Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதி: கைதான பாக். உளவாளி 'திடுக்' தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை மற்றும் பெங்களூரு நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் சதிதிட்டத்துடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு  தகவல் கொடுத்ததை தொடர்ந்து, மாநில உளவு பிரிவு காவல்துறையினரும், கியூ பிரிவு காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாகிஸ்தான்  உளவாளியான ஜாகீர் உசேன் என்பவர் மண்ணடி பகுதியில்  ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக  தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஆட்டோவில் இருந்து இறங்கிய ஜாகீர் உசேனை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களின் வரைபடம், சேட்டிலைட் போன்கள், கள்ள நோட்டுகள் ஆகியவை கைபற்றபட்டன.

அவரிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேனை அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சிலர் மூளைச் சலவை செய்து, இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்துவதற்கு தயார்படுத்தி உள்ளனர். குறிப்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிகப் பெரிய நாசவேலையில் ஈடுபடுவதற்கு ஜாகீர் உசேனுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

சதிச் செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன், மாதத்துக்கு 3 முறை அவர் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். சென்னை மாநகரை தகர்க்க இங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து மனதை மாற்றுவதற்கும் ஜாகீர் உசேன் திட்டமிட்டிருந்தார். இதற்கு சென்னையில் மறைமுகமாக முக்கிய பிரமுகர்கள் சிலர் ஜாகீர் உசேனுக்கு உதவிகள் செய்திருக்கலாம் என்றும் கியூ பிரிவு காவல்துறையினர் கருதுகிறார்கள். இது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாகீர் உசேனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27415

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவுடன், பாகிஸ்தான் கூடி உறவாடும் போதே.... இந்திய மத்திய அரசு விழித்திருக்க வேண்டும்.
வெளிநாட்டு அச்சுறுத்தல், எந்த ரூபத்தில் வரும் என்பதை அறியாத.... காங்கிரஸ் மத்திய அரசு செய்த முட்டாள் தனத்தால்,
இப்போது தனது வீட்டு வாசலில், அச்சுறுத்தல் வந்துள்ளது.
 

தமிழீழ விடுதலைப் புலிகளுடன், இந்தியா இணக்கமாக போயிருந்தால்....
இப்படியான அச்சுறுத்தல் ஏற்பட சந்தர்ப்பமே... ஏற்பட்டிருக்காது.
"குதிரை ஓடிய பின், லாயத்தைப் பூட்டி பிரயோசனமில்லை"
 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு வரும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு....
புலிகளை... விழுத்த துணை நின்ற, அப்போதைய... முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியில் அமைச்சர்களாக இருந்த தமிழ் சிதம்பரங்களும், காங்கிரசுக்கு ஓட்டுப் போட்ட தமிழ்நாட்டு மக்களும் பொறுப்பாளிகள் என்பதை மறக்கப் படாது.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை தகர்த்து என்னத்த சாதிக்கப் போகிறார்கள். -------- +++++ -------- தகர்க்க எத்தனையோ இருக்குது. மென் இலக்குகளை தாக்கி.. அல்கா கூ கப்பர் என்று கூச்சல் போடுவதால் என்ன நன்மை. பயங்கரவாதிகள் என்பதை இன்னும் இன்னும் நிரூபிக்கிற வேலை தான் நடக்கும். இதனால் சோனியா.. மகிந்த போன்ற கொடியவர்களையும் அமெரிக்கா என்ற கழுகு தன் இறக்கைக்குள் மறைத்து வைத்து சனநாயகவாதிகள் என்று சாயம் பூசிக் காட்டுதலே நிகழும். :icon_idea:

 

இந்தியன், சீனன், சிங்களவன், மலையாளத்தான் போன்றவர்களது  கொள்கை..... தமிழனை அழிப்பது.

முதலாவதாக... புலி வெற்றிக் கொடியுடன் 30 ஆண்டு அரசாண்ட ஈழத்தமிழனை, வேரோடும்... வேரடி மண்ணோடும்... புடுங்கி எறிந்து விட்டார்கள்.

