Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதேசவாதம் வேறு!!! பிரதேச நலன் வேறு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரதேசவாதம் வேறு!!! பிரதேச நலன் வேறு

எதோ ஒரு பத்திரிகையில் தீவகப் பிரதேசங்கள் ஒன்றாக இணைந்து அமைப்பொன்றை நிறுவுகின்றார்களாகவும் அது கருணாசியத்தை வளர்ப்பதற்கு உதவுவதாகவும் வெறும் உதவாக்கரை கருத்துக்களோடு கட்டுரையொன்று வந்துள்ளது. யாழ்ப்பாணத்தை சுற்றி அமைந்துள்ள எதோ ஒரு தீவில் பிறந்தவன் என்கின்ற முறையிலும், தேவையற்றதற்கெல்லாம் கருணாவின் பெயரை தொடர்புபடுத்தும் புல்லுரிவிகளின் நோக்கத்தையும் தோலுரித்துக்காட்டுவது தான் இந்தக் கட்டுரையின் (??) உள்நோக்கம்.

எதற்கெடுத்தாலும் தீவகப் பிரதேசங்கள் அன்று தொட்டு இன்று வரை தமிழ் தேசியம் வளர்க்கும் தம்பிமார்களின் விளையாட்டுக்களுக்கு ஆளாகிக்கொண்டே வருகின்றது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கோண்டாவில், கோப்பாய் போன்ற பிரதேசங்களுக்காக அமைப்புக்கள் உருவாக்கப்படும் போது உருவாகாத கருணாசியம் இந்த தீவங்களின் ஒன்றிணைந்து அமைப்பை நிறுவியபோது உருவாகியுள்ளது தான் எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. உள்நோக்கத்தை அறிந்துகொள்ள ஆசைகொள்கிறது மனம்.

சில தமிழீழ சம்பந்தமான நிகழ்வுகளில் வைக்கப்படும் தமிழீழ வரைபடங்களில்,ரியிபோமில் செய்தவைகளில் எமது தீவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் (தவிர்க்கப்படும);. சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவை தவறுதலாக விடுபட்டதாகவும் சொல்வார்கள். யாராவது யாழ்ப்பாணத்தை தவறுதலாக விட்டு தமிழீழப் படத்தை வரைந்திருக்கின்றார்களா? இதை வாசிக்கும் நீங்களும் அருகிலிருக்கும் தமிழீழத்தின் வரைபடத்தை உற்றுப்பாருங்கள். எங்கள் அழகான தீவுகள் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்றதா? அவை கடைசியாக வெளிவந்த கட்டுரையாளர்களைப் போன்றவர்களினால் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கலாம். எதோ இந்த தீவகப்பிரதேசங்கள் இந்தியாவுக்கு சொந்தமாகவும் அது தமிழீழத்திற்கு சொந்தமற்றவையாகவும் இவர்களின் கட்டுரை கதை சொல்கின்றது. கருணா தான் இந்த அமைப்பை வழி நடத்துவதாகவும் அது பிரதேச வாதத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் சொல்லவருகின்றது. விட்டால் பொலநறுவைக் காட்டுக்குள்ளே கருணா தீவக இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதாகக் கூட சொல்வார்கள்.

வேதனை என்னவென்றால் பிற பிரதேசங்களுக்காக உருவாகிய அமைப்புக்கள் இந்த கருணாவை ஞாபகப்படுத்தவில்லை.

பிடிக்கின்றதோ இல்லையோ சிலரின் பிரதேசவாதம் மற்றும் தாம் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்கின்ற உணர்வுகளும் தான் எமக்குள்ளே பல பிரிவினைகளை உருவாக்கிக்கொண்டு செல்வதற்கு காரணமாகும்.

இந்த தீவகங்கள் ஒன்றிணைவதில் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும்?

