Jump to content

ஷேக்ஸ்பியர் ஒரு சவால்தான்


Recommended Posts

x01_1863858h.jpg.pagespeed.ic.rhys6ivTdL

 

உலகத்தின் மகாகவிகளுள் ஒருவரான ஷேக்ஸ்பியர் ஐம்பத்துமூன்று ஆண்டுகள் வாழ்ந்து 1616 ஏப்ரல் 23-ல் மறைந்தார். அவருடைய பிறந்த நாள் எதுவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவருக்கு ஞானஸ்னானம் வழங்கப்பட்ட நாள் ஏப்ரல் 26 என்று தெரிகிறது. எனவே, ஏப்ரல் முழுவதையும் ஷேக்ஸ்பியர் மாதமாகக் கொண்டாடுவதில் தவறில்லை.

தமிழ்நாட்டில் ஷேக்ஸ்பியர்

ஷேக்ஸ்பியருடைய நாடகங்களில் இலக்கியவாதி களுக்கு உள்ள ஈர்ப்பு இன்றுவரை வலுவாகத்தான் இருக்கிறது. நாடக ரசிகர்களால் மட்டுமின்றி புகழ்மிக்க கவிஞர்களாலும் இலக்கிய விமர்சகர்களாலும் வெகுவாகப் போற்றப்பட்டவர். தமிழ்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வி அறிமுகமான நாட்களிலிருந்தே ஷேக்ஸ்பியரின் படைப்புகள், மாணவர்கள் படிக்க வேண்டுமென்று பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுவந்தன. ஏதாவது ஒரு இலக்கிய வடிவில் நாடகங்களின் சுருக்கப்பட்ட கதைகளாகவோ, அவரது கவிதைகளாகவோ, நாடகங்களாகவோ மாணவர்கள் அவற்றைப் படித்தும் விவாதித்தும் நடித்தும் வந்துள்ளனர். இன்றைக்கும் பள்ளியிலோ கல்லூரியிலோ நாடகப் போட்டி நடைபெறுமானால் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் தவறாமல் இடம்பெறும்.

தமிழ்நாட்டில் மேடை நாடகங்களின் தொடக்க காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாரின் ஷேக்ஸ்பியர் நாடகத்தழுவல் மேடையேறியுள்ளது. தமிழ்த் திரைப்படங்களும் இதற்கு விலக்கல்ல. நீதிபதி எஸ். மகராஜனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் ஷேக்ஸ்பியருக்குத் தமிழ்நட்டிலிருந்த வரவேற்புக்குச் சான்று. படித்தவர்கள் தங்களது இலக்கிய ரசனையின் நுட்பத்தைக் காட்டிக்கொள்வதற்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் தங்களுக்கு உள்ள ஈடுபாட்டைச் சான்றாக முன்வைப்பார்கள். இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய ஷேக்ஸ்பியர் தன் காலத்திலோ பின்னாட்களிலோ விமர்சனமில்லாமல் அப்படியே ஏற்று அங்கீகரிக்கப்பட்டவரல்ல.

மரபுக்குக் கட்டுப்படாதவர்

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இலக்கியவாதிகளின் கவனத்துக்கு உரியவைதான். அதைவிடக் கவனத்துக்கு உரியதும் சுவாரசியமானதும் இந்த நாடகங்கள் நாடுதோறும், காலந்தோறும் எப்படி ஏற்கப்பட்டு விமர்சிக்கப்பட்டன என்பதுதான். ஒரு படைப்பு எப்படித் தோன்றியது என்பது மட்டுமல்ல வரலாறு. மக்களிடையே அதற்கு வெவ்வேறு காலங்களில் இருந்த வரவேற்பின் தன்மையும் அந்தப் படைப்பின் இலக்கிய வரலாறுதான்.

