Jump to content

நடிகை ஷகீலா பேட்டி: சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா?- மனம் திறக்கிறார் ஷகிலா

பதிவு செய்த நாள்  : ஞாயிற்றுக்கிழமை,16-03-2014 10:07 PM

sakia.jpg

 

சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…” என்று வரவேற்கிறார் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் கலங்கடித்த ஷகிலாவுக்கு இந்தியாவைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள். இப்போது அதிகம் அவர் நடிப்பதில்லை. ஆனாலும், இன்னும் வெளியிடப்படாத அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல், அதற்குள் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருப்பதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரவிக் கிடக்கும் ஷகிலாவின் புகழுக்கு உதாரணம். வீட்டில் உடனிருக்கும் இரு சிறுமிகளை “அண்ணன் பொண்ணுங்க” என்று அறிமுகப்படுத்துபவர், அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, “இப்போ பேசலாம்ணா” என்கிறார்.

ஜனப்புழக்கம் அதிகமுள்ள பகுதியில் இருக்கிறீர்களே… வெளியே போகவர சிரமமாக இல்லையா?

நான் பொறந்து வளர்ந்த ஏரியாண்ணா இது. இந்த வீட்டுலதான் 33 வருஷமா இருக்கேன். ஒண்ணுமே இல்லாம இருந்தப்போவும் இங்கேதான்; லட்சக் கணக்குல சம்பாதிக்குறப்போவும் இங்கேதான். நாங்க ஏழு பிள்ளைங்க, அப்பா, அம்மானு அடிவைக்குறதுக்குகூட இடம் இல்லாம இருந்த வீடு. இன்னைக்கு இந்த வீட்டுல ஒட்டிட்டு இருக்குற ஞாபகங்களோட நான் மட்டும் தனியா இருக்கேன். சின்ன வயசுல இந்த ஏரியாவுல இருக்குற ஒவ்வொரு வீட்டுலேயும் பூந்துவந்திருக்கேன். ஆனா, ஒருகட்டத்துக்கு அப்புறம் ஷூட்டிங் விட்டா வீடு, வீடு விட்டா ஷூட்டிங்னு ஆயிடுச்சு வாழ்க்கை. எப்போவாச்சும் ரொம்பத் தேவைன்னா பக்கத்துல இருக்குற கடைகளுக்கு முகத்துல கர்சிப்பைக் கட்டிக்குட்டு போவேன். போற வேகத்துல திரும்பிடுவேன்.

அப்பா, அம்மா என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

அப்பா ஒரு சூதாடின்ணா. சீட்டாட்டம், ரேஸு இதான் அவருக்குத் தொழில், பொழுதுபோக்கு, வாழ்க்கை எல்லாமே. திடீர்னு ஒருநாள் ஜெயிச்சுட்டு வந்து நகைகளா வாங்கிட்டு வந்து போட்டு அழகு பார்ப்பார், கொஞ்சுவார். ஒரு வாரம் கழிச்சு கெஞ்சிக் கூத்தாடி ஒவ்வொண்ணா கழட்டிக்கிட்டுப் போய் சூதாடுவார். அம்மா இப்படி ஒரு அப்பாவுக்கும் ஏழு பிள்ளைகளான எங்களுக்கும் இடையில போராடிட்டு இருந்தாங்க. இந்தக் கஷ்டம் எல்லாம் எனக்கு ரொம்பத் தாமதமா, ஒரு பதினஞ்சு, பதினாறு வயசுலதான் தெரிய ஆரம்பிச்சுச்சு. எங்க அக்காவுக்கும் எனக்கும் 16 வயசு வித்தியாசம். அவங்கதான் என்னைத் தூக்கி வளர்த்தாங்க. என்னோட 16 வயசுல அவங்க பிரசவத்துக்காகப் போறாங்க. ஆஸ்பத்திரி போக காசு இல்லை. அப்போதான் எனக்கு எல்லாம் விளங்குது, சரி, இனிமே நாமதான் நம்ம குடும்பத்தைப் பார்க்கணும்னு.

அதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கும்போது, ஏன் சினிமாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

முதல் காரணம், எனக்குப் படிப்பு சுத்தமா வராது. எவ்வளவோ பள்ளிக்கூடங்கள்ல மாத்தி மாத்திச் சேர்த்துப் பார்த்தார் எங்கப்பா. ம்ஹூம்… ஒருகட்டத்துல, ‘பேசாம எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கப்பா'ன்னு எல்லாம் அழுதிருக்கேன். இப்படிப்பட்ட என் படிப்பை வெச்சிக்கிட்டு எங்கே வேலை தேட முடியும்? ரெண்டாவது காரணம் என்னன்னா, வீட்டைச் சுத்தி சினிமாக்காரங்களா இருந்தது. இதோ, ஜன்னல் வழியா தெரியுது பார்த்தீங்களா, அந்த வீட்டுலதான் ஜனகராஜ் அங்கிள் இருந்தார். விஜயசாந்தி ஆன்டி வீடு அதுக்கும் கொஞ்சம் தூரம். நான் எல்லார் வீட்டுக்கும் விளையாடப் போவேன். சும்மா சொன்னாங்களோ என்னவோ, ‘ஏய், நீ அப்பாட்ட சொல்லிட்டு வா… சினிமா ஹீரோயினாயிடலாம்'பாங்க. அது அப்படியே மனசுல பதிஞ்சுருந்துச்சு. நான் ஃபெயிலாகி நின்னு, எங்கப்பா என்னை அடிச்சப்போ பார்த்துப் பதறிப்போய் ஓடிவந்த மேக்கப் மேன் உமாசங்கர் அண்ணன், ‘பாப்பாவை சினிமால சேர்த்துட்டுருண்ணா'னு அப்பாகிட்ட பேசினார். அப்பா அனுப்பிவிட்டுட்டார்.

முதல் பட அனுபவத்தைச் சொல்ல முடியுமா?

சில்க் ஹீரோயினா நடிச்ச ‘ப்ளே கேர்ள்ஸ்' டைரக்டர் என்னைப் பார்த்த மாத்திரத்துல ஓகேன்னுட்டார். எனக்கு சில்க்கூட இருக்குற பொண்ணு கேரக்டர். இருபதாயிரம் ரூபாய் சம்பளம். துணைக்கு என்கூட வந்திருந்த என் தங்கச்சியைப் பார்த்துட்டு, அவளுக்கும் ஒரு கேரக்டர். இருபதாயிரம் சம்பளம். எனக்கு நம்பவே முடியலை. இனி நம்ம குடும்பத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லேன்னு முடிவு பண்ணிட்டேன். ஷூட்டிங் போனப்போ ரொம்ப சின்ன டிரஸ்ஸா கொடுத்தாங்க. எனக்கு வெட்கமா போயிடுச்சு. போட முடியாதுன்னுட்டு நின்னேன். ‘ஒண்ணும் தப்பில்லைம்மா; அங்கே சில்கைப் பாரு'ன்னு தூரமா உட்கார்ந்திருந்த சில்கைக் காமிச்சாங்க. அவங்க என்னைவிடக் கம்மியான டிரஸ்ல உட்கார்ந்திருந்தாங்க. சரி, இங்கே இதெல்லாம் சகஜம்னு முடிவெடுத்துட்டேன். அப்புறம் வரிசையா படங்கள்.

நீங்கள் ஹீரோயின் ஆக முடியவில்லை என்ற வருத்தம் எல்லாம் வரவில்லையா?

மொதல்ல தெரியலை. அப்புறம் நமக்கெல்லாம் இதுவே பெரிய விஷயம்னு நெனைப்பாயிட்டு.

சின்னச் சின்னப் பாத்திரங்களில் நடித்துவந்த நீங்கள் எப்போதிலிருந்து நீலப் படங்களில் நடிக்க ஆரம்பித்தீர்கள்? எந்தச் சூழல் உங்களை அதை நோக்கித் தள்ளியது?

மூணு வருஷம் இப்படியே போச்சு. அப்பா திடீர்னு இறந்துட்டார். அதுவரைக்கும் அவர்தான் என்னோட படங்கள், ஷூட்டிங் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டவர். அவர் செத்து ஆறேழு மாசம் படமே இல்லை. இதுக்கு இடையிலேயே தவணையில கார் வாங்கியிருந்தேன். அப்பாவோட கடன்லாம் வேறு சேர்ந்துக்கிட்டு. கையில காசில்லை. அப்போதான் மலையாளத் தயாரிப்பாளருங்க ரெண்டு பேர் வந்து ‘கிண்ணாரத் தும்பிகள்' படத்துக்காகப் பேசினாங்க. ‘முப்பது வயசுப் பொம்பளைக்கும் சின்ன பையனுக்கும் காதல்'னு ஆரம்பிச்சாங்க. நான் முடியவே முடியாதுன்னு சொல்லி திட்டி அனுப்பிட்டேன். ‘யோசிச்சு வைம்மா, நாளைக்கு வர்றோம்'னுட்டுப் போனாங்க. அவங்க கிளம்பினதுல ஆரம்பிச்சு ராத்திரியெல்லாம் அம்மா ஒரே புலம்பல். தாங்கலை. மறுநாள் அவங்ககிட்ட நான் நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். அப்புறம் அதுவே பழகிடுச்சு.

