Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரன், இசைப்பிரியா பற்றியும் நவிப்பிள்ளையின் அறிக்கை பேசுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pala.jpg

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமை சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இறுதிப்போரின் போது படைகளிடம் சரணடைந்த போராளிகள், புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன், கேணல் ரமேஷ், புலிகளின் ஊடக தொடர்பு பிரிவு பணியாளர் இசைப்பிரியா மற்றும் பலர் கொலையுண்ட விடயங்கள் தொடர்பாக சனல்-4 வெளியிட்ட ஆவணப்படங்கள், அவைகள் தொடர்பான இலங்கை அதிகாரிகளின் பிரதிபலிப்புகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

 
இந்த விடயங்கள் தொடர்பான இலங்கை அரசின் செயற்பாடுகள் திருப்தியில்லாமையால் சர்வதேச விசாரணை பொறிமுறையயான்று அமைக்கப்படும் பட்சத்தில் இவை பற்றியும் விசாரணைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே அறிக்கையில் இவை சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.
 
சிறைக் கைதிகள் மற்றும் சரணடைந்தவர்கள் கொலை செய் யப்பட்டமை என்ற தலைப்பில் அவர் குறிப்பிட் டிருப்பதாவது:-
 
2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர் போரின் இறுதிக் காலச் சம்பவங்கள் தொடர்பான ஒளிப் படங்களும் வீடியோப் படங் களும் வெளியாகியுள்ளன. அவை கைதிகள் சரணடைந்த பின்னர் அல்லது பாதுகாப்புப் படைகளின் காவலில் இருந்த போது அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதைக் காண்பிக்கின்றன.
 
2011 ஜூன் மாதம் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மனித உரிமைகள் சபைக்கு  தொழில்நுட்ப அறிக்கையயான்றைச் சமர்ப் பித்தார். 2009 ஓகஸ்ட் 4 ஆம் திகதி சனல்-4 வெளியிட்ட வீடியோ காட்சியின் உண்மைத்தன்மையை வெளிக்காட்டுவதாக அது இருந்தது. 2009 செப்ரெம்பரில் அரசு தனது சொந்த தொழில்நுட்ப ஆய்வு முடிவுகளை அறிவித்தது. அதில் சிறப்பு அறிக்கையாளரின் கண்டுபிடிப்புக்களை கேள்விக்குரியதாக்கியிருந்தது.
 
இதற்கு பதிலாக சிறப்பு அறிக் கையாளர் தொழில்நுட்ப ஆய் வுகளை மேற்கொள்ளவென சுயாதீன நிபுணர் குழுவை நிய மித்தார். அந்தக் குழு முதலில் கண்டறியப்பட்டவைகளை உறுதி செய்தது. இந்த விடயம் தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண ஆணைக்குழுவானது உண் மைத்தன்மை குறித்து  ஒரு முடிவுக்கு வராத நிலையில் மேற்கொண்டும் ஆய்வுகள் நடத்துமாறு அரசுக்கு பரிந் துரை செய்திருந்தது. இந்த விடயம் இப்பொழுது இராணுவ நீதிமன்றத்தின் ஆய் வில் இருப்பதாக அரசு கூறுகிறது. அதன் முடிவுகள் இன்னமும் வெளிவரவில்லை.
 
பாலச்சந்திரன் பற்றிய படங்கள்
2013 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கைப் படைகளின் காவலில் பதுங்குக் குழியொன்றின் மேல் உயிருடன் அமர்ந்திருப்பதைக் காட்டும் படங்களும் அதன் பின்னர் இறந்த நிலையிலான அவரது உடல் மார்பில் குண்டுகள் துளைத்திருந்த படங்களும் தொடர்ச்சியாக வெளிவந்திருந்தன. ஒரு சில மணிநேரம் முன் பின்னராக ஒரே கமராவால் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
 
கேணல் ரமேஷ் தொடர்பான படங்கள்
சனல்-4 மற்றும் வேறு வகை யான வீடியோ மற்றும் புகைப் படங்களில் ரி.துரைராஜசிங்கம் (கேணல் ரமேஷ்) இலங்கை இராணுவத்தினரால் விசாரிக்கப்படுவது காட்டப்படுகின்றது. பின்னர் அவரது சிதைவுற்ற உடலின் படம் வெளியாகியுள் ளது. கேணல் ரமேஸின் நிலைமை குறித்த சாட்சி யங்களும் ஆதாரங்களும்  அவர் பாதுகாப்புப் படைகளின் காவலில் இருந்த போதே கொல்லப்பட்டார் என்பதாக காட்டுகின்றன.
 
