Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் பதுங்குவது எதற்காக? குமுதம் ரிப்போர்ட்ர் உடைய ஆய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரைக் கைப்பற்றியதைப் பட்டாசு வெடிக்காத குறையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம். 'விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். அவர்களை வீழ்த்துவதற்குத் தேவையான மனோபலமும் படைபலமும் எங்களிடம் உண்டு. இனி யாரும் அவர்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்!’ _ பெருமை பொங்க இப்படி அறிவித்திருக்கிறார் மகிந்த ராஜபக்சே.

புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது எப்படி என்பதையும் அவர் விலாவாரியாக விவரித்துள்ளார். 'சரியான ஆட்களைச் சரியான பதவியில் அமர வைத்தால், எல்லாம் நல்லபடியாக நடக்கும். அதாவது, இலங்கை ராணுவத்தில் இருக்கும் ஒவ்வொரு வீரனும் அதிகாரியும் இப்படித் தேர்வு செய்யப்பட்டவர்கள்தாம். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால்தான், தீவிரவாதிகளை (அதாவது புலிகளை) விரட்டிவிட்டு, சம்பூரைக் கைப்பற்ற முடிந்தது!’ என்று சொன்ன கையோடு, ராணுவத்தைச் செம்மையாக வழிநடத்திய ராணுவத் தளபதி சரத் போன்சேகாவை எக்கச்சக்கமாகப் பாராட்டியுள்ளார் மகிந்த ராஜபக்சே.

திரிகோணமலையை மீட்டதில் ராணுவத்துக்கு மகா திருப்தி. காரணம், இலங்கையின் பொருளாதாரமே திரிகோணமலை துறைமுகத்தை நம்பியிருக்கிறது. இலங்கையில் 40 சதவிகித எரிபொருள் நிலையங்கள், இலங்கை இந்தியன் ஆயில் கம்பெனியைச் (லிணீஸீளீணீ மிஸீபீவீணீஸீ ளிவீறீ சிஷீனீஜீணீஸீஹ்) சேர்ந்தவை. இந்த கம்பெனியின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு திரிகோணமலைப் பகுதிக்கு அருகே உள்ள சைனா பே (சிலீவீஸீணீ ஙிணீஹ்) பகுதியில் அமைந்துள்ளது.

தவிரவும், திரிகோணமலையை ஒரு சிங்களப் பிரதேசமாக மாற்றவேண்டும் என்பது, இலங்கை அரசின் நீண்டகாலக் கனவு. இது அவர்களுடைய அரசியல் தேவையும்கூட. தமிழர்களின் விகிதாச்சாரத்தைக் குறைத்து, சிங்களர்களின் விகிதாச்சாரத்தை உயர்த்தினால் மட்டுமே இது சாத்தியம். அப்படிச் செய்தால்தான், சம்பூர் போன்ற தமிழர்கள் மிகுதியாக வாழும் பிரதேசங்கள், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்துசேரும். அதனால்தான் ஏப்ரல் 25 முதலே சம்பூரில் வான்வழித் தாக்குதல்களை இலங்கை தொடங்கிவிட்டது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. செய்தித்தாளைப் பிரித்தால் யுத்தச் செய்திகள் இருக்கிறதோ இல்லையோ, தினமும் ஆள்சேர்ப்பு விளம்பரங்கள் மட்டும் எக்கச்சக்கமாக இருக்கும்.

கொழும்பிலோ, யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு எந்தப் பிரதேசத்தில் தாக்குதல் நடந்தாலும், அதைச் சாக்காக வைத்து, சம்பூரை ராணுவம் ஆரம்பகாலம் முதலே தாக்கிவருவது இதனால்தான். விளைவு? சம்பூர் மட்டுமல்ல கட்டைப்பறிச்சான், சேனையூர் போன்ற பகுதிகளும் கிட்டத்தட்ட தரைமட்டமாகிவிட்டன.

சம்பூரிலிருந்து மொத்தம் 40,000 பேர் வெளியேறியிருக்கிறார்கள். திரிகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் பிரதேசத்தில் மட்டும், 1750 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளன. மூட்டைப்பூச்சியை நசுக்குகிறோம் என்று சொல்லி, வீட்டை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கதைதான் இப்போது நடந்திருக்கிறது. புகை மூட்டத்துக்கு மத்தியில் நின்றுகொண்டு ‘ஆ! இப்போது ஒரு சிறு பூச்சிகூட இல்லை, பார்த்தாயா?’ என்கிறது இலங்கை அரசு.