கொஞ்சமான உடைகளோடு பாலுறவுக் காட்சிகளில் நடிப்பது சங்கடமாக இல்லையா?

எந்த நடிகை மூடிக்கிட்டு நடிக்க முடியுது? சொல்லுங்க பார்ப்போம். சினிமாவை விடுங்க. ரோட்டை எட்டிப் பாருங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நோக்கம். ஒவ்வொரு தேவை.

பொதுவா, சாதாரண படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கே பாலியல் சீண்டல்கள் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பார்கள். நீலப் பட நடிகைகளுக்கு அந்தச் சீண்டல்கள் இன்னும் பெரிய பிரச்சினையாக இருக்குமே?

நான் வளரும்போதே ஆம்பளை மாதிரிதான் வளர்ந்தேன். ‘ஏய்'னு ஒருத்தன் கூப்பிட்டா, ‘என்னடா?'னு கையை முறுக்குற ஆளு. ஆனா, பார்க்குற எல்லாரையுமே அண்ணா, அப்பானு கூப்பிட்டுத்தான் பழகுவேன். அதனாலேயோ என்னவோ இன்னைக்கு வரைக்கும் எனக்கு அந்த மாதிரியான பிரச்சினைகள் எதுவும் வந்ததில்லை. அதுக்காக யாருக்கும் இந்தப் பிரச்சினையே இல்லைனும் சொல்ல மாட்டேன். என்கூட நடிக்குற பொண்ணுங்ககிட்டேயே வாலாட்ட பார்த்த பசங்களை நான் மிரட்டி அனுப்புன கதையெல்லாம் உண்டு. ஆனா, ரெண்டு பேர் பிரியப்பட்டுப் போனா அது தப்பில்லேனுதான் தோணுது. ஒரு நடிகனோட நோக்கம்தானே நடிகையோட தேவையைப் பூர்த்திசெய்யுது? நாம என்னதான் பேசினாலும், வாழ்க்கையில ஒண்ணை இழந்துதானே ஒண்ணைப் பெற வேண்டியிருக்கு? ஒரு பொண்ணை வெளியிலேர்ந்து பார்க்குறவங்களுக்கு, அவளோட உடம்பு முக்கியமான விஷயமா இருக்கலாம். ஆனா, அந்தப் பொண்ணுக்கும் அப்படியே உடம்புதான் முக்கியமான விஷயமா இருக்கணும்கிற தேவை இல்லையே? ஒரு பொண்ணுக்குத் தன் உடம்பைவிட பேரு, புகழ், பணம் இல்லை வேற ஏதோ ஒண்ணு முக்கியமா பட்டா அது தப்பில்லையே?

சினிமா துறையில் பாலியல் சுரண்டலே இல்லை என்று சொல்லவருகிறீர்களா?

எல்லாத்தையும் சுரண்டலா பார்க்க முடியாதுன்னு சொல்ல வர்றேன்.

ஒருகட்டத்தில் மலையாள சினிமாவை விட்டு நீங்கள் ஒதுங்கியதன் பின்னணியில், மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன் லாலுக்கும் மம்மூட்டிக்கும் முக்கியமான பங்கு இருந்ததாகப் பேசப்பட்டதே?

ஆமா, நமக்கு வெள்ளிக்கிழமைக்கு வெள்ளிக்கிழமை ஒரு படம் வரும். அவங்களுக்கு ஆறு மாசத்துக்கு ஒரு படம் வரும். அதுவும் ஓடலைன்னா? நேரடியா மிரட்டலை. வேற வழியில தொல்லை கொடுத்தாங்க. திடீர்னு பார்த்தா, நான் நடிச்ச 27 படங்கள் சென்சார்ல அப்படியே நிக்குது. இப்படி நிறைய.

சினிமாவைக் குறைத்துக்கொள்ள அதுதான் காரணமா?

