Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தோல்வியைத் தழுவும் தடைப்பட்டியல்": மகிந்த அரசுக்கு கிடைத்த முதல் தோல்வி.....?

Featured Replies

iltha-eelam-elum.jpg

தோல்வியைத் தழுவுகிறதா தடைப்பட்டியல்?

  • அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால், பயங்கரவாத தொடர்புடையவர்கள் என்று பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்ட 16 அமைப்புகள் மற்றும், 424 தனிநபர்கள் பற்றிய அறிவிப்பு, சர்ச்சைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது.  ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373ம் இலக்க தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிடப்பட்ட போதே, இதனை உலக நாடுகள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

    pulampeyarthamilar_2009.jpgஏனென்றால், இந்தப் பட்டியலை வெளியிட்டதன் நோக்கம், இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுப்பதை தடுப்பதற்கே என்று, அரசாங்கம் கூறினாலும், உண்மையான நோக்கம் அதுவாக இருக்கவில்லை. 

    புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டுவதும், அவர்கள் வாழும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுப்பதும் இலங்கை அரசின் மறைமுக நிகழ்ச்சி நிரல் என்பது ஏற்கனவே தெளிவாகத் தெரிந்த ஒன்று தான். 

    அதாவது, 

    போர்க்குற்ற விசாரணை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, என்று பல்வேறு வழிகளிலும் சர்வதேச அளவில் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் வாயை மூடுவதற்காக போடப்பட்டதே இந்த திட்டம். 

    ஆனால், 

    மிகப் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்புக்கு, உலக நாடுகள் மத்தியில் இருந்து பெரியளவில் சாதகமான கருத்துகள் வெளியாகவில்லை.  

    எனினும், 

    கனடா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிடம் இருந்து இந்த தடை பற்றிய ஏதோ ஒரு வகையான சமிக்ஞைகள் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளன. 

    இந்த மூன்று நாடுகளுமே மிக முக்கியமானவை. 

    இலங்கை அரசின் தடைப்பட்டியலில் இருக்கும் அமைப்புகள் அல்லது தனிநபர்கள் என்று அமெரிக்காவில் அதிகமில்லை.  ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில், 1373 இலக்கத் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றியது அமெரிக்கா தான்.பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தின் மூலமே, இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்பும் அமெரிக்கா, அதற்கான பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது. இலங்கை அரசாங்கத்துடனும், ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளுடனும் மட்டுமன்றி, சிவில் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுடனும், அமெரிக்கா தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருகிறது. 

    அடுத்து, 

    அதிகளவு புலம்பெயர் தமிழர்கள் வசிக்கின்ற நாடாக கனடா விளங்குகிறது.  அத்துடன், இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ள தடைப் பட்டியலில் உள்ள பல அமைப்புகளும், தனிநபர்களும் கனடாவில் இருப்பது முக்கியமான விடயம். 

    மூன்றாவதாக, 

    இலங்கைக்கு அருகேயுள்ள இந்தியா. 

    இலங்கை அரசின் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 32 பேர் இந்தியாவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  பாதுகாப்பு நலன்கள் என்று வரும் போது, இரண்டு நாடுகளுமே ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காத போக்கைக் கடைப்பிடித்து வருபவை. 

    இந்த மூன்று நாடுகளில் இருந்தும் தான், இலங்கை அரசின் தடைப் பட்டியல் பற்றிய ஏதோ ஒரு சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தை இவை நீண்டகாலத்துக்கு முன்னரே பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிட்டு தடை செய்தவை. விடுதலைப் புலிகள் தொடர்பான எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடம்கொடுக்கத் தயாராக இல்லாத நாடுகள் இவை. 

    ஆனால், 

    இந்த தடையை இந்த நாடுகள் அணுகியிருக்கும் விதம் ஆச்சரியப்படத்தக்கது. 

    ".............இந்த தடைப்பட்டியல் குறித்து முதன் முதலாக கருத்து வெளியிட்ட நாடு, கனடா தான்.  ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தின் மீது கடுப்பில் இருக்கும் நாடும் கூட. இலங்கையை கொமன்வெல்த் தலைமைக்கு கொண்டு வந்ததற்காகவே, 20 மில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்தி, கொமன்வெல்த் மீது கோபத்தை வெளிப்படுத்திய நாடு இது. அதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் இங்கு தேர்தல்களில் வெற்றிகளைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பதும் மற்றொரு விடயம். இத்தகைய கனடா, இலங்கை அரசின் தடை, தமது நாட்டில் சட்டரீதியாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அறிவித்துள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் மற்றும் வெளிவிவகார இணை அமைச்சர் லின்னே யெலிச் ஆகியோர் இணைந்து வெளியிட்டிருந்த அறிக்கையில், இலங்கையில் போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளில் புலம்பெயர் குழுக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன என்றும், இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அதுமட்டுமல்லாது, பயங்கரவாதத்தை அடக்குவதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் அனைத்துலக சட்டங்களுக்கு, குறிப்பாக அனைத்துலக மனிதஉரிமைகள் சட்டங்களுக்கு அமைவாகவே இருக்க வேண்டும் என்பதையும் இலங்கைக்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ............."

