Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சிப்பணத்தை அமுக்கியவர்கள் குறித்து விசாரணை தீவிரம்!; அச்சத்தின் உச்சத்தில் அரசியல் கட்சியினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லோக்சபா தேர்தலில், கட்சிக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தவர்கள், கட்சி கொடுத்த பணத்தை அமுக்கியவர்கள் குறித்த விசாரணை, அரசியல் கட்சியினர் மத்தியில் தீவிரமாகியுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பல முனைப் போட்டி நிலவியது; முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது கட்சியின் ஓட்டு வங்கியை மட்டுமே நம்பி களமிறங்கியிருந்ததால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முழு ஒத்துழைப்பையும் கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்தனர்.இதுவரை எந்த தேர்தலிலும் தராத அளவுக்கு 'பூத் கமிட்டி'களுக்கும், நிர்வாகிகளுக்கும் பணம் வாரி வழங்கப்பட்டது. வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குவதற்கான முயற்சியும் நடந்தது; தொகுதிக்கு 20 கோடியிலிருந்து 30 கோடி ரூபாய் வரை பணம் விநியோகிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின;

இதற்கேற்ப, பல பகுதிகளில் ஓட்டுக்கு 200லிருந்து 500 ரூபாய் வரை பணம் தரப்பட்டது.கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத் தொகுதிகளிலும், ஓட்டுக்கு பணம் வழங்கும் புதிய கலாச்சாரத்தை இந்த தேர்தலில் உருவாக்கியுள்ளனர். ஓட்டுப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், சில கட்சிகளுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. எனவே, பணம் முழுமையாக விநியோகிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், கோவை மாநகராட்சி ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருவருக்கு 14 லட்ச ரூபாய் தரப்பட்டதில், 6 லட்ச ரூபாயை மட்டுமே விநியோகித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மீதிப்பணத்தை அந்த கவுன்சிலரும், பகுதி மற்றும் கிளைக்கழக நிர்வாகிகளும் பங்கிட்டுள்ளனர்; இதேபோல, பிற பகுதிகளிலும், பாதிக்குப் பாதி கூட, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படவில்லை என்று பரவலாக பேசப்படுகிறது.

இதனால், கட்சிப் பணத்தை தங்கள் சொந்த கஜானாவுக்குக் கொண்டு சென்றவர்கள் குறித்த விசாரணையை, சில கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.கோவை மாநகராட்சியில், முறையாக வாக்காளர்களுக்கு பணம் போய்ச் சேராத பகுதிகளைக் கண்டு பிடித்துள்ள 'மாவட்ட' நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகளை அழைத்து, 'இவ்வளவுதான் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது; மீதியைக் கொண்டு வந்து கட்சி ஆபீசில் கொடுத்து விடுங்கள்' என்று உத்தரவிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.இதன் காரணமாக, கட்சிப் பணத்தை 'அமுக்கிய' கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர். மேலும், கவுன்சிலர்கள் பலரும் தங்களது மொபைல் போன்களை 'ஸ்விட்ச் ஆப்' செய்திருப்பதாகவும் தெரிகிறது;

அதை யார் கேட்பது? : கொடுத்த பணத்தைப் பற்றி கணக்குக் கேட்பது, அரசியல் கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது; 'எங்களிடம் கணக்குக் கேட்கும் முக்கிய நிர்வாகி, 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில், ஊர் முழுவதும் செய்த வசூலில், எவ்வளவு கட்சிக்குக் கொடுத்தார் என்பது பற்றி யார் கணக்குக் கேட்பது என்று கேட்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

- dinamalar

உலகத்தின் மிக பெரிய சனநாயக நாடு என்று காதில பூ சுத்திகொண்டு இருக்கவேண்டியது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.