Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளை அழித்தொழித்த சிறிலங்காவின் திட்டத்தை தனது நாட்டில் செயற்படுத்தும் பாகிஸ்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Baloch%20activists.jpg

விடுதலைப் புலிகளை படுகொலை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய திட்டம் வகுத்ததோ, அதையொத்த திட்டத்துடன், பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் [balochistan] மாகாணத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலூச் [baloch] செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்வதற்கு பாகிஸ்தான் இாணுவம் பாகிஸ்தான் அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளமை தொடர்பில் தனது அதிருப்தியை பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் கலாநிதி நசீர் எஸ் பாற்றி வெளியிட்டுள்ளார். 

பாகிஸ்தானின் பாதுகாப்புத் தொடர்பில் இரு வெவ்வேறு திட்ட வரைபுகள், அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது கையளிக்கப்படவுள்ளதாகவும், மத அமைப்புக்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அயர்லாந்துத் திட்டம் மற்றும் விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான சிறிலங்காவின் திட்டம் ஆகிய இரண்டும் பாகிஸ்தானில் செயற்படும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான பாதுகாப்புக் கோட்பாடாக பாகிஸ்தான் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானின் எல்லையோர பழங்குடிகளின் அமைப்பான தெஹ்ரேக் தலிபானுடன் [Tehreek Talban Pakistan - TTP] விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கமானது ஐரிஸ் சமாதானத் திட்டத்தையும் இதேபோன்று பலூச்சிஸ்தான் மாகாணத்தில் செயற்படும் பலூச் செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ்ப் புலிகளைப் படுகொலை செய்வதற்காக கைக்கொள்ளப்பட்ட திட்டத்தையும் பாகிஸ்தானிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் திட்டமிடுவதாக கலாநிதி நசீர் பாற்றி சுட்டிக்காட்டியுள்ளார். 
பலூச்சிஸ்தான் மலைகளை மையமிட்டு செயற்பட்ட நவாப் அக்பர் புக்ரியின் கோரிக்கைகளை செவிமடுத்து அவருடன் பேச்சுக்களை நடாத்துவதற்குப் பதிலாக சீனாவால் வழங்கப்பட்ட தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இராணுவத்தால் இவர் படுகொலை செய்யப்பட்டார். 

சீன ஆயுதங்கள் மற்றும் தொழினுட்பங்கள் போன்றன பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்ப்பட்டு பின்னர் அங்கிருந்து சிறிலங்காவுக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் இவை தமிழ்ப் புலிகளை படுகொலை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் போரில் ஈடுபட்ட தமிழர்களின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டதுடன், தமிழர் வாழும் இடங்களில் சிறிலங்கா இராணுவமானது பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது எனவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

பாகிஸ்தானைச் சேர்ந்த 45,000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்துள்ள தெஹ்ரேக் தலிபான்களுடன் பாகிஸ்தான் அரசாங்கமானது பேச்சுக்களை நடாத்த விரும்பும் அதேவேளையில், பலூச்சிஸ்தானில் செயற்படும் பலூச் செயற்பாட்டாளர்களை படுகொலை செய்ய விரும்புவதாகவும் நசீர் பாற்றி சுட்டிக்காட்டியுள்ளார். 

தெஹ்ரேக் தலிபான் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுடன் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு பேச்சுக்களை நடாத்த முன்வரும் பாகிஸ்தானிய அரசாங்கமானது பலோச் சுதந்திரப் போராளிகளைப் படுகொலை செய்யத் திட்டமிடுவது ஏன் என்பது தொடர்பில் பாகிஸ்தானைச் சேர்ந்த அனைத்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கேள்வியெழுப்ப வேண்டும் என கலாநிதி நசீர் பாற்றி வலியுறுத்தியுள்ளார். 

செய்தி வழிமூலம் : Balochwarna Online News 

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140122109824

  • கருத்துக்கள உறவுகள்

என்ன திட்டம் என்றாலும்.. பாகிஸ்தானின்.. பூகோள நிலை.. இதில் தோல்வியையே தரும். ஏனெனில்.. புலிகள் தோற்கடிக்கப்பட்டதில்.. சிறீலங்காவின் திட்டம் எதுவும் இல்லை. சர்வதேசம்.. புலிகளுக்கான கடல்வழியை அடைத்ததே முக்கிய காரணம். அது ஆப்கானில்.. பாகிஸ்தானில் நடக்க முடியாது. இரண்டிலும் தலிபான்கள் தாக்குப்பிடிப்பார்கள். எதிரியை அழிப்பார்கள். ஈராக்கிலும் அதே நடந்தது..! புலிகள்.. ஒரு தீவில் அம்பிட்டதால்.. சில விடயங்கள்...நவீன தொழில்நுட்ப பலசாலிகளுக்கு சாதகமாகின. ஆனால்.. தலிபான்களின் பூகோளம் அப்படியான ஒன்றல்ல. தம்மை அழிப்பவனை.. தலிபான்கள் அழிப்பார்கள். :icon_idea:

Edited by nedukkalapoovan

என்ன திட்டம் என்றாலும்.. பாகிஸ்தானின்.. பூகோள நிலை.. இதில் தோல்வியையே தரும். ஏனெனில்.. புலிகள் தோற்கடிக்கப்பட்டதில்.. சிறீலங்காவின் திட்டம் எதுவும் இல்லை. சர்வதேசம்.. புலிகளுக்கான கடல்வழியை அடைத்ததே முக்கிய காரணம். அது ஆப்கானில்.. பாகிஸ்தானில் நடக்க முடியாது. இரண்டிலும் தலிபான்கள் தாக்குப்பிடிப்பார்கள். எதிரியை அழிப்பார்கள். ஈராக்கிலும் அதே நடந்தது..! புலிகள்.. ஒரு தீவில் அம்பிட்டதால்.. சில விடயங்கள்...நவீன தொழில்நுட்ப பலசாலிகளுக்கு சாதகமாகின. ஆனால்.. தலிபான்களின் பூகோளம் அப்படியான ஒன்றல்ல. தம்மை அழிப்பவனை.. தலிபான்கள் அழிப்பார்கள். :icon_idea:

இது இந்திய கொன்கிரசால் நடத்தப்படும் இன்னொரு ஜெனோசைட்.

பலோகிஸ்தான் மக்களை போராட தூண்டிவிட்டு குளிர் காய்கிறார்கள்.

பலோகிஸ்தான் பயங்கரவாத தலைவர் காயப்பட்ட போது இந்தியாவில் தான் சிகிச்சை அளித்து சண்டை வளர்த்தார்கள்.

இந்திய கொங்கிரசை நம்பி நிறைய பலொக் மக்கள் சாகபோகிறார்கள்.

நீங்கள் கூறியது போல் இஸ்லாமிய போராளிகள் மறைந்துவிடுவார்கள்.

சாகும் வரை நின்று போராடும் படை, தமிழர் படை மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.