Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் இலக்கு: பொறுப்புக் கூறலா � ஆட்சிமாற்றமா?

Featured Replies

kerry.jpg

பொறுப்புக் கூறலா � ஆட்சிமாற்றமா?

  • அமெரிக்கா என்றாலும் சரி, பிரித்தானியா என்றாலும் சரி, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்றாலும் சரி, சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இல்லை என்று தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர். கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட இதைப் பற்றிப் பேசியுள்ளார். சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதன் மூலம், சர்வதேசத் தலையீடுகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் அதைச் செய்தால், அமெரிக்காவுக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அல்லது தலையீடு செய்வதற்கான ஒரு பிடிமானம் இல்லாமல் போய் விடும் என்பதே அவரது கருத்தாகத் தெரிகிறது. அதேவேளை, சட்டத்தின் ஆட்சியை, இன்றைய சூழலில் ஆட்சி மாற்றத்துக்கான ஒரு விதையாக கூட கருதலாம். என்கின்றார் இன்போ தமிழ் குழுமத்தின் பிராந்திய அரசியல் இரானுவ ஆய்வாளர் ஹரிகரன் அவர்கள். 
 தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறைகளும் கூட, அமெரிக்கா எதிர்பார்க்கின்ற விடயங்களுக்கு முற்றிலும் எதிர்மாறானதாகவே இருக்கிறது. இந்தநிலையில், அமெரிக்காவுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு, ஆட்சிமாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதேயாகும். தனது நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதன் மூலம், அமெரிக்காவினால் இதனை அடையலாம்.  உலகில் இத்தகைய எத்தனையோ ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது.  இலத்தீன் அமெரிக்க நாடுகளில், ஆபிரிக்க நாடுகளில், மத்திய கிழக்கு நாடுகளில்,  இத்தகைய பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இப்போது, உக்ரேனில் நடப்பது கூட, அத்தகையதொரு பின்புல முயற்சியாகவே கருதப்படுகிறது.ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முழுமையாகத் தோல்வியுள்ள நாடு என்றால், அது கியூபா மட்டும் தான். வடகொரியா விடயத்தில், அமெரிக்கா ஆட்சிமாற்றத்தில் அதிக அக்கறை செலுத்தியதாக கொள்ள முடியாது.அண்மைக்காலத்தில் சிரியா அதற்குச் சவாலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  என கூறும் ஹரிகரன் ,

தனது  விரிவான ஆய்வில், 

  • ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நாடுகளிடம் அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மான வரைவுக்கு ஆதரவு தேடும் முயற்சிகளும், அதனைத் தோற்கடிப்பதற்கான நகர்வுகளும் ஜெனிவாவில் தீவிரம் பெற்றுள்ளன.  இரண்டு தரப்புகளுமே, உறுப்பு நாடுகளினதும், வாக்களிக்கும் உறுப்புரிமை பெற்றிராத நாடுகளினதும் ஆதரவைக் கோரி நிற்கின்றன.ஏட்டிக்குப் போட்டியாக, இணை அமர்வுகள், கூட்டங்களை ஒழுங்கு செய்து, தமது ஆதரவை உறுதிப்படுத்துவதில் இருதரப்பும் மும்முரம் காட்டுகின்றன.இந்தநிலையில், அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மான வரைவை முன்வைத்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை நகர்வுகளுடன் தொடர்புபடாத தரப்புகள் மத்தியிலும் பலத்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  

    இத்தகைய விவாதங்களில்,

     1. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை முன்வைக்காமல், அமெரிக்கா ஏமாற்றி விட்டது.

    2. கடந்தகாலங்களைப் போன்றே தமிழர் தரப்பு சர்வதேச சமூகத்தை நம்பி ஏமாந்து விட்டது, இனியும் இவ்வாறிருக்கக் கூடாது.

    3. அமெரிக்காவின் இலக்கு குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதல்ல, ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதே.

    4. இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டுக்குக் காரணம், இங்கு இராணுவத் தளத்தை அமைத்துக் கொள்வதே.

    என்பன போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுவதைக் காணமுடிகிறது.

    இந்தநிலையில், இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வி பலரிடமும் தோன்றுவது இயல்பு. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ஒரே நோக்கம், தமது நலன்களை அடைவது மட்டும் தான் என்று முழுமையாக கூறமுடியாது. ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தாமரா குணநாயகம், ஒரு இடதுசாரி சிந்தனை கொண்டவர். இலங்கையில் தளம் அமைப்பதற்காகவே அமெரிக்கா இந்த நகர்வில் ஈடுபடுகிறது என்று அவர் வாதிடுவது முற்றிலும் சரியானதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இலங்கை ஒரு மூலோபாய கேந்திரம் மிக்க இடமாக இருந்தாலும், இங்கு இராணுவத் தளம் ஒன்றை அமைக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் திட்டங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. 