மற்றைய பிரதேசங்கள் மாதிரி தீவகங்கள் பல வசதிகள் அற்று அன்று தொட்டு இன்று வரை இருக்கின்றது. பல பிரச்சனைகள் தீவகங்களின் புூலோக அமைப்பினால் உருவானவை. அவை தீவகங்களுக்கு மட்டுமே பொதுவான பிரச்சனைகள். நான்கு பக்கங்களும் கடலால் சுூழப்பட்டிருப்பதால் மற்றைய பிரதேசங்களையும் விட பத்து மடங்கு இன்னல்களை இவர்கள் அனுபவிக்கின்றனர். குறைவான வசதிகளோடு சுதந்திரப் போராட்டக் காலங்களுக்கு முன்னாலிருந்தே அனுபவித்துக்கொண்டிருக்கின்

ராஜ்குமார் இது பற்றி முன்னர் வந்த கட்டுரைக்கும் உங்கள் கட்டுரைக்கும் கனக்க வேறு பாடு கிடையாது.இது பற்றி ஆறுதலாக எழுதலாம் என்று இருந்தேன், ஆனால் பிரச்சினை முற்றும் போல கிடக்கு அதானால் சில வரிகள், நேரம் இல்லாத போதும் அவசரமாக.

முதலில தீவக மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன்,அதற்காக ஒரு அமைப்பு மற்ற ஊரவரைப் போல் தேவை என்பதையும் ஒத்துக் கொள்கிறேன், ஏனெனில் நானும் தீவகத்தைச் சேர்ந்தவன், எனக்கு அங்கு உள்ள பிரச்சினைகள் தெரியும்.

இந்த அமைப்பு அங்கிருக்கும் மக்களுக்கு இங்கிருந்து உதவிகள் செய்வது என்பதற்காக என்றால் அது வரவேற்க்கத்தக்கது.தத் தமது பிரதேச நலனில் அக்கறை உள்ளவர்களாக புலத் தமிழர்கள் இருப்பது அவசியம்.தேசயத் தலைவர் அவர்களும் இதனைப் பல முறை கூறி உள்ளார்.தனது தாயை நேசிப்பவன் தான் தாய் நிலத்தையும் நேசிப்பான்.தனது ஊரை உற்றாரை நேசிப்பவன் தான் தமிழ் ஈழத்தையும் தமிழ் ஈழ மக்களையும் நேசிப்பான்.ஆனால் இந்த நேசம் என்பது வெறி ஆகக்கூடாது. நேசம் எப்போது வெறி ஆகிறது? நான் எனது என்பது மற்றவனை அடக்க மற்றவனைத் தாழ்த்தப்பயன் படுத்தப் படப் போகும் போது தான் இந்த வெறி வருகிறது.இது வெறி யூட்டல் தான்.வெறி ஊட்டுபவனுக்கு தனது நிலத்தில் உண்மையான அன்போ நேசமோ கிடையாது.அவன் வெறி ஊட்டுவது மக்களைத் திசை திருப்பி தனது சொந்த நலங்களைத் தக்க வைக்கவே.கருணா விடயத்தில் , ஏன் சிங்கள ஆட்ச்சியாளர்கள் விடயத்திலும் அது தான் நடந்தது, நடக்கிறது.தமிழ் ஈழம் என்பதே பிரதேச வாதம் தான்.அது இலங்கைத் தீவில் ஏற்படக் காரணம் ஆனது சிங்கள பவுத்தம் என்கின்ற அடக்கு முறை வெறுயூட்டல் தான்.தமிழர் என்கின்ற காரணத்திற்காகத் தான் நாம் எல்லாரும் அடக்கப் பட்டோம்.எமது வளங்கள் எந்த விதப் பாகுபாடும் இன்றி சுரண்டப்பட்டது.அதனால் தான் தமிழ் ஈழம் என்கின்ற கோட்பாடு உருப் பெற்றது.தமிழ் ஈழம் என்பது ஒரு இன வெறிக் கோட்பாடோ அன்றி ஒரு பிரதேச வெறிக்கோட்பாடோ இல்லாமல் இருப்பதற்கான அடிப்படை அது தமிழீழம் என்னும் அடக்கி ஆளப்படும்,சுரண்டப்படும் பிரதேசத்தில் வாழும் எல்லா மக்களையும் உள்ளடக்கியாதாக இருப்பதே.தமிழ் தேசியம் என்பது தீவான்,மட்டக்களப்பான்,யாழ்ப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.