Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலைகள் உடைப்பு! – காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலைகள் உடைப்பு! – காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். camera_icon.jpeg 

[Thursday, 2014-02-27 18:40:45]
statue-270214-150.jpg

சென்னையில் இன்று காலை 3 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதேபோல், அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்த தமிழக அரசை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுசெல்வன் தலைமையில் நேற்று காலை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட 60க்கும் மேற்பட்டோர் அண்ணா சாலை தர்கா அருகே திரண்டனர். திடீரென சோனியா காந்தி உருவ பொம்மையை எரித்தனர்.

  

அவர்கள் வரும் தகவல் கேள்விப்பட்ட காங்கிரசார் 100க்கும் மேற்பட்டோர் சத்தியமூர்த்தி பவனில் குவிந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் பலர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக அண்ணா சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரம்பூர் பேரக்ஸ் மாநகராட்சி பள்ளி அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அதேபோன்று பெரம்பூர் சுப்பையா மடம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலையை மர்ம நபர்கள் இன்று அதிகாலை சேதப்படுத்தினர். அதேபோல் வேப்பேரி காவல் நிலையம் அருகே இருந்த சிலையும் சேதப்படுத்தப்பட்டது.

தகவல் அறிந்ததும் வட சென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான காங்கிரசார் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் சிலை முன்பு கூடினர். சிலைக்கு பாதுகாப்பு வழங்காத போலீசாரை கண்டித்தும், ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரியும் காங்கிரசார் அந்த பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். எனினும், தொடர்ந்து காங்கிரசார் மறியலில் ஈடுபட்டதால், அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் உள்ள ராஜீவ், இந்திரா காந்தி சிலை மற்றும் அனைத்து சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

rajeev-statue-270214-600.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104539&category=IndianNews&language=tamil

ஊழல் குடும்ப இளவரசனுக்கு 3 சிலைகள் டூ மச்.

கல்சிலைக்கு பாதுகாப்பு ஆனால் பெண்களையோ பஸ்ஸில் கூட்டா பாலியல் வல்லுறவு.

நாடு முன்னேறும்.

இல்லை இவருக்கு ஏன் தமிழ்நாட்டில் சிலை வைக்கனும்?

 

வேற  எந்த மாநிலத்திலாவது தமிழகத்தை சேர்ந்தவர்களின் சிலைகள் இருக்கின்றனவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.