Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது கவலை

Featured Replies

தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது: வட அமெரிக்க, ஐரோப்பிய சங்கம் கவலை

[சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 20:19 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழகமே கிளர்ந்துள்ள நிலையில் தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது என்று வட அமெரிக்க ஐரோப்பிய தமிழர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் எம்முடன் இரண்டறக் கலந்து செயற்படும் எமது உறவுகளான திரைப்படக் கலைஞர்கள் தற்போதைய ஈழத்து நிலவரம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது தொடர்பாக ஐரோப்பிய வட அமெரிக்க திரைப்பட ஆர்வலர்கள் சம்மேளனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பின் அறிக்கை:

ஈழத்தமிழர்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவதும், அவர்களது கிராமங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு அவர்கள் அகதிகள் ஆக்கப்படுவதும் தற்போது சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இத்துயரை நிறுத்தவும், துயரில் பங்கு கொள்ளவும் தமிழகமே ஒட்டுமொத்தமாகத் திரண்டு தங்களது பரந்து பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தி வருவது ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலான விடயமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

ஆனால் அதற்கும் மேலாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எமக்குக் கூட தமிழ்நாட்டின் இந்த எழுச்சியே பெரும் மனத்துணிவைத் தரும் மருந்தாக அமைந்துள்ளது.

குறிப்பாக செஞ்சோலை சிறார் வளாகத்தின் மீதான கோரமான குண்டுவீச்சு உள்ளிட்ட பொதுமக்களின் படுகொலைகயெல்லாம் எம்மை ஈடாடச் செய்த போது தமிழ்நாட்டு உறவுகள் எமக்காக இருக்கிறார்கள் என்ற செய்தியே நாம் அதிலிருந்து மீள்வதற்கு வழிசமைத்தது.

இருந்தபோதும், தங்களது வாழ்வில் ஒரு அங்கமாகிப் போன ஈழத்தமிழனின் இழப்புக்கள் குறித்து திரையுலக சகோதர, சகோதரிகள் அசமந்தமாக இருப்பது எமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது என்பதை இத் தருணத்தில் பதிவு செய்ய நாம் விரும்புகிறோம்.

எமக்கு ஏற்படும் துயரங்களில் நீங்கள் பங்குகொள்ளவில்லையே என்கிற எங்களது ஆதங்கத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். உங்களது நேர அட்டவணைகள் மற்றும் படப்பிடிப்பு போன்றவையே இவ்வாறு நீங்கள் இன்னமும் பங்களிக்காததற்கான காரணமாக இருக்கும் என்றே நாம் நம்புகிறோம்.

இருந்தபோதும் காலத்தால் செய்த உதவி ஞாலத்தால்... என்பதற்கமைய உங்கள் உணர்வுகளின் உடனடி வெளிப்பாடுகள் எங்களின் உயிர் மையத்தில் ஏற்பட்டிருக்கும் ரணத்திற்கான ஆறுதலாக அமையும் என்பதை நீங்களே அறிவீர்கள்.

எனவே எங்களது உடன்பிறந்த உறவுகளாக எங்களுடன் உறவாடி மகிழும், மதிப்பிற்குரிய நடிகர்கள் ரஜனிகாந்த், கமலஹாசன், இயக்குனர் சங்கர், இசையமைப்பாளர் ரகுமான் போன்றோருடன் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சமூகம் இம் முயற்சியை கூட்டாக முன்னின்று வழிநடத்தி எமது துயரத்தில் பங்குகொள்ளும் என்ற எதிர்பார்ப்போடு இன்னமும் காத்திருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28613

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.