அப்படியெல்லாம் இல்லை. ஓடிட்டே இருக்கீங்க, திடீர்னு ஒருநாள் எதுக்கு இவ்வளவு ஓடுறோம், இவ்ளோ ஓடினதுல என்ன மிச்சம்னு யோசிக்கிறப்போ ஒண்ணுமே இல்லாதது மாதிரி இருந்தா எப்படியிருக்கும்?

தனிப்பட்ட வாழ்வைச் சொல்கிறீர்களா?

ஆமா, வருஷத்துக்கு அறுபது, எழுபது படங்கள் எல்லாம் நடிச்சிருக்கேன். ஒருநாள் அம்மாகிட்டே கேட்குறேன் நம்ம கையில எவ்ளோ இருக்கும்னு? கையை விரிச்சுக் காட்டுறாங்க. ‘அக்காகிட்டேதான் எல்லாத்தையும் கொடுத்தேன், அவ யாருகிட்டேயோ வட்டிக்குக் கொடுத்து ஏமாந்துட்டாம்மா'ங்கிறாங்க. அதைக்கூடத் தாங்கிக்கிக்கலாம். சம்பாரிச்ச காசையெல்லாம் குடும்பத்துக்குத்தான் கொடுத்தேன். ஆனா, அந்தக் குடும்பத்துல என் தம்பியைத் தவிர யாரும் இன்னைக்கு இல்லை. அப்பா – அம்மா இறந்துட்டாங்க. ஒரு அண்ணன் தீக்குளிச்சு செத்தான். அக்கா, தங்கச்சி வீட்டுல இன்னைக்கு என்கூட யாரும் பேசுறதுகூட இல்லை. என்னோட பேசுறதே அவமானமா இருக்காம். அக்கா ஞாபகம் வரும்போதெல்லாம் அவங்க இருக்குற வீடியோவை ஓடவிட்டுப் பார்த்துப் பார்த்து அழுவேன். (கண் கலங்குபவர் பக்கத்தில் இருக்கும் சிகரெட் பாக்கெட்டிலிருந்து சிகரட்டை எடுத்துப் புகைக்க ஆரம்பிக்கிறார்).

காதல், திருமணம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையா?

காதல்தானே? இதுவரைக்கும் ஒரு டஜன் காதல் வந்துட்டுப் போயிருக்கு. இப்போகூட ஒரு காதல் இருக்கு. எல்லாரும் மாதிரி நமக்கும் ஒரு கல்யாணம், குழந்தைங்க, குடும்பம் எல்லா ஆசையும் இருக்கத்தான் செய்யுது. ஆனா, சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா? என்னோட கடைசிக் காதல் எப்படி முறிஞ்சுது தெரியுமா? எங்க அண்ணனுக்குக் கொடுத்தனுப்பின ஒரு பிரியாணிப் பொட்டலத்துக்காக முடிஞ்சுது. ஒருமுறைதான் கூடப் பிறக்கிறோம். அண்ணனுக்கு ஒருவேளை சாப்பாடு கொடுக்குறதே பொறுக்கலைன்னா? இதோ அந்த அண்ணன் செத்துட்டான், அவன் பிள்ளைங்களை ரோட்டுல அனாதையா விட்டுட முடியுமா? அப்படித்தான் விடணும்னு சொல்லுறதை காதல்னு என்னால ஏத்துக்க முடியலை. (அடுத்த சிகரெட்டை எடுக்கிறார்).

இந்த சிகரெட் பழக்கம் எப்போது வந்தது?

சினிமாவுக்குப் போனதுக்கு அப்புறம்தான். ஒரு ஷூட்டிங்ல பூஜா பட்டைப் பார்த்தேன். சுத்தி ஏகப்பட்ட சிகரெட் துண்டுகள். என்னைக் கவனிச்சுட்டு ஒரு ‘மல்பரோ லைட்ஸ்' சிகரெட்டைக் கொடுத்தார். அப்போ ஆரம்பிச்சது. ஆரம்பத்துல, ஒரு ஸ்டைல்; இப்போ டென்ஷனானா தேவைப்படுது. டிரிங்ஸும் எடுத்துப்பேன். ரொம்பக் கம்மியா. எப்போவாவது. அது அப்பாவைப் பார்த்துப் பழகினது.

ஒரு பேட்டியில், “ஆண்களோடு மது அருந்த மாட்டேன்” என்று சொல்லியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். என்ன காரணம்?