 

அடுத்தகுறி... உலகத் தமிழனின் தலைநகரம் தான்.

இனியும்... "அணில் ஏற விட்ட நாய் மாதிரி", சென்னைத் தமிழர்களும், இருக்க வேண்டாம் என்பதே... என் விருப்பம்.

 

Edited by தமிழ் சிறி

சென்னை: சென்னையில் ஊடுருவிய, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளியை, தமிழக, 'க்யூ' பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, சுற்றி வளைத்தனர். இவன், இலங்கையை சேர்ந்தவன்.அவன் சேகரித்து அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகத்தை, குண்டு வைத்து தகர்க்கும், ஐ.எஸ்.ஐ.,யின் நாசவேலை திட்டம் 
முறியடிக்கப்பட்டுள்ளது.

'லோக்சபா தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்' என, மத்திய உளவுப்பிரிவு போலீசார், தமிழக உளவுப்பிரிவு, தீவிரவாதிகளை கண்காணிக்கும், 'க்யூ' பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கொடுத்தனர்.அதன் அடிப்படையில், சென்னை, திருவல்லிக் கேணி, மண்ணடி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளை, க்யூ பிரிவு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்.மண்ணடியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த வாலிபன் மீது, க்யூ பிரிவு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணிக்க துவங்கினர்.அவன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளி; சென்னையில் பதுங்கி, சதிச்செயலுக்கு உளவு பார்க்கிறான் என, தெரிய வந்ததும், நேற்று முன் தினம் இரவு, அவனை சுற்றி வளைத்தனர்.

ஆட்டோவில் தப்பி ஓட்டம்: போலீசார் நெருங்கி விட்டதை அறிந்த அவன், ஆட்டோவில் தப்பினான். சேப்பாக்கம், சிவானந்தம் சாலையில் உள்ள தொலைக்காட்சி நிலையம் அருகே அந்த ஆட்டோ வந்த போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த போலீசார், அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. 
அதன் விவரம் வருமாறு:அந்த வாலிபன், இலங்கையை சேர்ந்த முகமது ஜாகீர் உசேன், 37; பட்டதாரி. அவனது மனைவி பெயர் பாத்திமா ரியசா. இரண்டு குழந்தைகள் உள்ளன.இலங்கையில் உள்ள, பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரி, அமீர் சுபேர் சித்திக் என்பவரின் நட்பு, ஜாகீர் உசேனுக்கு கிடைத்தது. ஜாகீர் உசேனை, பாகிஸ்தான் உளவாளி யாக மாற்ற, சித்திக் முடிவு செய்தார். அதற்கு, ஜாகீர் உசேனும் சம்மதம் தெரிவித்தான். இதையடுத்து, ஜாகீர் உசேன், தூதரக உயர் அதிகாரி பாஸ் என்ற ஷாவிடம் அழைத்து செல்லப்பட்டான். ஷா மற்றும் சித்திக் ஆகியோரும், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினரும், ஜாகீர் உசேனுக்கு, இரண்டு ஆண்டுகளாக, உளவு தகவல் சேகரிப்பது தொடர்பாக கடும் பயிற்சி அளித்தனர்.

சங்கேத மொழி :
அவனுக்கு சென்னை, பெங்களூரு, கொச்சி, 

விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்திய நகரங்களின் வரைபடங்கள் அளிக்கப்பட்டன. மேலும், அந்த நகரங்களில், குண்டு வைத்து தகர்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் சொல்லி தரப்பட்டது.மேலும், சேகரித்த தகவல்களை, செயற்கைக் கோள் போன் மற்றும் 'இ-மெயில்' மூலம் சங்கேத மொழியில் அனுப்புவது குறித்து கற்றுத் தரப்பட்டது. தொடர் பயிற்சி காரணமாக, ஜாகீர் உசேன் அவற்றில் நிபுணத்துவம் பெற்றான்.அவனுக்கு, சென்னை யில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்ப்பது தொடர்பான பணி தரப்பட்டது.

