Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டியுங்கள்: யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
srilankan-black-day-040214-news.jpg

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தாயகத்திலும் தமிழகத்திலும் பன்னாடுகளிலும் உள்ள தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்காவின் சுதந்திர தினமானது சிங்கள மக்களுக்கு மட்டுமானது. தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை. விரைவில் எங்களுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு பன்னாட்டு அரசுகள் ஆவன செய்யவேண்டும் என்று இன்றைய கரிநாள் மூலமாக அனைத்து தமிழ் மக்களும் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்றும் யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

  

தமிழ் மக்களைக் கொன்றொழித்து அடிமைகொள்ளத் துடிக்கின்ற சிறிலங்காவின் சுதந்திர தினமாக இன்று செவ்வாய்க்கிழமையை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஸ்டிக்க வேண்டும். தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்ற தமிழ் மக்கள் இன்று தமது சட்டையில் கறுப்புப் பட்டிகளை அணியவேண்டும். அலுவலங்களில் பணியாற்றுவோரும் மாணவர்களும் பொதுமக்களும் இந்தக் கறுப்பு பட்டியணிந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்படி பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மேற்படி பேரவை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா தீவில் வாழ்கின்ற சிங்களவர்கள் பிரித்தானியர்களுடன் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் மூலமாக கடந்த 1948 ஆம் ஆண்டு பெற்ற சுதந்திரத்தை தங்களுக்குரியதாக மாற்றிக்கொண்டனர். சிறிலங்காவிற்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தமைக்கு அப்போதைய தமிழ் மக்களின் கணிசமான பங்கும் இருந்தது. அப்போதிருந்த தமிழ் மன்னர்களும் மக்களும் பிரித்தானியர்களுடன் போரிட்டுத்தான் சிறிலங்காவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தனர். ஆனால், அந்த சுதந்திரத்தை தமிழ் மக்கள் அனுபவிப்பதற்கு சிங்களவர்கள் இன்றுவரை அனுமதிக்கவில்லை.

1948 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழ் மக்கள் சிறிலங்காத் தீவில் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். இனத்தாலும், மொழியாலும், மதத்தாலும் கலை, கலாசாரங்களாலும் தமிழ் மக்கள் இங்கே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவற்றிலிருந்து விடுதலை வேண்டுமென்று தமிழ் மக்கள் மேற்கொண்ட ஜனநாயக வழிப் போராட்டங்களும் ஆயுத வழிப் போராட்டங்களும் சர்வதேசங்களின் பேராதரவுடன் சிறிலங்கா படைகளாலும் சிறிலங்கா அரசாங்கங்களினாலும் அடக்கப்பட்டிருக்கின்றன. இறுதியாக முள்ளிவாய்காலில் எமது லட்சக்கணகான உறவுகளைப் பலியெடுத்து பசியாற்றிய பின்னரும் சிங்களத்தின் இனவெறி அடங்கவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்களைப் பலியாக்கி பசியாற்றுவதற்காக சிங்களம் நாயாய் அலைகிறது.

எனவே, அன்பிற்குரிய தாயக, புலம்பெயர், தமிழக உறவுகளே,

சிறிலங்காவின் சுதந்திர தினமாகிய இன்று செவ்வாய்க்கிழமை நீங்கள் அனைவரும் உங்கள் சட்டையில் கறுப்புப் பட்டி அணிந்து சிறிலங்காவிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். பன்னாட்டு ரீதியாக ஏற்படுகின்ற இந்த எதிர்ப்பு அலையானது சிறிங்காவை அள்ளிச் செல்லட்டும். சிறிலங்காவின் இனவெறியை அடக்குவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். இந்த ஒன்றுபடுதலின் வெளிப்பாட்டை இன்றைய கறுப்புப்பட்டி போராட்டம் மூலம் எடுத்துரைப்போம் என்று யாழ். மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=102889&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.