Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை செஞ்சிலு

Featured Replies

இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேசத் தொண்டு அமைப்புக்கள் மூலம் வழங்க வழிவகை காண வேண்டும் என்று இந்திய அரசை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேடு வலியுறுத்தியுள்ளது.

"தினமணி" நாளேட்டில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான ஆசிரிய தலையங்கம்:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நோர்வேயின் முன்முயற்சியில் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்துவிட்ட சூழ்நிலையில் இரு தரப்புக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது.

இதனால் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப் பகுதிகளில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து தமிழர்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளத் தமிழகம் நோக்கி அகதிகளாக வரும் அவல நிலை தொடர்கிறது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை மண்டபம் முகாமிற்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர்.

இலங்கையின் இனப் பிரச்சினை தீவிரமடையும்போதெல்லாம் அதன் எதிரொலிகள் தமிழகத்திலும் கேட்கத் தொடங்கி விடுவது வழக்கம். அதேபோல தற்போது இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தில் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்குவது உள்பட எந்தவித இராணுவ உதவியையும் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி எதையும் அளிக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே விடுதலைப் புலிகளுடன் போரை விரும்பவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ள போதிலும் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

"இலங்கை இனப் பிரச்சினைக்கு சண்டை சரியான தீர்வாகாது. ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் சிறந்த வழி' என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஷியாம் சரண் கூறியுள்ளதும் கருதத்தக்கது.

புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் மோதல்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வரும் தமிழர்களுக்குப் புகலிடம் அளிப்பதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு கருதக் கூடாது.

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் தனது பங்களிப்பைச் செலுத்த முன்வர வேண்டும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்குச் சர்வதேச நாடுகள் வழங்கிய உதவிகள் சென்றடையவில்லை என்று புகார்கள் உள்ளன.

இந்நிலையில் தற்போது இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேசத் தொண்டு அமைப்புகள் மூலம் வழங்க வழிவகை காண வேண்டும்.

இந்தியாவுக்கு வரும் அகதிகளுக்கு வழங்கப்படும் படியைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசும் இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்கள் இங்கு இருக்கும்வரை கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கேற்ற வசதிகளைச் செய்வதில் மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினை முடிவுக்கு வருவதற்குரிய ஒரே வழி, இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதுதான். இதற்கு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.

அதற்கான நிர்பந்தத்தை இருதரப்புக்கும் ஏற்படுத்த வேண்டும். இருதரப்பும் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவித்து அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28580

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினமணி தினமும் ஏதோ கிறுக்குது, திருந்தாது இந்திய அதிகாரிகள் சிலது எப்பிடி திருந்தும், இப்பவும், வை.கோவை வைக்கோணும் உள்ள என்று நிக்குதுகள்.

உதுகள் திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கில்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.