Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரத் தயாராகி வரும் நிலையில்: இந்தியா எதற்காக இந்த வழமைக்கு மாறான நகர்வில் இறங்கியது � இதன் ஊடாக புதுடெல்லி வெளிப்படுத்த விரும்பிய செய்தி என்ன?

Featured Replies

sri-india.jpg

இந்தியா சொல்ல வரும் செய்தி என்ன?

  • ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரத் தயாராகி வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தினால் கடந்த வாரம், 20 ஊடகவியலாளர்கள் கொழும்பில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பில் முக்கியமான ஊடகங்களின் மூத்த ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜெனிவா தீர்மானத்துக்கான தயார்படுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொழும்பு ஊடகவியலாளர்கள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. 

    புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கொழும்பு ஊடகவியலாளர்கள் குழுவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் உள்ளிட்ட அதிகாரிகள் சகிதம் சந்தித்தார். மிகவும், பொறுமையாகவும், விரிவாகவும் அவர் கொழும்பு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார். இந்தியா எதற்காக இந்த வழமைக்கு மாறான நகர்வில் இறங்கியது � இதன் ஊடாக புதுடெல்லி வெளிப்படுத்த விரும்பிய செய்தி என்ன என்பது இங்கு ஆராய வேண்டிய விடயம். இந்தத் தருணத்தில் புதுடெல்லி எதையோ ஒன்றைச் சொல்ல வருகிறது என்பதை சாதாரணமாக எவராலுமே புரிந்து கொண்டு விட முடியும். அதைச் சொல்வதற்கு கொழும்பில் தருணம் கிடைக்க வாய்ப்பில்லாத சூழலில் தான், இங்கிருந்து ஊடகவியலாளர்கள் குழு அங்கு அழைத்துச் செல்லப்பட்டது. 

    ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து இந்தியா எந்த முடிவையும் எடுக்கவில்லை என்ற போதிலும், இலங்கையின் மீது அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை அது விரும்பவில்லை என்பதை, சல்மான் குர்ஷித்தின் கருத்துகளில் உணர முடிகிறது. கடந்தமுறை ஜெனிவா தீர்மானத்தை இந்தியாவே நீர்த்துப் போகச் செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இந்த முறை இந்தியாவினால், ஒரு எல்லைக்கு அப்பால் சென்று இலங்கைக்கு உதவமுடியாது.      

    வெளிப்படையாக சொல்வதானால், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா எதிர்த்தால், அது காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அமைக்கப் போகும் கூட்டணிக்கும், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, இலங்கைக்கு வெளிப்படையாக உதவ முடியாத நிலையில் உள்ள இந்தியா, இன்னொரு பக்கத்தில், சர்வதேச சமூகத்துடன் முரண்போக்கை கடைப்பிடிக்கும் இலங்கையை அந்த வழியில் இருந்து திருப்பவும் எத்தனிக்கிறது. அதை வெளிப்படையாகவே சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். உலக நாடுகளுடனும், மக்களுடனும், மோதல் போக்கை கைவிடுவதற்குச் சாத்தியமான வழிகளை இலங்கை கண்டறிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானங்கள் குறித்து பல பக்கங்களிலும் சிந்திக்கிறது. 

    ஒருபக்கத்தில் அது, போரினால் - மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் காயங்களுக்குப் பதில் சொல்லியாகி வேண்டும் என்கிறது. 

    இன்னொரு பக்கம், சர்வதேச சமூகத்துடன் இலங்கை முரண்படக் கூடாது என்கிறது.

     மற்றொரு பக்கம், சர்வதேச சமூகம் இலங்கைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் கூறுகிறது. 

    இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்தியா ஒரு குழப்பமான நிலையில் இருப்பதாக- இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு பக்கம் சார்ந்து நிற்காமல் தம்மை, மிகச் சிறந்த நடுநிலையாளராக காட்டிக் கொள்ள முனைகிறது என்பது புலப்படும். 