    ஆதாவது, அயல்நாடான இந்தியாவின் எதிர்ப்பை அது சம்பாதித்துக் கொடுக்கும் என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். இலங்கையில் தளம் ஒன்றை அமைப்பதற்காக, ஆசியாவில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு ஒன்றை இழக்க அமெரிக்கா தயாரில்லை. அதாவது 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவை, தமது பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நல்ல சந்தையாகவே அமெரிக்கா பார்க்கிறது.  குறிப்பாக போர்த்தளபாட ஏற்றுமதி மூலம் நல்ல வருமானத்தைப் பெறுகிறது. தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தினால், இருதரப்பு உறவுகளில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், இந்த விவகாரத்தினால், ஆசியாவில் அமெரிக்கா ஒரு மிகச் சிறந்த சந்தையை இழந்துவிட முடியாது என்று கூறியிருந்தார். எனவே, அமெரிக்கா பாதுகாப்புக்கு மட்டுமன்றி, தமது வர்த்தக விருத்திக்கும், இந்தியாவினது ஒத்துழைப்பு அவசியமெனக் கருதுகிறது. இப்படிப்பட்ட நிலையில், தாமரா குணநாயகம் கூறுவது போன்று, இலங்கையில் தளம் ஒன்றை அமைப்பது மட்டும் தான் அமெரிக்காவினது இலக்கு என்று வரையறுப்பது முடியாத காரியமாகும்.

    தளங்களை அமைத்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் யுகம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.

    அதற்காக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை அமெரிக்கா குறைத்து மதிப்பிடுவதாக கொள்ள முடியாது.

    இலங்கையில் தளம் அமைக்க முடியாது போனாலும், தமது நலனுக்கு விரோதமாக அது பயன்படுத்தப்படாது என்று உறுதிப்படுத்திக் கொள்வது அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையின் ஒரு அம்சமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதைச் சாத்தியப்படுத்திக் கொள்வது ஒன்றும் அவ்வளவு இலகுவானதல்ல.அந்த இலக்கை அடைவதற்கான ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக கூட, இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நகர்வுகளைக் குறிப்பிடலாம். 

    அதாவது, இப்போதைய அரசாங்கம், அமெரிக்காவின் நலன்களுக்கு வழிவிடுவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை.

    ஏனென்றால், அது சீனாவின் நிழலில் தங்கியிருக்கிறது.

    அதுமட்டுமன்றி, தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறைகளும் கூட, அமெரிக்கா எதிர்பார்க்கின்ற விடயங்களுக்கு முற்றிலும் எதிர்மாறானதாகவே இருக்கிறது. இந்தநிலையில், அமெரிக்காவுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு, ஆட்சிமாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதேயாகும். தனது நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதன் மூலம், அமெரிக்காவினால் இதனை அடையலாம்.

    உலகில் இத்தகைய எத்தனையோ ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில், ஆபிரிக்க நாடுகளில், மத்திய கிழக்கு நாடுகளில், இத்தகைய பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.இப்போது, உக்ரேனில் நடப்பது கூட, அத்தகையதொரு பின்புல முயற்சியாகவே கருதப்படுகிறது.ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முழுமையாகத் தோல்வியுள்ள நாடு என்றால், அது கியூபா மட்டும் தான்.வடகொரியா விடயத்தில், அமெரிக்கா ஆட்சிமாற்றத்தில் அதிக அக்கறை செலுத்தியதாக கொள்ள முடியாது.அண்மைக்காலத்தில் சிரியா அதற்குச் சவாலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

     இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள அமெரிக்கா நினைக்கலாம்.

    சட்டத்தின் ஆட்சி பற்றி இப்போது மேற்குலகினால் அதிகமாகப் பேசப்படுவதைக் கவனிக்கலாம்.

    அமெரிக்கா என்றாலும் சரி, பிரித்தானியா என்றாலும் சரி, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்றாலும் சரி, சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இல்லை என்று தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர். கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட இதைப் பற்றிப் பேசியுள்ளார். சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதன் மூலம், சர்வதேசத் தலையீடுகளில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் அதைச் செய்தால், அமெரிக்காவுக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அல்லது தலையீடு செய்வதற்கான ஒரு பிடிமானம் இல்லாமல் போய் விடும் என்பதே அவரது கருத்தாகத் தெரிகிறது. அதேவேளை, சட்டத்தின் ஆட்சியை, இன்றைய சூழலில் ஆட்சி மாற்றத்துக்கான ஒரு விதையாக கூட கருதலாம். 