அப்படிச் சொல்லலை. எவ்வளவோ அண்ணன்மார்கூடக் குடிச்சுருக்கேன். ஆனா, புதுசா ரெண்டு ஆண்கள்கூடக் குடிக்கணும்னா மாட்டேன்; ஏன்னா, அவங்க நோக்கம் குடிச்சதுக்கு அப்புறம் படுக்கையை நோக்கிப் போகும்னுதான் சொல்லியிருந்தேன்.

இப்படிப் புகைப்பது, குடிப்பது எல்லாம் உடலுக்குக் கேடு அல்லவா?

கேடுதான், தேவைப்படுதே… என்ன செய்றது? இங்கே ஒரு பிச்சைக்காரப் பாட்டி இருக்கு. உரிமையா வீட்டுக்குள்ள வரும். ‘யம்மாடி, ஒரு கட்டிங் வாங்கிக் கொடும்மா'னு கேட்டுக் காசு வாங்கிட்டுப் போகும். இடையில ரெண்டு மாசம் ஊருல நான் இல்லை. நேத்தைக்கு வந்துச்சு. ‘பட்டினி போட்டுட்டியேடாம்மா'னுச்சு. ‘ஏம்மா, யாரும் சாப்பாடு வாங்கித் தரலை?'யான்னேன். ‘சாப்பாடு எல்லாரும் வாங்கித் தருவாங்க. குடிக்க நான் யார்கிட்டே போய்க் கேட்க முடியும்?'னுச்சு. நெனைச்சுப்பார்த்தா, பெரிய கஷ்டம்தான். இதுவும் ஒரு வகையிலான பசிதான். ஆனா, ஒரு பொம்பளை குடிக்க யாராவது இரக்கம் காட்டுவாங்களா?

சரி, குடும்பத்துக்காக நடிக்க முடிவெடுத்தீர்கள். ஒருபக்கம் நடித்தீர்கள், சம்பாதித்தீர்கள் என்றாலும் இன்னொரு பக்கம் உங்கள் தனிப்பட்ட ஆசைகள், கனவுகளைப் பறிகொடுத்திருக்கிறீர்கள். இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது அன்றைக்கு சினிமாவைத் தேர்ந்தெடுத்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்? அது சரியான முடிவு என்றுதான் நினைக்கிறீர்களா?

சரியான்னு தெரியலை. ஆனா, தப்புன்னு சொல்ல மாட்டேன். என்னோட சினிமா வாழ்க்கையில எனக்கு எந்த வருத்தங்களும் இல்லை. சாகுறவரைக்கும்கூட நடிக்கத் தயாரா இருக்கேன். ஆனா, எல்லாக் காலத்துலேயும் ஜனங்க என்னை ரசிப்பாங்கன்னு முட்டாள்தனமா நான் நம்பலை. நான் ஏமாந்தது என் குடும்பத்துகிட்டேதான்; சினிமாகிட்டே இல்லை. காதல்ல ஏமாந்தேன்னா, என்னோட வெளிப்படையான அணுகுமுறையா இருக்கலாம். ஆனா, இதான் நெஜ ஷகிலா. அதை மறைச்சுட்டு நிக்குற பொய்யான ஷகிலாவைதான் நேசிக்க முடியும்னா, அப்படிப்பட்ட நேசம் எனக்கு வேணவே வேணாம். வாய்ப்பு இருக்குறவரைக்கும் நடிச்சுட்டு, கடவுள் அனுமதிக்கிறவரைக்கும் நான் நானாவே வாழ்ந்துட்டுப் போயிடுறேன்!​

நேர்காணல் - சமஸ்

shakeela-2..jpg

 

 