    போர் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்களிடம் ஆறாக வடுவாக உள்ள காயங்கள், அவற்றுக்கு உகந்த மருந்திடப்படாமல் ஆறப் போவதில்லை என்பதை இந்தியாவுக்க உணர்த்தியிருக்க வேண்டும். அதுபோலவே, இந்தப் பெரிய காலஇடைவெளியை, பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றி தமிழர்களை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தவறிய, இலங்கை அரசின் நிலையையும் இந்தியா முழுமையாக விளங்கியிருக்க வேண்டும். இத்தகைய கட்டத்தில், இந்தியா இரண்டு தரப்புக்கும் விலாங்கு மீன் போன்று தலையையும் வாலையும் காட்டுவதை விட வேறு வழியில்லை. இந்தநிலையில், மூன்றாவது தரப்பான, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகினது நடவடிக்கைகளை தடுக்கவும் முடியாத - ஏற்றுக் கொள்ளவும் முடியாத இக்கட்டான நிலைக்குள்ளேயும் இந்தியா சிக்கியுள்ளது.  இந்தியாவினது இந்தக் கையறு நிலையை கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு வெளிப்படுத்துவது சவுத் புளொக்கின் நோக்கமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அது இந்தியாவைப் பலவீனமான நாடாகவே வெளிப்படுத்தும். அவ்வாறாயின், கொழும்பு ஊடகவியலாளர்களின் மூலம் புதுடெல்லி சொல்ல வந்துள்ள செய்தி என்ன என்ற கேள்வி எழுகிறது.  

    இலங்கை அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா கூற முற்படுவதாகவே தோன்றுகிறது. அதாவது, மனிதஉரிமை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியதே தவிர, தட்டிக் கழிக்கப்படக் கூடியதல்ல என்று தெளிவாக கூறுகிறது இந்தியா. அதற்கு நம்பகமான வழிமுறையில், சர்வதேச சமூகத்தைப் பகைத்துக் கொள்ளாமல், நடுநிலையாக செயற்பட வேண்டும் என்றும் அது கூறமுற்படுகிறது. ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முதலீடாகப் பயன்படுத்த முனைகிறது. மீண்டும், தன்னை மின்சாரக் கதிரைக்கு கொண்டு செல்ல முனைகிறார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேசத் தொடங்கியுள்ளார். அதேவேளை, யாருக்கும் அடிபணியப் போவதில்லை என்றும் அவர் கூறி வருகிறார். சதாம் ஹுசேன், கடாபி, போன்றவர்களை நினைவுபடுத்தும் அரசாங்கம், தம்மையும் அவ்வாறே அமெரிக்கா பழிவாங்க முற்படுவதாக சிங்கள மக்களிடையே எடுத்துக் கூறி வருகிறது. இந்தப் போக்கு, நல்லிணக்கத்துக்குப் பதிலாக, சிங்களத் தேசியவாத சிந்தனைகளையே கூர்மைப்படுத்தி வருகிறது, இது ஆபத்தானது என்பதை இந்தியா உணர்வதாக தெரிகிறது. இத்தகைய பிரசாரங்களை தடுத்து, அரசாங்கம் மென்போக்குடன்- ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த கொழும்பு ஊடகங்களை புதுடெல்லி பயன்படுத்த முயன்றுள்ளதாகத் தெரிகிறது.  

    உலகத்தில் இருந்து இலங்கை தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது என்று சல்மான் குர்ஷித் குறிப்பிட்டது, அத்தகைய தனிமைப்படுத்தலை இந்தியா விரும்பவில்லை என்பதற்கான அடையாளமே. அத்தகைய சூழலை ஏற்டுத்தாமல் தடுப்பதற்கே இந்தியா முனைகிறது. அதற்கு கொழும்பு ஊடகங்களைப் பயன்படுத்த புதுடெல்லி முனைந்திருக்கலாம். எவ்வாறாயினும், இதனை அரசாங்கத்திடம் கூறாமல், ஊடகங்களிடம் கூற புதுடெல்லி முனைந்திருக்காது. அரசாங்கம் இதனை நிராகரித்த நிலையில் தான், ஊடகங்களின் மூலம் அழுத்தம் ஏற்படுத்த இந்தியா முனைந்திருக்கலாம். இந்தநிலையில், ஊடகங்களின் ஊடாக இந்தியா முன்வைத்துள்ள இந்தக் கருத்துகளை கொழும்பு எந்தளவுக்கு கருத்தில் கொள்ளும் என்பதைப் பொறுத்தே இந்தியாவினது அடுத்த நகர்வுகள் தீர்மானிக்கப்படலாம்.

