Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் தமிழினவழிப்பு நினைவு மாதம் நிகழ்வுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடியத் தமிழர் தேசிய அவையானது ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை மக்களை ஒருங்கிணைத்து நிகழ்த்தி எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது.

 

மே 17, 2014 அன்று வார்டன் எல்ச்மர் சந்திப்பிற்கருகில் அமைந்துள்ள கனடா நயினை நாகபூசணி அம்மன் ஆலய மண்டபத்தில் ‘குருதிக் கொடை’ நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத் திங்கள் நிகழ்வில் ஒன்றாக நடைபெறவுள்ளது.

 

2009 மே மாதம் தாயகத்தில் எம் மக்கள் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு கொண்டு இருக்கையில் எம் மக்களைக் காக்க உலக அரங்கெங்கும் வீதி வீதியாக தமிழர்கள் உலக தேசங்களிடம் எம் மக்களை காக்க வேண்டி பல போராட்டங்களையும் செய்தார்கள். எப்படியாவது எம் மக்களை காக்க யாரேனும் உதவ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் அன்று கனடிய மண்ணிலும் பெரும் தெருவை மறித்தும் பல்வேறு தெரு முனைகளில் நின்றும் எம் கனடியத் தமிழர்களும் போராடினார்கள்.

 

ஈழத்து தமிழர்கள் எந்த தேசதிற்குமோ எந்த இனத்திற்குமோ எதிரானவர்கள் அல்ல. ‘யாதும் ஒரே யாவரும் கேளிர்’ என சகல மக்களோடும் அன்பை வளர்த்து மாந்த நேயம் பேணி மனிதாபிமானத்தோடு வாழும் பண்பாட்டு செறிவு கொண்ட இனம் தமிழினம்.

 

அன்று எம் மக்கள் குருதிக் கடலில் குளித்த கொடுமையின் நினைவாகவும் அந்த நாட்களில் தமிழர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் இடையூறுகளை பொறுத்துக் கொண்ட கனடிய அரசின் பெரும் தன்மையை மதித்து அதே வேளை நாமும் மனிதாபிமானம் உள்ள தமிழர்களே என்பதை எடுத்துச் சொல்வதற்காகவும் இந்த குருதிக் கொடை நிகழ்வை கனடிய தமிழர் தேசிய அவையினர் நடத்துகின்றனர். அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து உங்களால் ஆனா மட்டும் பணி சிறக்க கைகொடுக்குமாறு வேண்டுகின்றோம்.

மே 18, 2014: தமிழினப்படுகொலையை நினைவு கூறும் தமிழினப் படுகொலை நாள் ஸ்கார்புரொ டவுன் சென்டறிற்கு அருகில் உள்ள ஆல்பர்ட் கம்பெல் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. கனடா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் வேற்றுமைகள் களைந்து எம் இனத்தின் பேரிழப்பின் வலியை சுமந்து வாழும் தமிழினமாக ஒற்றுமையாக இந்த பெரும் நிகழ்வில் பங்கேற்று பேரெழுச்சி நிகழ்வாக வரலாற்றில் தடம் பதிக்கும் நினைவு நாளாக அணிதிரண்டு கலந்து எழுகை கொள்ளுமாறு வேண்டுகின்றனர் கனடியத் தமிழர் தேசிய அவையினர்.

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கொடுமையான இனப்படுகொலை. கேட்பார் யாரும் இன்றி ஈழத் தமிழினத்தை எதேச்சை அதிகாரத்தோடு இலங்கை அரசு கொன்றொழித்த பேரவலமானது உலகத் தமிழினத்தால் என்றுமே மறக்க முடியாத ஆறாத வடு.

 

காலம் காலமாக தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட சிங்கள பேரினவாத அரசுக்களின் இனப்படுகொலை வரலாற்றின் உச்சக்கட்டமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொன்றோழிக்கப்பட்டார்கள். பல இலட்சம் மக்கள் காயப்பட்டார்கள்.

கொத்துக் குண்டு இரசாயனக் குண்டு என தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து ஈழத்தமிழினத்தை முற்றாக அழிக்கும் வெறியோடு இலங்கை அரசு அதற்கு துணைபோன பல்வேறு நாடுகளோடு சேர்ந்து நடாத்திய தமிழினப்படுகொலையின் வலி சுமந்த நினைவுகளை உலகத் தமிழினம் நெஞ்சினில் சுமந்து வருகின்றது.

 

மறுக்கப்பட்ட எம் மக்களின் நீதிக்காக இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அரசியல் நகர்வுகளூடாக போராடி வருகின்றார்கள்.

 

இன்று எம் இனம் கையில் எடுக்க வேண்டிய ஒற்றை ஆயுதம் ‘ஒற்றுமை’ ஒன்றே. இத்தனை இழந்த பின்பும் ஒன்று பட்டு போராட நாம் நினைக்காது போனால் எம் இனத்தின் அழிவுக்கு நாமே காரணமாகி விடுவோம்.

 

முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல! அது ஒரு ஆரம்பம்! சரவதேசப்படுத்தபட்ட தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒன்றுபட்ட தமிழினமாக தொடர்ந்தும் பயணிப்போம் என முள்ளிவாய்க்காலில் படுகொலையான மாவீரர்கள் மக்கள் மீது உறுதி எடுத்துக் கொள்வோம்.

 

மேலதிக தொடர்புகளுக்குகனடிய தமிழர் தேசிய அவை

தொலைபேசி416-830-7703 | மின்னஞ்சல்info@ncctcanada.ca

 

inapadukolai-tamil785.jpg

 
 

http://ekuruvi.com/torontovil-tamil-inaa-alippu-naal/ekuruviTamilNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.