http://www.deepamnews.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை எழுதிய ச.ச. முத்து என்பவர், 1979ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இரண்டு கிழமைகள் மட்டுமே இணைந்திருந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட போது சிங்களக் காவல்துறையிடம் சரணடைந்தார் என்று ஐயர் (கணேசன்) அவர்களின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்' என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறதாம். ஆனால், இவரோ தான் 1982ம் ஆண்டு லெப். சீலன் எ சுரேஸ் அவர்களின் படத்தைப் பெறச் சென்றேன் என்றும் "பொன்னம்மானின் பொற்காலம் என்று நான் கருதுவது பொன்னம்மான் அண்ணையுடன் தமிழகத்தில் நின்றிருந்த 81,82 ஆண்டுக்காலம்தான்." என்றெல்லாம் எழுதி வருகிறார்.  எனினும் புலிகளின் எந்தவொரு வரலாற்று ஆவணங்களிலும் இவ்வாறு ஒரு உருப்படி தம் இயக்கத்தில் இணைந்து தொடர்ந்து செயலாற்றினார் என்றோ இல்லை குறிப்பிடத்தக்கவராக இருந்தார் என்றோ குறிப்பிடவில்லை.  எனவே இவர் தன்னை வரலாற்று மாந்தனாக உட்புகுத்த முயல்கிறாரா என்ற ஐயம் வாசகர் நடுவணில் வலுவாக எழுகிறது. ஆகையால் இவர் தன்னைப் பற்றிய உண்மையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார். இந்தத் தகவலை கட்டுரை தொடர்பான வாசகரின் மெய்ப்பார்ப்பிற்கு இங்கே இட்டுச் செல்கிறேன்.  
    • "அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"    
    • இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் உண்மையில் கூறியது என்ன? படக்குறிப்பு,சர்வதேச நீதிமன்றத்தின் அப்போதைய தலைவர் ஜோன் டோனோகு, இந்தத் தீர்ப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றார் கட்டுரை தகவல் எழுதியவர், டொமினிக் காசியானி பதவி, சட்ட விவகாரங்களுக்கான செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியும், ரஃபாவில் அதன் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரியும் தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள வழக்கின் மீதான விசாரணையை ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் மீண்டும் தொடங்கியுள்ளது. தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள வழக்கை "முற்றிலும் ஆதாரமற்றது" மற்றும் "தார்மீக ரீதியாக வெறுக்கத்தக்கது" என்று கூறிய இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இதன் மீது பதிலளித்துள்ளது. தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்ததில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) ஒவ்வொரு வார்த்தைகளும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அத்தகைய ஆய்வு தற்போது அதன் சமீபத்திய தீர்ப்பில் பயன்படுத்தியுள்ள "நம்பத்தகுந்த" என்ற வார்த்தையை மையமிட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் சர்வதேச நீதிமன்றம் ஓர் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் இருந்த ஒரு முக்கியமான பத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தது: “நீதிமன்றத்தின் பார்வையில், உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள்... தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் விஷயங்களில் சிலவற்றையாவது முடிவு செய்யப் போதுமானது மற்றும் அது பாதுகாப்பைக் கேட்பதற்கான காரணங்கள் நம்பத்தகுந்ததாகும்.” இந்த வார்த்தைகள் சட்ட வர்ணனையாளர்கள் உள்ளிட்ட பலராலும், காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்ற கூற்று "நம்பகத்தகுந்தது" என்று நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக விளக்கப்பட்டது. இந்த விளக்கமானது வேகமாகப் பரவி, ஐநா ஊடக செய்தி, பிரசார குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பிபிசி உட்படப் பல்வேறு ஊடகங்களிலும் வெளியானது. இருப்பினும், ஏப்ரல் மாதம் பிபிசியிடம் பேட்டியளித்த சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஜோன் டோனோக், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதுவல்ல என்று கூறினார். மாறாக, இஸ்ரேலுக்கு எதிராக வழக்கைக் கொண்டு வருவதற்கு தென்னாப்பிரிக்காவுக்கு உரிமை உண்டு என்பதையும், பாலத்தீனியர்களுக்கு உண்மையில் சரிசெய்ய முடியாத அளவிற்கு ஆபத்தில் இருக்கும் உரிமையான, "இனப்படுகொலையில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கான நம்பத்தகுந்த உரிமைகள்" இருப்பதாகவும் நிறுவுவதே இந்தத் தீர்ப்பின் நோக்கம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் ஜோன் டோனோகு இனப்படுகொலை நடந்துள்ளதா என்பதை