இசைப்பிரியாவின் படுகொலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் பத்திரிகை மற்றும் தொடர்பா டல் பிரிவின் உயர்மட்ட உறுப்பினர் சோபனா (இசைப்பிரியா) வின் கொலை பற்றிய சனல்-4 புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள் அவர் விசாரணையின்றி அந்த இடத்திலேயே படையினரால் கொல்லப்பட்டார் என்பதைக் காட்டுவதாக இருக் கின்றனவென்று சிறப்பு அறிக் கையாளர் அறிவித்துள்ளார். வீடியோ மற்றும் படங்களில் காட்டியிருப்பதன்படி அவரது மேலாடைகள் இழுத்து ஒதுக்கப்பட்டு அவரது வெறும் மேனி தெரியும்படி செய்யப்பட்டிருந்துள்ளது. 2013 நவம்பரில் சனல்-4 வெளியிட்டபடங்களில் இராணுவத்தால் அவர் உயிருடன் பிடிக்கப்படுவது காட்டப்பட்டுள்ளது.
 
மேற்கூறிய மூன்று சம்பவங் கள் தொடர்பாகவும் அரசு வெளியிட்ட கருத்துக்களில் குறித்த படங்களும் நிகழ்வுகளும் உறுதிபடுத்தப்படாமலும் நிரூபிக்கப்படாமலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெள்ளைக்கொடி சம்பவங்கள்
2009 மே 18 ஆம் திகதி விடு தலைப் புலிகள் இயக்க உயர் மட்டத் தலைவர்கள் பத்திரமாக சரணடையலாம் என்று அரசு உறுதி வழங்கியிருந்த நிலையிலும் சட்டவிரோதமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு ஆராய்ந்துள்ளது. 
 
அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் பொதுக் கூட்டங்களிலும், சர்வதேச மேடைகளிலும் இது பற்றி முரண்பாடான விவரங்களை வெளியிட்டுள்ளார்கள்.
 
குறித்த சம்பவம் பற்றிய பின்புலம் தெளிவில்லாது போனாலும் புலிகள் அமைப்பின் தலைவர்கள் சரணடைய விரும்பினார்கள் என்பதான முடிவுக்கு நிபுணர்குழு வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் தற்போது நாட்டுக்கு வெளியிலுள்ள தரப்புகளிடமிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.
 
வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தர்க்க ரீதியில் அலசவோ புலனாய்வு செய்யவோ தவறியிருக்கிறது. ஆனால் இராணுவ ஜெனரல்கள் மற்றும் அரச அதிபர்களின் சாட்சியங்களை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்கள். 
 
இதுபற்றி அரசு வெளியிட்ட கருத்தில் நம்பகமான சாட்சியங்கள் இல்லாமையால் மேற் கொண்டும் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று அறிவித்துள்ளது.                   
 

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=661902684827545199

என்றோ ஒரு நாள் நியாயம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரும் அவலம்

நீதியும்

உண்மையும்

தர்மமும்

உலக சட்டங்களும் புதைக்கப்பட்ட  இடம் முள்ளி  வாய்க்கால்

 

எதைக்கொண்டு மூடுவது???

எதைக்காட்டி நியாயப்படுத்தவது.............??

 

 

ஒரு பெரும் அவலம்

நீதியும்

உண்மையும்

தர்மமும்

உலக சட்டங்களும் புதைக்கப்பட்ட இடம் முள்ளி வாய்க்கால்

எதைக்கொண்டு மூடுவது???

எதைக்காட்டி நியாயப்படுத்தவது.............??

நோ பயர் சோன் படத்தை உலகத்தில் இருக்கும் 4 பில்லியன் முதியவர்களுக்கு காட்டினால் தான் நியாயம் கிடைக்கும்.

சும்மா அரசியல்வாதிகளையும், அமைப்புகளையும் மட்டும் நம்ப முடியாது.

இந்த மே நினவு நாளிற்காக இரத்த தானமும் ஆயிரம் பேருக்கு நோ பயர் சோன் காட்டுவது என்று திட்டம் போட்டு செயல்படுகிறோம்.

இந்த சின்ன எறும்பால் முடிந்தது அவ்வளவு தான்.

90 மில்லியன் தமிழ் எறும்புகள் நினைத்தால் முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக நியாயம் கிடைக்கும், கிடைக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.