    சட்டத்தின் ஆட்சியை மீள நிறுவுவதன் மூலம், இலங்கையில் அமெரிக்கா சுட்டிக்காட்டும் குறைபாடுகள் எல்லாவற்றையும் களைவதற்கான சூழல் உருவாக்கப்படும்.

    ஜனநாயகம், ஊடக சுதந்திரம், நீதித்துறை சுதந்திரம், ஊழல், மத சுதந்திரம், பொறுப்புக்கூறல் என்று எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று கருதக் கூடும்.

    இந்த அரசாங்கத்தைக் கொண்டு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்று தான் நினைத்த எதையும் அமெரிக்காவினாலோ, சர்வதேச சமூகத்தினாலோ சாதிக்க முடியவில்லை. இதற்கு மேல், பொருளாதாரத் தடை உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம், இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுப்பதற்கு சர்வதேச சூழமைவுகள் அவ்வளவாக இடம்கொடுக்கவும் மாட்டாது. அவ்வாறு செய்வதானாலும் கூட, அதை அமெரிக்காவும் மேற்குலகும் மட்டும் தன்னிச்சையாகவே மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, தமக்கு வசதியான ஆட்சி ஒன்றை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அடைய நினைத்த இலக்குகளை அடையலாம் என்று அமெரிக்கா சிந்தித்தால் அது ஆச்சரியமானதாக இருக்க முடியாது. அதேவேளை, இந்த விவகாரத்தில் அமெரிக்காவினது தலையீடுகள் முற்றுமுழுதாக தனது நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்ப்பது சற்று மிகையானதாகவே தோன்றுகிறது.

    ஏனென்றால், 

    பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுக்க முடியாது.

    அவை தான், இந்த காய்நகர்த்தல்களின் மையமாக உள்ளன.

    அதேவேளை, இத்தகையதொரு சூழலை அமெரிக்காவாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இலங்கை அரசாங்கமே அந்த சூழலை உருவாக்கிக் கொடுத்தது.

    போர் முடிவுக்கு வந்தவுடன், ஜனாதிபதி மகிந்தவுக்கு வாழ்த்துக் கூறிய அமெரிக்கத் தூதுவராக இருந்த றொபேட் ஓ பிளேக், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் இரண்டும் அவசியம் என்று வலியுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சி தான், இன்று ஜெனிவாவில் இலங்கையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. அப்போது, பிளேக் சொன்னதை அரசாங்கம் தெளிவாகப் புரிந்து செயற்பட்டிருந்தாலோ, அல்லது அதற்குப் பின்னரேனும், அமெரிக்காவின் கருத்துகளை சரியாக செவிமடுத்திருந்தாலோ, பொறுப்புக்கூறலை மையமாக வைத்து, சட்டத்தின் ஆட்சியை மீளநிறுவுதற்கு அமெரிக்காவினால் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போயிருக்கும். அதேவேளை, சட்டத்தின் ஆட்சி இலங்கையில் மீள நிறுவப்பட்டால், அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டால், பொறுப்புக்கூறலை அமெரிக்கா மறந்து போய் விடும் என்ற கருத்தும் உள்ளது.

    ஆனால், அவ்வளவு இலகுவாக அமெரிக்காவினால் இந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவும் முடியாது.ஏனென்றால், இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா கை வைத்ததே, பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை மையப்படுத்தித் தான்.எனவே, அந்த இலக்கை அடைய வேண்டும் அல்லது அதனை அடைந்து விட்டதாகவேனும் உலகிற்குக் காட்டிக்கொள்ள வேண்டி தேவை அமெரிக்காவுக்கு உள்ளது. அமெரிக்காவினது மைய இலக்கு எது என்பது இங்கு முக்கியமானதல்ல. அமெரிக்கா தனது இலக்கை அடைய மேற்கோள்ளும் வழிமுறைகளின் ஊடாக, தமிழர் தரப்பு தமது இலக்குகளை அடைய முயற்சித்தலே இப்போது முக்கியமானது. �நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்� என்ற கருத்தை இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் நெல்லாக இருந்து அந்த நீரை முழுமையாக அடைய முடியாது போனாலும், புல்லுக்குக் கிடைக்கும் நீரைப் போல, ஒரு பகுதியையேயும் அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்றே தெரிகிறது.  

நன்றி தாய் நாடு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.