Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர வேண்டும்': காங்கிரசுடன் கூட்டணிக்கு கருணாநிதி நிபந்தனை

Featured Replies

Tamil_News_large_911344.jpg

 

ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா கொண்டு வர வேண்டும். அப்படியொரு நிலையை இந்தியா எடுக்குமானால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், மீண்டும் தி.மு.க., இணைவதற்கான வாய்ப்பு உருவாகும்; தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் கிடைக்கும் என, காங்கிரஸ் தலைமைக்கு, தி.மு.க., திடீர் நிபந்தனை விதித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தூதராக, டில்லியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க., நிலை குறித்து, சில விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளார்.

நெருக்கடிகள்:

அப்போது, 'இலங்கைக்கு எதிரான தீர்மானம் போன்ற நடவடிக்கைகள் தான், கூட்டணி வாய்ப்பை உருவாக்கும் எனவும், இதை விடுத்து, தி.மு.க.,வுக்கு தனிப்பட்ட நெருக்கடிகள் கொடுப்பதால், இரு கட்சிகளுக்குமே, அது தேர்தலில் பாதிப்பை தான் ஏற்படுத்துமே தவிர, பலனை தராது' என்றும், ராகுலிடம் அவர் விளக்கியுள்ளார். தமிழகத்தில், வேறு கூட்டணி வாய்ப்புகள் இல்லாத நிலையில், காங்கிரசுக்கு மீண்டும் தி.மு.க.,வுடனான உறவை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணி சேர்வதற்கு, காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இந்த தகவலை, ராகுலை சந்தித்து தெரிவிக்கும்படி, திருமாவளவனிடம் கருணாநிதி கூறியிருக்கிறார். அவரது அறிவுரைபடியே, ராகுலை சந்தித்து திருமாவளவன் பேசியுள்ளார். இந்த தீர்மானத்தை, இந்தியா முன்னெடுத்து சென்றால், தமிழகத்தில் காங்கிரசுக்கு இருக்கும், அவப்பெயர் நீங்கி விடும் எனவும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்ட ணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனவும், ராகுலிடம் திருமாவளவன் விளக்கியுள்ளார்.

மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், சோனியாவின் தூதராக, கடந்த மாதம், சென்னை வந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்துச் சென்றார். அதன்பின், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட, தமிழக தலைவர்களும், தி.மு.க.,வுடன் உறவை புதுப்பிக்க, முயற்சித்து வந்தனர். தி.மு.க.,விலும் கனிமொழி உள்ளிட்ட சில தலைவர்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக, பச்சைக் கொடி காட்டுகின்றனர். ஆனாலும், தி.மு.க., பிடிவாதம் தளராததற்கு காரணம், ஸ்டாலின் எதிர்ப்பு மட்டுமல்ல; எதை சொல்லி, காங்கிரஸ் கூட்டணியை நியாயப்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளதும், முக்கிய காரணம்.

சந்திப்பு:

இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்த, தி.மு.க., எடுத்த நடவடிக்கைகளுக்கு, பெரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை. தே.மு.தி.க.,வை இழுக்க மேற்கொண்ட முயற்சிகள், இழுபறியில் உள்ளன. எனவே, தற்போதுள்ள கூட்டணிக்கு, ஜாதி, மதச் சார்பற்ற அணி என்ற முகத்தை ஏற்படுத்த வேண்டு மானால், காங்கிரஸ் உறவு அவசியம் என்ற நிலையில், தி.மு.க., உள்ளது. எனவே, மீண்டும் காங்கிரசுடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புகளை, தி.மு.க., தலைமை பரிசீலிக்கத் துவங்கியுள்ளது எனவும், அதன் வெளிப்பாடு தான், டில்லியில் நடந்த சந்திப்பு எனவும், தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது: கடந்த 1ம் தேதி, சென்னையில் டெசோ அமைப்பின் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். அதில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, அடுத்த மாதம், ஐ.நா., சபையில் விவாதம் நடத்தப்பட உள்ளது. அப்போது, இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உதாரணம்:

இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், காங்கிரசுடன் கூட்டணி சேர்வதற்கு, எந்த தடையும் இருக்காது என, கருணாநிதி கருதுகிறார். இந்த காரணத்தை சொல்லி, கூட்டணியை நியாயப்படுத்தி விட முடியும் எனவும் அவர் நம்புகிறார். மோடி பிரதமராவதை தடுக்க வேண்டும் என, காங்கிரஸ் நினைக்கிறது. அதை செயல்படுத்துவதற்கு, கருணாநிதியின் யோசனையை காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும். இதை விடுத்து, தி.மு.க.,வுக்கு தனிப்பட்ட நெருக்கடிகள் கொடுப்ப தன் மூலமாக, கூட்டணிக்கு இழுத்து விடலாம் என, கருதினால், அது, இரு கட்சிளுக்குமே தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்; அதற்கு சரியான உதாரணம், கடந்த சட்டசபை தேர்தல் என்ற கருணாநிதியின் கருத்தையும், ராகுலிடம் திருமாவளவன் எடுத்துக் கூறியுள்ளார்.

சந்தேகம்:

மேலும், '2ஜி' விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது. அந்த கட்சி, டில்லியில் ஆட்சி புரிய ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், அதற்கு பிரதிபலனாக, தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த, அக்கட்சியை தூண்டி விடுகிறதோ என்ற சந்தேகமும், தி.மு.க.,வுக்கு உண்டு. அது பற்றியும், ராகுலிடம் திருமாவளவன் பேசியுள்ளார். இவ்வாறு, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=911344

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.