இந்த அடிப்படையில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பார்க்கலாம். அவர் காலத்திலும் அதற்கு முன்பும் கிரேக்கப் படைப்பிலக்கியக் கோட்பாடுகளும், விமர்சன மரபும் அப்படியே ஏற்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஒத்துவராத படைப்புகள் இலக்கியமல்ல என்று கூறப்படும் அளவுக்கு அவை போற்றிப் பின்பற்றப்பட்டன. நாடகத்தில் நிகழ்வுகளின் ஓர்மை (ஓர்மை - யூனிட்டி), நிகழ்விடத்தின் ஓர்மை, நிகழும் காலத்தின் ஓர்மை இப்படி மீற முடியாத ஓர்மைக் கோட்பாடுகள் மூன்று இருந்தன. ஷேக்ஸ்பியர் இவற்றை மதித்தவராகத் தெரியவில்லை. கிரேக்கமோ லத்தீன் மொழியோ அறியாத அவருக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்றுகூட வாதிட்டார்கள். ஆனாலும், அவரது நாடகங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறி, இணையற்ற நாடக ஆசிரியராக அவர் விளங்கினார். இது விமர்சன உலகுக்கு ஒரு இக்கட்டுதான். செவ்விலக்கியக் கோட்பாடுகளுக்கு ஒத்துவராத நாடகங்களின் வெற்றியை எப்படி விளங்கிக்கொள்வது? அந்தக் கோட்பாடுகள் போதாதவை என்பதா அல்லது ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் புதிதாக அறிய வேண்டிய கோட்பாடுகளுக்கு அறிகுறியைக் காட்டுகின்றன என்பதா?

மேதையா கலைஞரா?

அவர் எடுத்துக்கொண்ட படைப்புச் சுதந்திரம் தறிகெட்டதனமானது என்று சிலர் சொல்வார்கள். அவர் மேதைதான் ஆனால் அந்த மேதைமையில் நாடக மேடைக்கான திறமையில்லை என்றார் அவருடைய சமகாலத்தவரான பென் ஜான்சன். மாத்யு ஆர்னல்ட் கூட ஷேக்ஸ்பியரிடம் முழுமைபெற்ற நடையின் அழுத்தத்தைக் காண முடியவில்லை என்றார். மற்ற சிலரும் அவரை மேதை என்று ஏற்பார்களே தவிர கலைஞர் என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மெத்தப் படித்திருக்கத்தான் வேண்டுமா? கலை, இயற்கையின் வரமல்லவா? மேதைமை திறமை, படிப்பறிவு இயற்கை, இப்படியாக ஷேக்ஸ்பியரின் வெற்றியை விளங்கிக்கொள்வதற்கு நுட்பமான பாகுபாடுகளையெல்லாம் கற்பிதம் செய்துபார்த்தார்கள். விமர்சன மரபும், விமர்சன உலகும் புதிதாக எதிர்கொள்ள வேண்டியிருந்த ஒரு சவாலாக ஷேக்ஸ்பியர் இருந்தார்.

கவி நியாயம் அல்லது இலக்கிய நியாயம் என்ற ஒரு கோட்பாடு இருந்தது. நாடகமோ கதையோ இறுதியாக நல்லவை வெல்வதாகவும், அல்லவை தோற்பதாகவும் காட்ட வேண்டும். நல்லவனாக இருப்பதன் பயனை இப்படிச் சுட்ட வேண்டும். ஷேக்ஸ்பியரின் கிங் லியர், ஒத்தெல்லோ போன்ற நாடகங்களெல்லாம் இதற்கு ஒத்துப்போகாதவை. அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த நாடகங்களின் துன்பகரமான முடிவைச் சகித்துக்கொள்ள இயலாமல் மாற்றியமைத்து நடித்தார்கள். ஆனால், மாற்றப்பட்ட முடிவுகள் வெற்றி பெறவில்லை. அதாவது, ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் கோலோச்சிய இலக்கியக் கோட்பாடு தோற்றுப்போனது. மேலைநாட்டு விமர்சன மரபுக்கு இது ஒரு புதிர்.

டி.எஸ். எலியட் உட்பட மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர்கள் பலர் ஷேக்ஸ்பியரிடம் குறைகண்டவர்களோடு ஒத்துப்போயினர். அதே நேரத்தில் வில்சன் நைட் போன்ற விமர்சகர்கள் நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையில் பொருட்செறிவுள்ள புதிய தளம் ஒன்றினை ஷேக்ஸ்பியரின் சொற்கள் வாயிலாகவே கண்டார்கள்.