தொல்காப்பியன்.

 

எல்லாமே சும்மா ஒரு பில்டப் தான். இந்தியா உண்மையிலே ஒன்றுமே செய்யதேவையில்லை. இது இந்தியா எலக்சனுக்கு குடுக்குற பில்டப். இம்முறையும் வழமை போல மேலை நாடுகள் ஒரு கண்டன தீர்மானம் ஆழ்ந்த வருத்தம் கவலையடைவதோடு எல்லாம் சரி. மஹிந்த இவங்களை கணக்கிலே எடுக்கபோவதில்லை. மஹிந்தவுக்கு பின்னால் சீனா முழு ஆதரவு தரும் போது மஹிந்தவை ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது. தலைவர் ஒருவரை தவிர. இது தான் நிதர்சனம் நடைமுறை யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே சும்மா ஒரு பில்டப் தான். இந்தியா உண்மையிலே ஒன்றுமே செய்யதேவையில்லை. இது இந்தியா எலக்சனுக்கு குடுக்குற பில்டப். இம்முறையும் வழமை போல மேலை நாடுகள் ஒரு கண்டன தீர்மானம் ஆழ்ந்த வருத்தம் கவலையடைவதோடு எல்லாம் சரி. மஹிந்த இவங்களை கணக்கிலே எடுக்கபோவதில்லை. மஹிந்தவுக்கு பின்னால் சீனா முழு ஆதரவு தரும் போது மஹிந்தவை ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது. தலைவர் ஒருவரை தவிர. இது தான் நிதர்சனம் நடைமுறை யதார்த்தம்.

ஆனாலும் நாடகத்தின் இந்தக்காட்சியும் அரங்கேறித்தானே ஆகவேண்டும்..?? கொஞ்சக்காலத்தில் களைச்சுப்போய்.. அடப்போங்கப்பா என்று ஓரமாப்போய் குந்திவிடுவார்கள்.. :D

ஒன்றுமட்டும் விளங்கவில்லை.

சிறி லங்காவில் சுதந்திர ஊடகம் என்று ஒன்றில்லை. ஊடக சுதந்திரத்தில் சிறி லங்கா 165 இடம்.

வந்த குழுவோ கொத்தியின் விளம்பர லவுட் ஸ்பீக்கர்ஸ்.

இவர் நேரடியா கொத்திக்கு போன் போட்டிருக்கலாம்.

இது தாங்களும் எதோ செய்கிறோம் என்று காட்ட நடத்திய நிகழ்வாக இருக்கலாம்.

இந்தியா சிறீ லங்கா சார்பாக நடக்க இருந்தால் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்தியா சிறிலங்கா சார்ப்பாக வாக்களித்த பின் மஹிந்தவே இந்தியா எங்கள் நன்பன் என்று குத்திமுறிந்திருப்பான்.
 
ஆனால் இந்தியா எதிராக வாக்களித்த பின் என்ன முதுகில் குத்திவிட்டீர்கள் என்று சிறி லங்கா கேட்க முடியாது. ஏற்கனவே சொல்லி விட்டோம் என்ற பதில் வரும்.
 
இந்த ஊடகவியலாலர் சந்திப்பு சிறிலங்கா தமிழர் பிரச்சனைய தீர்ப்பதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்புவதற்கான ஒரு பாதை இருப்பதை பொதுமக்களுக்கு காட்டுவதாக இருக்கலாம். 
 
அதே நேரம் மஹிந்தவின் இந்திய எதிர் பிர‌சார முறியடிப்பாகவும் இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.