Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் மீதான ஆக்கிரமிப்பு அரசு தலையில் ஆபத்து

Featured Replies

சம்பூர் மீதான ஆக்கிரமிப்பு அரசு தலையில் ஆபத்து

-சிறீ இந்திரகுமார்-

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் படையினரைப் பாதுகாக்க வேண்டுமானால் புலிகளின் ஒன்று திரட்டப்பட்ட படைப்பலத்தை சிதைக்கும் பட்சத்திலேயே யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து பாதுகாக்கவும், அங்கு தரித்துள்ள படையினரின் உயிர்களைக் காப்பாற்றவும் முடியுமென்ற நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசு வடபாகத்தில் சிக்குப்பட்டிருக்கும் பெரும் படைவளத்தைப் பாதுகாக்கக் கிழக்கில் ஒரு போர் வாசலைத் திறந்து புலிகள் இயக்கத்தை அதற்குள் வீழ்த்த முயன்ற போதும் புலிகள் இயக்கம் தனது மூலோபாயத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில் தன்னைப் பாதுகாத்துச் சிறிலங்கா இராணுவம் அகலக்கால் பதிக்க அனுமதித்துள்ளது.

ஏற்கெனவே மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலமாக அகலக்கால் பதித்த சிறிலங்கா இராணுவம் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தனது இராணுவ மேலாண்மையை புலிகள் இயக்கத்திடம் பறிகொடுத்துத் திணறியது. அத்தோடு கிழக்கில் இப்போது கைப்பற்றியிருக்கும் சம்பூர் மற்றும் இதர நிலப்பகுதியையும், மட்டக்களப்பில் பெரும் பகுதியையும் புலிகள் இயக்கத்திடம் இழந்திருந்தது.

எனவே சிறிலங்கா அரசின் சம்பூர் வெற்றிச்செய்தியின் பின்னால் அரசுக்கிருக்கும் ஆபத்தை நாம் இந்தத்தருணத்தில் புரிந்துகொள்வது அவசியம்.

ஏனெனில், புலிகள் இயக்கம் யாழ்ப்பாணம் மீது ஒரு பெரும் தாக்குதலைத் தொடுக்க முற்படும்போது சிறிலங்கா அரச படைகளுக்குத் தேவையான மேலதிக படைகளைக் கிழக்கிலிருந்து எடுக்க வேண்டிய நிர்ப்பந்தமே சிறிலங்கா அரசிற்கு ஏற்படும்.

அவ்வாறு சிறிலங்கா இராணுவம் மேலதிக படைகளைக் கிழக்கிலிருந்து எடுக்க முற்படும் போது மீண்டும் கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் தாம் ஆக்கிரமித்திருக்கும் நிலங்களிலிருந்து வெளியேற வேண்டியேற்படும்.

அப்போது, புலிகள் இயக்கம் சம்பூரிலிருந்து வெளியேறிய இராணுவ பரிமாணத்தைச் சிறிலங்கா அரசு மட்டுமல்ல தமிழ் மக்களும் கூடப் புரிந்து கொள்வர்.

திருக்கோணமலையின் சம்பூர்ப்பகுதியை சிறிலங்காப்படைகள் ஆக்கிரமித்த செய்தியை முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அவரது அரசின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்தையும் யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்ததை பெருவெற்றியாகப் பிரகடனப்படுத்தியது போன்று தற்போதைய சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சம்பூரைக் கைப்பற்றிய செய்தியைத் தனது கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் பெரு வெற்றிச் செய்தியாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்ற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.