தற்போதைக்கு கூறத் தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள், தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ள சில செயல்கள் நிரூபிக்கப்பட்டால், அவை ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின் கீழ் வரலாம் என்று முடிவு செய்தனர். இப்போது இந்த வழக்கின் பின்னணி என்ன? அதன் சட்டபூர்வ முரண்கள் எப்படி வெளிப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம். சர்வதேச சட்டங்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைக் கையாள்வதற்காக சர்வதேச நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அதாவது, இனப்படுகொலை தீர்மானம் போன்ற நாடுகளுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்ட சட்டங்களின் மூலம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் அதுபோன்ற வெகுமக்கள் படுகொலைகளைத் தடுக்க முயலும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா இந்த சர்வதேச நீதிமன்றத்தில், காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என்பதை நிரூபிக்கும் முயற்சியாக வழக்கு ஒன்றைத் தொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தென்னாப்பிரிக்காவின் வழக்குப்படி, இஸ்ரேலுக்கு "காஸாவில் உள்ள பாலத்தீனியர்களை அழிக்கும்" நோக்கம் இருப்பதால், அது போரை நடத்துகிற விதம் "இயல்பிலேயே இனப்படுகொலை" பாணியிலானது என்று அது குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் முற்றிலுமாக நிராகரித்தது. முழு வழக்கும் களத்தில் என்ன நடக்கிறது என்பதை தவறாகச் சித்தரிப்பதாக அது கூறியது. இஸ்ரேல் இனப்படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுவதற்கான தெளிவான மற்றும் சரியான ஆதாரங்களை தென்னாப்பிரிக்கா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இஸ்ரேலும் தன் பங்கிற்கு, எதிர்தரப்பு முன்வைக்கும் கூற்றுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து, பல நாடுகளால் பயங்கரவாதக் குழு என்று அறிவிக்கப்பட்ட ஹமாஸுக்கு எதிரான, தீவிரமான ஒரு நகர்ப்புற போரில், அது எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமான தற்காப்பு மட்டுமே என்று வாதிடுவதற்கு உரிமை உண்டு. அப்படி ஆய்வுகள் முடிந்து இந்த வழக்கின் முழு செயல்பாடுகள் முடியவே பல ஆண்டுகள் ஆகலாம். எனவே தென்னாப்பிரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளை முதலில் "தற்காலிக நடவடிக்கைகளை" மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில்தான், நீதிமன்றத்தின் இறுதி முடிவை எட்டுவதற்கு முன்பு மேலதிகமான பாதகங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தற்போதைய சூழலை அப்படியே நிறுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேலின் ஊடுருவலை உடனடியாக நிறுத்த உத்தரவிடுமாறு தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திடம் கோரியுள்ளது. "பாலத்தீன மக்களின் உரிமைகளுக்கு மேலும், கடுமையான மற்றும் சரிசெய்யவே முடியாத பாதகங்கள் ஏற்படாமல் பாதுகாக்க" தேவையான நடவடிக்கைகளை எடுக்க இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றதில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கும் மேலாக, காஸாவில் உள்ள பாலத்தீனியர்களின் உரிமைகள் நீதிமன்றத்தால் பாதுகாக்கபட வேண்டுமா என்பது குறித்து இரு நாட்டு வழக்கறிஞர்களாலும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தின்மீது 17 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜனவரி 26ஆம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் சில நீதிபதிகள் மாற்றுக் கருத்தையும் கொண்டிருந்தனர். "தற்போதைய சட்ட நடவடிக்கைகளின் இந்தக் கட்டத்தில், தென்னாப்பிரிக்கா பாதுகாக்க விரும்பும் உரிமைகள் உள்ளதா என்பதை உறுதியாகத் தீர்மானிக்க நீதிமன்றம் கூடவில்லை" என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது. மாறாக, “தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் மற்றும் அது பாதுகாக்க வேண்டியதாகக் கருதும் உரிமைகள் நம்பத்தகுந்ததா என்பதை மட்டுமே அது தீர்மானிக்க வேண்டும்,” என்றது. "நீதிமன்றத்தின் பார்வையில், உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள்... தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் சில உரிமைகள் நம்பத்தகுந்தவை என்று முடிவு செய்யப் போதுமானது." காஸாவில் உள்ள பாலத்தீனியர்களுக்கு இனப்படுகொலை தீர்மானத்தின் கீழ் நம்பத்தகுந்த உரிமைகள் இருப்பதாக முடிவு செய்த பின்னர், அவர்கள் உண்மையில் மீளவே முடியாத