப்பிலும் எவ்வித ஆதாயமும் இல்லை.

இனியும் எந்தவித ஆதாயத்தையும் பெறப் போவதில்லை என்றும் அமைதிக்குழு உறுப் பினர்களுள் ஒருவர் தெரி வித்துள்ளார்.

போரினால் இரு தரப் புக்கும் எந்தவித ஆதாய மும் இல்லை என்று பலரிடையே கருத்து நில வினாலும் ஒரு சிலர் ராணுவத்திற்கு வெற்றி கிடைக்கும் நம்பிக்கை யில் இருப்பதாக ஆய் வாளர் ஒருவர் கூறியுள் ளார். முக்கியமாக விடு தலைப்புலிகளின் முக்கிய நகரங்களாகக் கருதப் படும் வடகிழக்கு இலங் கையின் கிளிநொச்சி மற்றும் கொழும்பு நகரங் களில் இதுபோன்ற கருத் துகள் நிலவுவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்து வரும் போரை முடிவுக் குக் கொண்டு வரும் பொருட்டு நார்வே இரு தரப்பினரிடையேயும் நல்ல தொடர்பை வைத் துள்ளதாகவும் இரு தரப்பினரிடையே சரியான புரிந்துணர்வை ஏற் படுத்தி 1983ஆம் ஆண் டில் இருந்து நடந்து வரும் இந்த அமைதியற்ற நிலைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது.

1983ஆம் ஆண்டி லிருந்து இதுவரையிலும் 65,000க்கு மேற்பட்ட உயிர்களைப் பறித்திருப் பதோடு நாட்டையும் நிலைகுலையச் செய்துள் ளது.

இலங்கை அரசாங்கம், ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் மிகவும் தெளி வாக உள்ளதாகத் தெரி கிறது.

அப்படியே இலங்கை அரசுக்குத் தற்காலிகமாக வெற்றி கிட்டினாலும் அந்த வெற்றி விடுதலைப் புலிகளை அமைதிப் பேச்சுக்கு இட்டுச் செல் லுமா அல்லது நிலை மையை இன்னும் மோச மான நிலைக்குக் கொண்டு செல்லுமா என்பதே அனைவரு டைய கேள்வியும்.

அதோடு மேலும் ஒரு அச்சம், இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் விடாப்பிடி யான போக்கால் போரில் சம்பந்தப்படாத அப்பாவி மக்களே பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்கி அச்சத்தில் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இந்த விடாப்பிடியான போக்கும் போரும் அமைதிக்கான தீர்வை ஒருபோதும் கொண்டு வரப்போவதில்லை என்று அரசியல் நோக் கர்கள் கருதுகின்றனர்.

இலங்கையின் மிதவாத சிங்களவர்கள் அரசாங் கம் போரை எவ்வகை யிலும் நிறுத்தக் கூடாது. இறுதி வரை போராட வேண்டும் என்று விரும்பு கின்றனர்.

அப்படியே தீர்வு காணப்பட்டாலும், “அதி காரப் பகிர்வு” தீர்வே முன்னணியில் இருக்கும் என்று தெரிகிறது. அதி காரங்களைத் தமிழர் களுக்கும் பிரித்துக் கொடுக்கும் அதிகாரப் பகிர்வு தீர்வுகளைப் பற்றி தமிழர்கள் கூறுகையில், அதிகாரப் பகிர்வு நிச் சயம் ஒரு நிரந்தரத் தீர் வாகாது. அதிகாரத் தீர்வை அரசாங்கம் எப்போதும் பிடுங்கிக் கொள்ளலாம். எனவே இதுபோன்ற தீர்வு நம்பகமற்றது என்று தமிழர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் உள்ளன அரசியல் முறை போல் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் இதற்குச் சரியான தீர்வு காண முடியும் என் றும் அவர்கள் கூறியுள் ளனர்.

விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் அமைதிப்பேச்சுக்கு இணங்கினாலும் அப் பாவி மக்கள் பாதிக் கப்படும் நிலை அதி கரிப்பதை நிறுத்த இயலுமா என்ற கேள்வி களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதில் குறிப்பாக தமிழர் களும், தமிழ் முஸ்லிம் களுமே அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இலங்கை அமைதிப் பேச்சு ஏறக்குறைய செய லிழந்த நிலையில் இருப்ப தாக அனைத்துலக சமூகம் கருதுகிறது.

TAMILMURASU-SINGAPORE.

எப்பதான் ஏற்பார்கள் இவர்களுக்கு அடி போல அண்ணன் தம்பி உதவதுதான் சரி

இந்தியாக்கு எப்ப தான் இலங்கை மரியாதை கொடுத்து இருக்கு??

இந்தியா அப்படி ஒரு நினைப்பில் இருக்கு ஆனா உண்மை நிலமை வேறு :!: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.