Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியர் பெண்ணை காதலித்த தலித் வாலிபரின் வீடு எரிப்பு: மீண்டும் ஒரு தர்மபுரி சம்பவமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரியலூர்: வன்னியர் சமூகத்தை சேர்ந்த பெண்ணும், தலித் வாலிபரின் காதல் விவகாரத்தால் வீடு தீவைக்கப்பட்டுள்ளது இரு சமூகத்தினர் இடையே மோதல் போக்காக மாற தொடங்கியுள்ளது. தர்மபுரி சம்பவம் போலவே மீண்டும் அரியலூர் மாவட்டத்திலும் தலை எடுக்க தொடங்கியுள்ளது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

thalith%20house%20fire%201.jpg

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் பாலமுருகன். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகள் தமிழரசி. இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். பாலமுருகனும், தமிழரசியும் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததாக கூறப்படுகிறது. தமிழரசிக்கு மூன்று மாதத்திற்கு முன்பு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு நிச்சயம் செய்துள்ளனர். வரும் 6ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

 

thalith%20house%20fire%202.jpg

இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழரசி, தனது வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணம், 2 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த செல்போனுடன் மாயமானதாக கூறப்படுகிறது. அதே தினத்தில் பாலமுருகனும்  காணவில்லையாம்.

இது தொடர்பாக பாலமுருகனின் தாயார் வசந்தா நேற்று மாலை இரும்புலிக்குறிச்சி காவல்நிலையத்தில், என் மகனை காணவில்லை என புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாலமுருகனின் வீட்டிற்கு பாதுகாப்பு போட்டிருந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு 4 மணியளவில் பாலமுருகனின் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த கீற்றுக்கொட்டகை தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தீயை போராடி அணைத்தனர்.

 

thalith%20house%20fire%203.jpg

இது குறித்து காவல்துறையினரிடம் பேசிய போது, "இது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்ததும் சொல்கிறோம்" என்று முடித்தனர்.

 

 

காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்ட இடத்திலேயே மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காவல்துறையினர் எல்லா பிரச்னைகளும் முடிந்த பிறகு வராமல் பிரச்னையை சுமுகமாக முடித்தால் தர்மபூரி போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கலாம்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=23774

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.