சேதத்தின் அபாயத்தில் உள்ளனர் என்றும், இந்த முக்கியமான பிரச்னைகள் கேள்விக்குரியதாக இருக்கும் நிலையில், இனப்படுகொலை நிகழாமல் தடுக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வரப்பட்டது. இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததா என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை - ஆனால் "அதன் வார்த்தைகளால் இனப்படுகொலை நடக்கும் அபாயம் இருப்பதாக நம்புகிறதா?" என்ற சர்ச்சை இங்குதான் எழுந்தது. ஏப்ரல் மாதம், நான்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட சுமார் 600 பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள், இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தும்படியும், "இனப்படுகொலைக்கான ஒரு நம்பத்தகுந்த அபாயத்தை" குறிப்பிட்டும் பிரிட்டன் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.   பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இது இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞர்களிடம் இருந்து (UKLFI) எதிர்க் கடிதத்திற்கு வழிவகுத்தது. காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான நம்பத்தகுந்த உரிமை இருப்பதாக மட்டுமே சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று 1,300 பேர் கொண்ட அந்தக் குழு கூறியது. மேலும் இந்தக் கடிதங்கள் மற்றும் விளக்கங்களில் சர்ச்சை தொடர்ந்தது. முதல் குழுவில் உள்ள பலரும் இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞர்களின் விளக்கத்தை "வெற்று வார்த்தை விளையாட்டு" என்று விவரித்தனர். நீதிமன்றத்தில், வெறும் தத்துவார்த்த கேள்வியில் மட்டும் தனியாக அக்கறை செலுத்திக் கொண்டிருக்க முடியாது, காரணம் அதன் பங்கு அதைவிட மிகவும் அதிகமானது என்று அவர்கள் வாதிட்டனர். மேலும், இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி குறித்த கேள்வி, பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவின் முன் நடைபெற்ற சட்டப்பூர்வ விவாதத்தில் தெளிவாகவும், கவனமாகவும் முன்னிலைப்படுத்தப்பட்டது. முன்னாள் பிரிட்டன் உச்சநீதிமன்ற நீதிபதியான லார்ட் சம்ப்ஷன், "இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞர்களின் கடிதத்தில் சர்வதேச நீதிமன்றம் செய்கிற அனைத்தையும், காஸா மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகாமல் இருக்க உரிமை உண்டு என ஒரு விரிவான சட்டமாக ஏற்றுக்கொண்டதாகப் பரிந்துரைக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். நான் அந்த முன்மொழிவை அரிதாகவே விவாதிக்கக் கூடியதாகக் கருதுகிறேன் என்று சொல்ல வேண்டும்,” என்று கமிட்டியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் அது அப்படி இல்லை, என்று இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞரான நடாஷா ஹவுஸ்டோர்ஃப் பதிலளித்தார். "இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என்ற நம்பத்தகுந்த அபாயத்தின் ஆதாரங்களைக் கூறுவது நீதிமன்றத்தின் தெளிவற்ற அறிக்கைகளைப் புறக்கணிக்கிறது என்பதை நான் மரியாதையுடன் வலியுறுத்துகிறேன்," என்று அவர் பதிலளித்தார். ஒருநாள் கழித்து, தற்போது சர்வதேச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜோன் டோனோகு பிபிசியின் ஹார்ட் டாக் (HARDtalk) நிகழ்வில் பங்கேற்று, நீதிமன்றம் என்ன செய்தது என்பதை விளக்கி விவாதத்தை வெளிப்படையாக முடித்து வைக்க முயன்றார். "அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை - மேலும் ஊடகங்களில் அடிக்கடி கூறப்படும், இனப்படுகொலை நம்பத்தகுந்தது என்ற விஷயத்தை நான் தெளிவுபடுத்துகிறேன்” என்று அவர் கூறினார். "நீதிமன்றம் தனது உத்தரவில், இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டிய பாலத்தீனர்களின் உரிமைக்கு மீண்டும் சரிசெய்யவே முடியாத அளவுக்குத் தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதையே வலியுறுத்தியது. ஆனால் அடிக்கடி ஊடகங்களில் வெளியாகும் இனப்படுகொலைக்கான நம்பகத்தகுந்த ஆதாரங்கள் உள்ளது என்று கூறப்படும் கூற்று நீதிமன்றம் கூறியது அல்ல.” அப்படியான மோசமான பாதிப்புகள் நடந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் காலம் வெகு தொலைவு உள்ளது. https://www.bbc.com/tamil/articles/cj5l03dgzmyo
    • சிறிதரனை ஜூலி அண்மையில் சந்தித்தார். சிறிதரன் தட்டி கேட்ட கேளுவையில் மேசை உடைந்து விட்டதாம்🤣 
    • படிமப்புரவு (Image Credit): சாத்திரி அவர்களின் "அவலங்கள்" என்ற வலைப்பூவிலிருந்து.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.