Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சி மாற்றம் நிகழும்: என்பதற்கான அறிகுறிகளே வெளிப்படுகின்ற நிலையில் மாற்றம் காணுமா இந்தியாவின் அணுகுமுறை

Featured Replies

  modi.jpg

மாற்றம்காணுமா இந்தியாவின் அணுகுமுறை?

"...........இலங்கை அரசாங்கம் ஒரு அதிகாரப்பகிர்வு திட்டத்துக்கு இணங்காமல் இந்தியாவினால் எதையும் செய்யமுடியாது.  எனவே கொழும்பை இணங்க வைத்தல் என்பதே இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கையின் முக்கியமான சவாலாக இருக்கும். அரசியல் தீர்வு ஒன்றுக்கு, அதிகாரப்பகிர்வு ஒன்றுக்கு கொழும்பு இணங்கி விட்டால், அடுத்து இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கைகளை சுலபமாகவே கையாண்டு விடலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால், அடுத்தகட்டத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் செல்வாக்கிழந்து விடக்கூடும். எனவே இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கை என்பது, இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை அடிப்படையாக கொண்டதாகவே அமைய முடியும். அதனை விலத்தியதான ஒரு கொள்கையை இந்தியா வகுக்க முயன்றால் தோல்வியடையப் போவது இந்தியா தான். ஏனென்றால், தமிழர் பிரச்சினையை வைத்து, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொழும்பை தமது கைக்குள் போட்டு வைக்கவே முனையும். அத்தகைய நிலையில், இந்தியாவுக்கு சரியான இடம் கிடைக்காது. எனவே, புதுடெல்லியின் புதிய அரசு இலங்கை தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையை மறுசீரமைக்கும் போது, தமிழர் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முதன்மைப்படுத்தியாக வேண்டும்.  இல்லாது போனால், வெளிவிவகாரக் கொள்கை மறுசீரமைப்பு அர்த்தமற்றுப் போகும்......."

-இன்போ தமிழ் குழுமம்-

இனி,

  • இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விட்டது. எஞ்சியுள்ள தொகுதிகளிலும் தேர்தல் முடிந்த பின்னர், வரும் 16ம் திகதி வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தலில், நிச்சயமாக ஆட்சி மாற்றம் நிகழும் என்பதற்கான அறிகுறிகளே வெளிப்படுகின்றன. கருத்துக்கணிப்புகள் எல்லாமே பாஜக ஆட்சிக்கு வரும் என்றே கூறுகின்றன. பத்து ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இந்திய மக்களைப் பெரிதும் சலிப்படைய வைத்து விட்டது. இந்தக் காலகட்டத்தை திறமையற்ற ஆட்சி என்று கூறும் நிலைக்கு மக்கள் வந்துள்ள கட்டத்தில், புதிய அரசாங்கத்துக்கு பல சவால்கள் உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கின்றன. 

    இந்தியாவினது பொருளதாரத்தை சீரமைப்பது தொடக்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு புதிய அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியிருக்கும் 

    அதுபோலவே, வெளிவிவகாரக் கொள்கை ரீதியாகவும், இந்தியா சவால்களை எதிர்கொண்டுள்ளது. 

    குறிப்பாக,

    இலங்கை போன்ற அயல்நாடுகள் விவகாரத்தில் இந்தியாவினது கொள்கைகள் தோல்வியடைந்து விட்டதாகவே பாஜக கூறி வருகிறது. 

    இந்தநிலையில், 

    பாஜக ஆட்சியமைத்தால், காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் இருந்து விலகி, புதியதொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம். 

    ஏனென்றால், 

    தற்போதைய அரசின் அணுகுமுறைகளை விமர்சித்து விட்டு, அதே கொள்கையை பாஜக பின்பற்றினால், கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். 

    இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படும் போது, குறிப்பாக இலங்கையுடனான உறவுகள் குறித்து அதிகம் கரிசனை கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. 

    ஏனென்றால், 

    இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ள சின்னஞ்சிறிய நாடாக இலங்கை இருந்த போதிலும், இதனை இந்தியாவுக்கு சவாலான சக்திகள் பயன்படுத்திக் கொள்வது அதிகரித்துள்ளது. 

    குறிப்பாக, சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவுக்குச் சவால் விடும் நாடுகள் எல்லாமே, இலங்கையைத் தமது கைக்குள் போட்டுக் கொண்டு செயற்படுகின்றன.  இது இந்தியாவுக்கு மிகவும் இக்கட்டான நிலையைத் தோற்றுவித்துள்ளது. இதுமட்டுமன்றி, இந்தியாவினது கருத்துகளை இலங்கை கணக்கில் எடுப்பதுமில்லை, இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இந்தநிலையில், இலங்கையை மீண்டும் வழிப்படுத்தும் வகையில் அமைந்த ஒரு வெளிவிவகாரக் கொள்கையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. 

    கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்காமல் இந்தியா நடுநிலை வகித்தது.  இது தற்போதைய அரசாங்கத்தின் உச்சக்கட்டப் பிறழ்வாக கருதலாம்.  முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவினால் அரசியல் வழிப்படுத்தப்பட்ட காங்கிரஸ் அரசாங்கம், அவரது கொள்கையையே குழிதோண்டிப் புதைத்த நிகழ்வு அது. அராஜகங்கள் இடம்பெறும் போது அல்லது மனித உரிமைகள் மீறப்படும் போது நாங்கள் நடுநிலையைப் பேணமுடியாது, பேணமாட்டோம்" என்று நேரு ஒரு முறை கூறியிருந்ததாக, மூத்த ஊடகவியலாளர் குல்தீப் நய்யார் MAINSTREAM வாரஇதழில் அண்மையில் எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், இலங்கையின் மனிதஉரிமைகள் விவகாரத்தில் இந்தியா, நடுநிலை வகித்ததன் மூலம், நேருவின் கொள்கையை உதறித் தள்ளி விட்டது என்பதே அவரது கருந்தாக இருந்தது. அதாவது, இலங்கையுடன் ஒட்டி உறவாடி, இந்தியாவினது நலனை அடையும் உத்தியை சவுத் புளொக் கையாளப்போகிறது என்பதையே ஜெனிவா வாக்கெடுப்பு வெளிப்படுத்தியது. ஆனால், இலங்கை அரசாங்கமோ, சீனாவினதும், பாகிஸ்தானினதும், செல்வாக்கிற்கு உட்பட்டுள்ள நிலையில், எவ்வாறு கொழும்புடன் தந்திரோபாயம்மிக்க உறவை இந்தியா வளர்த்துக் கொள்ளப் போகிறது என்பது கேள்விக்குரிய விடயமாக உள்ளது. 

    அதாவது, 

    இலங்கையுடன் முரண்போக்கை வளர்த்துக் கொள்ளாமலும், அதேவேளை, அதனுடன் ஒட்டிக் கொள்ளவும் முடியாத நிலையிலும் தான் சவுத் புளொக்கை விட்டுச் செல்லப் போகிறது, தற்போது ஆட்சியில் உள்ள மன்மோகன்சிங் அரசாங்கம்.  அடுத்து வரப்போகின்ற அரசாங்கம், இலங்கையுடன் எத்தகைய உறவை பேணிக் கொள்வது என்று தீர்மானித்து, அதற்கேற்ற அணுகுமுறைகளை வகுத்துச் செயற்படும் வரையில், இருதரப்பு உறவுகளில் பெரியளவிலான முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. 

    என்றாலும், 

    இப்போதைய நிலையில், உலகில் நண்பர்களைத் தொலைத்து, ஓரங்கட்டப்பட்டு வருகின்ற இலங்கை அரசாங்கம், எப்படியாவது இந்தியாவைத் தனது கைக்குள் போட்டுக் கொள்ள முனையலாம்.  

    ஏற்கனவே நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால், அந்த அரசுடன் இணைந்து செயற்படுவோம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.  ஆனால், அது காங்கிரஸ் அரசுடனான உறவு போல, அது துரிதமாகவும் இலகுவாகவும் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும், சுப்பிரமணியம் சுவாமி போன்ற தரகர்களை வைத்து இலங்கை அரசாங்கம் பாஜகவின் அதிகார மட்டத்தை அசைத்துப் பார்க்க முனையலாம். 

    பாஜக அரசமைத்தால், அதன் நாடாளுமன்ற பலம் எந்தளவுக்கு இருக்கும் என்பதும் கூட, இலங்கை தொடர்பான அதன் கொள்கை விவகாரத்தில் முக்கிய பங்கை வகிக்கும்.  காரணம்   தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளினது ஆதரவை தேடும் நிலையில் பாஜக இருக்குமேயானால், இலங்கை அரசுடன், கடும் போக்குடன் செயற்பட வேண்டிய நிலை புதுடெல்லிக்கு ஏற்படலாம்.
     

    பாஜகவே தனித்து அரசமைக்கும் நிலை ஏற்பட்டால், கொழும்பு தொடர்பான புதுடெல்லியின் போக்கு அவ்வளவு கடுமையானதாக இருக்க வாய்ப்புகள் குறைவே. 