போதாமையை வெளிச்சம் காட்டியவர்

செவ்விலக்கியக் கோட்பாடுகளின் போதாமையைக் காட்டியவர். புதிய கோட்பாடு களுக்கான தேவையைப் புரியவைத்தவர். ஆங்கில இலக்கிய விமர்சன மரபை வளமாக்கி மேம்படுத்தியவர். இப்படிப்பட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் கதைகளெல்லாம் அவரது சொந்தக் கற்பனையல்ல. கதை மரபுகள் பலவற்றிலிருந்து அவற்றை எடுத்து நாடக மேடைக்கு மறுவடிவமைப்பு செய்துகொண்டார். நல்லவர்களை மேலும் நல்லவர்களாக்குவார், கெட்டவர்களை மேலும் கெட்டவர்களாக்குவார் அல்லது கெட்டவர்களை நல்லவர்களாக்குவார். இல்லாத கதைமாந்தர்களையும் நிகழ்வுகளையும் தானே உருவாக்கி ஒட்டிவைப்பார். இப்படி, பழைய கதைகளையெல்லாம் உருமாற்றி நாடகமாக்குவார். கதைகள் ஏற்கெனவே மக்கள் அறிந்தவையாகப் புழக்கத்தில் இருக்கும். நாடக ஆசிரியருக்கு இந்த நிலைமையில் ஒரு வசதியும் அத்துடன் ஒரு ஆபத்தும் உண்டு. ஏற்கெனவே தெரிந்த கதையின் புதிய நாடக வடிவம்பற்றி மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

இப்படிப் புழக்கத்தில் இருக்கும் கதைகளை நாடகமாக வடிவமைப்பது இன்றைய இலக்கிய உலகில் ஒரு இரண்டாம்தரப் படைப்பாகக் கருதப்படலாம். அவர் காலத்தில் இது பெருமையாகப் போற்றி வளர்க்கப்பட்ட மரபு. அசல், போலி என்பதெல்லாம் அப்போது இலக்கிய விழுமியங்கள் அல்ல. வடிவமாற்றம் செய்வதில் வெளிப்படும் திறமையும், அதில் காணும் கற்பனையும்தான் படைப்பின் மதிப்பீட்டுக்கான அடிப்படை. பழைய கிரேக்க மரபு ஒன்றை ஷேக்ஸ்பியர் உலுக்கி ஆட்டம்காண வைத்தார். அதே காலத்தின் மற்றொரு இலக்கிய மரபுக்கு வலுசேர்த்தார். இப்படியெல்லாம் கருதாமல் அவரது நாடகங்களை மேடைக் கூத்து என்று கண்டவர்களும் உண்டு.

படைப்பிலக்கிய விமர்சன மரபுகளையும் கோட்பாடுகளையும் கிரேக்க-ரோமானிய காலத்திலிருந்து இன்றுவரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களைக் கொண்டே கற்கலாம், கற்பிக்கலாம். இவரது நாடகங்களைக் கற்பிக்க இயலாது; இவற்றைக் கற்கும் திறன் மாணவர்களுக்குக் குறைவு; பொது ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இவை இருந்தால் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பெரும் சுமையாக இருக்கும்; இவ்வாறு சில காரணங்களைக் கண்டு தமிழகப் பல்கலைக்கழகங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து ஷேக்ஸ்பியரை நீக்கிவிட்டன.

எந்த ஒரு பாடத்தையும் அதன் உள்ளடக்கத்துக்காக மட்டுமே வாசிப்பதும் கற்பிப்பதும் மேம்போக்கான கல்வி. உள்ளடக்கம் அதன் பின்புலத்தில் இருக்கும் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் விளக்குவதற்கும் கற்பதற்கும் ஒரு வாய்ப்பு. ஷேக்ஸ் பியர் நல்கும் இந்த வாய்ப்பைத் தமிழகம் மறுத்து விட்டது என்றுதானே சொல்ல வேண்டும்!

ஷேக்ஸ்பியர் எழுதிய கிங் லியர் படைப்பிலிருந்து...

வீடின்றி, புயலில் சிக்கி அவதியுறும்

பரிதாபத்துக்குரிய உயிர்களே

இத்தகையதொரு இரவை எப்படி நீங்கள்

தாக்குப்பிடிப்பீர்கள்?

உங்கள் தலைக்கு மேல் கூரை இல்லை.

உங்களைக் கதகதப்பாக்கிக்கொள்ளக் கணப்பு இல்லை

உங்கள் உடல்களை மறைக்கக் கந்தல்களைத் தவிர வேறில்லை.

நான் அரசனாக இருந்தபோது

உங்களுக்காகப் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை.

வலிமை வாய்ந்த மனிதர்களே...

இந்த எளியவர்கள் படும் துயரத்தை அறிந்து

அதன்மூலம் உங்களை குணப்படுத்திக்கொள்ளுங்கள்

வெளியே செல்லுங்கள். ஏழைகளின் பாடுகளை உணருங்கள்

உங்களிடம் உபரியாக இருக்கும் செல்வத்தை அவர்களுக்கு அளியுங்கள்

இந்த உலகை மேலும் நியாயம் உள்ளதாக ஆக்குங்கள்.

தமிழில்: அரவிந்தன்

 

http://tamil.thehindu.com/general/art/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article5950571.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.