    சட்டத்துக்குட்பட்டு, புலம்பெயர் அமைப்புகளும் தனிநபர்களும் செயற்படவும், கருத்துகளை வெளியிடவும் கனடா, தடை போடப் போவதில்லை என்று அறிவித்துள்ளதானது, இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்த முதல் தோல்வி.  ஆனால், இதனை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று கூறமுடியாது.  ஏனென்றால், இலங்கை அரசுக்கு எதிராக கனடா கொண்டுள்ள கடுமையான நிலைப்பாடும், அங்கு புலம்பெயர் தமிழர்கள் கொண்டுள்ள செல்வாக்கும், இலங்கை அரசாங்கத்துக்கு, அத்தகைய மிகையான நம்பிக்கையை அளித்திருக்கவில்லை.  என்றாலும், வெளிப்படையான முறையில் கனடா, இலங்கை அரசின் தடைப்பட்டியலை மறுதலித்திருப்பது முக்கியமானது. 

    அடுத்து, 

    இலங்கையின் தடைப்பட்டியலை உதாசீனப்படுத்தும் வகையில், அமெரிக்காவும் ஒரு குறிப்பை உணர்த்தியுள்ளது. 

    "....................தடைப்பட்டியல் குறித்து அமெரிக்கா எந்தக் கருத்தையும் அதிகாரபூர்வமாக வெளியிடாத போதிலும், கடந்தமாதம் 29ம் திகதி இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற ஒரு சந்திப்பு, இந்த தடை தொடர்பான நிலைப்பாட்டை சற்று வெளிப்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் 15 பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இதில், இலங்கை அரசின் தடைப்பட்டியலில் இடம்பெற்றிருந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களும் பங்கேற்றிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின், தடைப் பட்டியலை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதாக இருந்திருந்தால், இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்காது. எனவே, இலங்கை அரசின் தடையை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை, அதைத் தட்டிக்கழிக்க நினைக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. ...................."

    "இந்தத் தடை தொடர்பாக, தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ள மூன்றாவது நாடு இந்தியா. "

    முன்னைய இரண்டு நாடுகளைப் போலல்லாது, இலங்கை அரசுக்கு சார்பாக, வழக்கம் போலவே செயற்பட்டுள்ளது இந்தியா. தடைப்பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒருவர், தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த போது, அவரை மீண்டும் பிரித்தானியாவுக்கே திருப்பி அனுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் வசிக்கும், இலங்கை அரசின் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 32 பேர் பற்றிய விபரங்களை ஆராயவும் தொடங்கியுள்ளது.  

    அடுத்த கட்டமாக இவர்களை இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி இப்போதே எழுந்து விட்டது. 

    ஏனென்றால், 

    இரண்டு நாடுகளுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்ற உடன்பாடு நடைமுறையில் இருக்கின்ற நிலையில், இந்த 32 பேரையும், இலங்கையிடம் பிடித்துக் கொடுக்க இந்தியா முனையுமா என்ற சந்தேகம் பலரிடமும் ஏற்பட்டுள்ளது.  ஆனால், அகதிகளாகத் தஞ்சம் கோரியவர்களை, அவ்வாறு இலங்கை அரசிடம் பிடித்துக் கொடுப்பது இந்தியாவினது நன்மதிப்பை கேள்விக்குட்படுத்தி விடும். அதேவேளை, இலங்கை அரசும் கூட, இந்த 32 பேரையும் தடைப்பட்டியலில் சேர்த்திருந்தாலும் கூட, அவர்களைப் பிடித்துத் தருமாறு இந்தியாவிடம் வெளிப்படையான கோரிக்கையை முன்வைக்க வாய்ப்புகளில்லை. 

    ஏனென்றால், இந்தியாவினால் தேடப்படும், புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான, கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன், இலங்கை அரசின் பாதுகாப்பில் இப்போதும், இருக்கிறார். 

    32 பேரைப் பிடித்துத் தருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டால், பதிலுக்கு இந்தியாவும் கே.பியைத் தம்மிடம் தருமாறு கேட்கக் கூடும்.  

    இலங்கை அரசின் தடைப் பட்டியலை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், அதன் மூலம், இலங்கை அரசுக்கு எத்தகைய அனுகூலம் கிடைக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கனடா, அமெரிக்காவினது போக்கு, இலங்கை அரசுக்கு சாதகமானதாக அமையவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் கூட, தடைக்கான காரணத்தை இலங்கை தெளிவுபடுத்தவில்லை - நிரூபிக்கவில்லை என்று கூறியுள்ளது. இதற்காக, எல்லா நாடுகளுக்கும் தெளிவுபடுத்தும் ஆதாரங்களுடன் கூடிய அறிக்கையைச் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. 

    ஆனால், 

    புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தனிநபர்களைத் தடை செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு, தவறானது என்ற கருத்து, இப்போது கொழும்பு அரசியல் மையத்தில் ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது.  இது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மற்றொரு தோல்வி என்பதில் சந்தேகமில்லை. இது கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் தடையை உதாசீனப்படுத்தியதைவிட மோசமானது என்பதில் தவறில்லை.

maviirar_east_2010.jpg

தொல்காப்பியன்

 

"அடுத்த கட்டமாக இவர்களை இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி இப்போதே எழுந்து விட்டது."

கொங்கிரஸ் இந்தியா 5 வருட விடு முறையில் சென்றுவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.