    அதேவேளை, இலங்கையில் தமிழர்கள் தனிநாடு அமைப்பதற்கு ஆதரவு தரமாட்டோம் என்று பாஜக தெளிவாகவே கூறிவிட்டது.   தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரித்தால், காஷ்மீர் கைவிட்டுப் போய் விடும் என்ற பயம் காங்கிரசைப் போலவே பாஜகவுக்கும் உள்ளது.  ஆனால், இன்றுள்ள நிலையில் இலங்கைத் தமிழர்கள், தனிநாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவும் இல்லை, அதனை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கவுமில்லை. அது இந்தியாவினால் மட்டுமன்றி இன்றைய உலகின் எந்த சக்தியாலும் நடக்கப் போகின்ற காரியமாகவும் தெரியவில்லை. 

    பாஜக அரசாங்கத்தின் மூலம், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடு செய்து கொள்ளப்படுவதையே இங்குள்ள தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.  அந்த அதிகாரப்பகிர்வுக்கு பாஜக எந்தளவுக்கு ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை. 

    அதுமட்டுமன்றி இது ஒரு பக்கத்தினால் நடக்கக் கூடிய காரியமும் அல்ல. 

    இலங்கை அரசாங்கமும் இணங்கியாக வேண்டும். 

    இலங்கை அரசாங்கம் ஒரு அதிகாரப்பகிர்வு திட்டத்துக்கு இணங்காமல் இந்தியாவினால் எதையும் செய்யமுடியாது.  எனவே கொழும்பை இணங்க வைத்தல் என்பதே இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கையின் முக்கியமான சவாலாக இருக்கும். அரசியல் தீர்வு ஒன்றுக்கு, அதிகாரப்பகிர்வு ஒன்றுக்கு கொழும்பு இணங்கி விட்டால், அடுத்து இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கைகளை சுலபமாகவே கையாண்டு விடலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால், அடுத்தகட்டத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் செல்வாக்கிழந்து விடக்கூடும். எனவே இந்தியாவினது வெளிவிவகாரக் கொள்கை என்பது, இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை அடிப்படையாக கொண்டதாகவே அமைய முடியும். அதனை விலத்தியதான ஒரு கொள்கையை இந்தியா வகுக்க முயன்றால் தோல்வியடையப் போவது இந்தியா தான். ஏனென்றால், தமிழர் பிரச்சினையை வைத்து, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொழும்பை தமது கைக்குள் போட்டு வைக்கவே முனையும். அத்தகைய நிலையில், இந்தியாவுக்கு சரியான இடம் கிடைக்காது. எனவே, புதுடெல்லியின் புதிய அரசு இலங்கை தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையை மறுசீரமைக்கும் போது, தமிழர் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முதன்மைப்படுத்தியாக வேண்டும்.  இல்லாது போனால், வெளிவிவகாரக் கொள்கை மறுசீரமைப்பு அர்த்தமற்றுப் போகும்.

தொல்காப்பியன் தாய்நாடு .

 

Edited by அஞ்சரன்

இன்னுமொரு கோணத்திலும் பார்க்கலாம்..
 
இலங்கையின் தந்திரோபாயம் இந்தியாவிற்கு சீனப் பூச்சாண்டு காட்டுவது.
இது காங்கிரஸிடம் வேலை செய்யலாம்.
 
ஆனால் பா.ஜ.க சீனாவுடன் நட்புகளை வளர்க்கவே விரும்பும். வாஜ் பாயி சீனா போனது ஒரு உதாரணம்.
 
அத்தோடு சீனாவைத் தனிமைப்படுத்தும் மேற்கின் வியூகம் ஆரம்பித்திருப்பதால் சீனாவும் இந்தியாவின் நட்பை மதிக்கும்.
 
ஆகவே இலங்கையின் சீனப்பூச்சாண்டி எவ்வளவு காலம் வேலை செய்யும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். [ இந்தியாவும் சீனாவும் நெருங்குவதால் ]
 
அமெரிக்கா பிரிட்டன் போன்றன மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை மேல் கொடுக்கும் அழுத்தங்கள் அந்நாடுகள் இலகுவில் கைவிடும் நிலையைத்தாண்டி [ Point of no return ] வந்திருப்பதால், இலங்கைக்கு இருக்கும் தெரிவுகள் குறைவே.
 
பா.ஜ.க ஆட்சி எமக்கு ஒரு நேர் விளைவுகளைத் தரக்கூடிய ஒன்று. [ Positive ] 
 
 
 
 
 
.
 
 

Edited by ஈசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.