Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் இரைமீட்ட ஒரு கவிதை!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலவன் என்று பொய்புரைத்து மணந்துகொண்டவன் தன் மனைவி படிப்பறிவற்றவள் என அறிந்து ஆறுதல் அடைந்தான். அவன் சொல்லும் சொற்களை அவள் கவிதை என நம்பினாள். அந்நிலையில் அவள் கணவனுக்குச் சோதனை வந்தது. கவிதைக்குப் பரிசளிப்பதாக அரசனின் அறிவிப்பை செவிமடுத்த அவள், அவனைக் கவிதை எழுதி அரசனிடம் பரிசு பெற்று வருமாறு வேண்டிணாள். அன்புடடையாள் வேண்டுதலை மறுக்கமுடியாது விதியே! என்று அவன் அரசவைக்குப் புறப்பட, அவள் கட்டுச்சோறும் கட்டிக் கொடுத்தாள்.
 
என்ன  எழுதுவது! எதை எழுதுவது! புரியாத அவன் போகும் வழியில் எலியொன்று மண்தோண்டுவதைக் கண்டான். உடனே  மண்ணுண்ணி மாப்பிள்ளையே! என்று எழுதினான். சற்றுத் தூரம் செல்ல அவன் கட்டுச் சோற்றை முகர்ந்த காகம் ஒன்று கா! கா! என்று கத்தியது. கத்தலைக் கேட்டு காவிறையே! என்று எழுதினான். பசியெடுத்துக் கோவிலொன்றில் தரித்தபோது, அங்குள்ள சோலையில் இருந்த குயிலொன்று கூ! கூ! எனக் கூவக்கேட்டு கூவிறையே! எனவும் எழுதினான். எழுதிவிட்டு சோறுண்ண அமர்ந்தபோது பெருச்சாளி ஒன்று குறுக்கே ஓடியது ஆகா எங்களப்பன் கோவில் பெருச்சாளி! அதையும் எழுதினான். எழுதிவிட்டுப் படித்தபோது நானும் கவிஞனா? என்று மலைத்தான். மகிழச்சி தாங்க முடியவில்லை!!. 
 
உண்ட நிறைவும், கவிதை எழுதிய மகிழ்ச்சியும் உடனே தொடர்ந்து நடக்கவைத்தது. வழியில் வந்த ஒருவர் புலவர்போல் தெரியவே, ஐயா! நானொரு கவிதை எழுதியுள்ளேன் நன்றாக உள்ளதா! பாருங்கள் என்றான். வந்த புலவரோ படித்துவிட்டு பரிகாசமாக, "என்னப்பா! கன்னா பின்னா என்று எழுதியிருகிறாய்." சொல்லிவிட்டுப் போய்விட்டார். எங்கள் புலவன் உடனே கன்னா பின்னா! என்றும் எழுதினான். எழுதியபின் எங்கள் கவிதை எழுதிய புலவனுக்கும் கவிஞானம் பிறக்கவே, அவனும் எழுதினான். தென்னா மன்னா!. ஆனந்தக்கூத்தாடியவன் அரண்மனை வாசலை அடைந்தான். காவலாளி தடுத்தபோது, "நான் கவிதை எழுதி வந்தேன் அரசரிடம் பரிசுபெறவேண்டும்."  " உன்னைப்பார்த்தால் புலவன்போல் தெரியவில்லையே! கவிதையைக் காட்டு" என்றான் காவல் தலைவன். கவிதையைப் படித்துவிட்டுச்  சோழரங்கப் பெருமாளே! என்று தலையில் கையை வைத்தாலும் புலவனை உள்ளே செல்ல அநுமதித்தான். நம்ம கவியோ! சோழரங்கப்பெருமாளே! என்று காவல் தலைவன் சொன்னதையும் எழுதிவிட்டான். 
 
 அவையில் கவிதை படிக்கப்பட்டது பரிகாசச் சிரிப்பொலி வானை முட்டியது. கம்பரும் சிரித்தார். கம்பர் சிரித்ததைப் பொறுக்காத ஒட்டக்கூத்தர் கவிதையில் என்ன தவறு? பொருள் நிறைந்த கவிதை! கம்பருக்குக்கூட விளங்கவில்லையா? என்று கம்பரை ஏளனம் செய்தார். திகைத்த அரசன் கூத்தரே! இது கவிதையா! பொருள்கூற முடியுமா? வியப்போடு கேட்டான் அரசே! உங்களைப் போற்றும் அருமையான சிறந்த கவிதை இது. கூத்தர் கம்பரை மட்டம்தட்டிய மகிழ்ச்சியும் பெருகவே, கவிதைக்குப் பொருள்கூறினார். 
 
மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
காவிறையே கூவிறையே!
எங்களப்பன் கோவில் பெருச்சாளி!
கன்னா பின்னா!  தென்னா மன்னா!
சோழரங்கப்பெருமாளே!!
 
 
மண்ணுண்ணி; மண்ணை உண்ட கண்ணனாகிய திருமாலே!
மாப்பிள்ளையே; 'மா' ஆகிய ஸ்ரீலட்சுமிதேவியின் மகனாகிய மன்மதன் போன்றவனே!
காவிறையே; எங்களையெல்லாம் காத்தருளும் இறைவனுக்கு ஒப்பானவனே!  
கூவிறையே; கூவி அழைத்த எங்கள் துன்பங்களைப் போக்கும் கடவுளே! 
எங்கப்பன் கோ; அனைவரையும் தந்தைபோல் காக்கும் அரசனே! 
விற் பெருசு ஆளி; யானையின் பலத்தை விடவும் விற்பலத்தில் வலிமை கொண்டவனே!
கன்னா; கர்ணனைப் போன்ற கொடைவள்ளலே!
பின்னா; கர்ணனுக்குப் பின்னால் அவன்போன்ற கொடைவள்ளலே! 
மன்னா; மன்னவனே!
தென்னா; தென்னாடுடைய அரசனே!
சோழரங்கப் பெருமாளே; சோழ அரசின் திருமால் போன்ற அரசனே!
 
 
(கவிதைக்குப் பொருள்கூறியது கம்பரா? ஒட்டக்கூத்தரா? என்றொரு ஐயமுள்ளது. இராமாயணத்தைக் கவிதையில் எழுத அரசன் விரும்பியபோது, அறிவிற் சிறந்த தமிழரான ஒட்டக்கூத்தர் உண்மையையே எழுதுவார். அதனால் தமிழனான இராவணன் உயர்வுபெறுவான். ஆரியவழி வந்த அரசனை அது மகிழ்விக்காது. ஆகவேதான் கம்பரை எழுத அனுமதித்ததாக ஒரு கதையுண்டு. இதனையிட்டே எங்கள் புலவனின் கவிதைக்கு ஒட்டக்கூத்தரே பொருள்கூறியதாக குறிப்பிட்டுள்ளேன். )   
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.