சென்ற வாரம் நடந்த சம்பவங்களைத் தொகுத்து வைத்துப் பார்க்கும்போது, இலங்கை ராணுவம் மகத்தான வெற்றியை அடைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ‘புலிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவு; புலிகள் சம்பூரை மட்டும் தொலைக்கவில்லை, தமிழீழக் கனவையே தொலைத்துவிட்டார்கள்’ என்று இலங்கை அரசு ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் பிரசாரமும் செய்துகொண்டிருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை? பார்க்கலாம்.

திரிகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. எழிலன் விடுத்துள்ள எச்சரிக்கையை முதலில் பார்த்துவிடுவோம். ‘இலங்கை ராணுவத்தின் இலக்குகளை அழிப்பதுதான் எங்களது நோக்கம் என்றால், அது எந்தப் பிரதேசத்தில் இருந்தாலும் சரி, அதை எங்களால் அழிக்க முடியும். அதற்கான தாக்குதல் திறன் எங்களிடம் நிறையவே இருக்கிறது!’

அப்படியானால், சம்பூரைவிட்டு புலிகள் வெளியேறியது ஏன்? புலிகளின் டார்கெட் யாழ்ப்பாணம். அவர்களைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு வழிதான் சம்பூர். சம்பூரையோ, திரிகோணமலையையோ கைப்பற்றுவது புலிகளின் நோக்கமே அல்ல. சம்பூரை செயலிழக்கச் செய்வதன் மூலம் இலங்கை ராணுவத்தின் பலத்தைக் குறைக்கமுடியும் என்பதால்தான், சம்பூரை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராடினார்கள். திரிகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சரக்குக் கப்பல் போக்குவரத்து இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சம்பூரை மடக்கி வைத்திருந்தார்கள். இப்போது பிடி தளர்ந்துவிட்டது.

சரி, அப்படியானால் சம்பூரை இழந்ததை ஒரு பின்னடைவாகக் கொள்ளலாமா? முடியாது. ஏனென்றால், சம்பூரை இழந்ததால் யாழ்ப்பாணத்தை அடைவதற்கான ஒரு வழியைத்தான் அவர்கள் இழந்திருக்கிறார்கள். புலிகளிடம் வலுவான கப்பற்படையும் தரைப்படையும் உள்ளது. அதிக தூரம் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களும் உள்ளன. ‘நாங்கள் பயந்து ஓடிவிடவில்லை. சற்றே பின்வாங்கியுள்ளோம் அவ்வளவுதான்!’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மற்றொரு விஷயம், ஆதரவு. அனைவரும் பொதுவாக ஒப்புக்கொள்ளும் விஷயம் இது. புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் அத்தனையும் தெளிவான இலக்குகளைக் கொண்டவை. கடற்படைத் தளம்தான் இலக்கு என்றால், கடற்படைத் தளத்தை மட்டுமே அவர்கள் தாக்கினர். குத்துமதிப்பாகக் குண்டு வீசுவதில்லை. ஆனால், இலங்கை ராணுவத்தின் வழியே தனி வழிதான். இங்கு புலிகளின் நடமாட்டம் இருக்கலாம் என்பது போன்ற சந்தேகங்களேகூட, தாக்குதலைத் தொடரப் போதுமான காரணமாக அமைந்துவிட்டன.

இது மட்டுமின்றி, திரிகோணமலையிலுள்ள நான்கு முக்கியப் பிரதேசங்கள், இன்னமும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகப் புலிகள் அறிவித்திருக்கிறார்கள். ஒன்று, தோப்பூரின் பிற்பகுதி, கிழக்கு மூதூர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள். இரண்டு, திரிகோணமலைக் கடற்படைத் தளத்துக்கு எதிரே இருக்கும் உப்பாறு. மூன்று, தியாகவனம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதி. நான்காவதாக, நிலாவெளிகண்ணியா பகுதிகள்.

சம்பூரில் இன்னமும் பதற்ற நிலைதான். திரிகோணமலை துறைமுகத்தை இன்னமும் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை இலங்கை அரசு. ஆக, சம்பூர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் இலங்கை அரசும் வெற்றி பெறவில்லை, புலிகளும் தோற்கவில்லை. புலிகள் தாற்காலிகமாகப் பதுங்கியிருக்கிறார்கள். அவ்வளவே!

மருதன்

மூதூர் கிழக்கு மாத்திரம் தான் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது மூதூர் மேற்கு (தோப்புர் செல்வநகர் பகுதியில் இன்றும் மோதல்கள் நடைபெற்றிருக்கின்றன..........) புலிகளுக்கு பழக்கமான இடம் இராணுவத்துக்கு புதிய இடம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியும்தானே..........பாவப்பட்ட ஆமிக்காரர் சும்மா சாகப்போகுதுகள் ????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.