6 மாதங்களாக... 
அதற்காக அவனுக்கு, முதல் கட்டமாக, இலங்கை கரன்சி மதிப்பில், 20 ஆயிரம் ரூபாய்தரப்பட்டது. தகர்ப்பு பணியை வெற்றிகரமாக முடித்தால், ஒரு கோடி ரூபாய் தருவதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், சென்னை வந்த ஜாகீர் உசேன், மண்ணடியில் தங்கினான். மருந்து மற்றும் துணி வியாபாரம் செய்வது போல் போக்கு காட்டி, அமெரிக்க துணை தூதரகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு; அங்குள்ள நுழைவு வாயில்கள்; விமான நிலையத்தில் இருந்து, தூதரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது; கடல் வழியாக சென்னைக்குள் ஊடுருவும் விதம் குறித்த தகவல்களை சேகரித்து, புகைப்படங்களுடன், இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளான்.

நாசவேலை முறியடிப்பு :
அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, கடல் மற்றும் வான்வழி மார்க்கமாக, பயங்கரவாதிகளை அனுப்ப, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்பு தயாரானது.இந்த சூழ்நிலையில் தான், ஜாகீர் உசேனை, க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதனால், பெரும் நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் உளவாளி தந்த அதிர்ச்சி தகவல்:''பலி எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் தருவதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்தனர்,'' என, சென்னையில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி, ஜாகீர் உசேன், வாக்குமூலம் அளித்துள்ளான்.அவன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சென்னை, பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டனம் உள்ளிட்டநகரங்களிலும் தாக்குதல் நடத்த முடிவு செய்தது.அதற்காக, உளவாளிகளாக, நான் உட்பட பலர், இந்தியாவிற்குள் ஊடுருவினோம். நான் சென்னையில் தங்கி, அதற்கான பணிகளில் ஈடுபட்டேன். மற்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டனர்.திட்டப்படி தாக்குதல் நடத்த, சில வாரங்கள் மட்டுமே இருந்ததால், சென்னையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தங்க வைக்க வாடகை வீடு பார்த்து வந்தேன்.மேலும், இவ்வளவு பெரியவேலையை, உள்ளூரில் இருப்பவர்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்பதால், சில உள்ளூர் வாலிபர்களை மூளைச் சலவை செய்து தயார்படுத்தினேன்.அவர்களை பற்றியும், சென்னையில் எனக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் விவரங்களை, இலங்கையில் உள்ள பாக்., தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளேன். நாசவேலை வெற்றிகரமாக நடந்து, அதிகளவில் உயிர் பலி ஏற்பட்டால், பலி எண்ணிக்கைக்கு ஏற்ப, பேசிய தொகையை விட, அதிகளவில் பணம் தருவதாகவும், இலங்கையில் உள்ள தூதரக அதிகாரிகள் உறுதி அளித்து இருந்தனர்.இவ்வாறு, அவன் தெரிவித்துள்ளான்.


எந்த பிரிவில் வழக்கு பதிவு?
நாசவேலைக்கு உளவு பார்த்த ஜாகீர் உசேன் மீது, பயங்கரவாத தடைச்சட்டத்தின், 120 பி(கூட்டு சதி), 480(அரசு ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்து இருத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜாகீர் உசேனிடமிருந்து, 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள், இரண்டு; 500 ரூபாய் கள்ள நோட்டுகள், இரண்டு; நான்கு செயற்கைக்கோள் போன்கள்; 'லேப்-டாப்' ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஜாகீர் உசேன், சில ஆண்டுகளுக்கு முன், திருச்சி விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக பிடிபட்டு தப்பியுள்ளான். தற்போது அவன் வைத்து இருந்தது இலங்கையில் அளிக்கப்பட்ட ஒரிஜினல் பாஸ்போர்ட்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=965706

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.