Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு படுகொலைக்கு இணைத் தலைமை நாடுகள் கண்டனம்

Featured Replies

முல்லைத்தீவு படுகொலைக்கு இணைத் தலைமை நாடுகள் கண்டனம்

முல்லைத்தீவு செஞ்சோலைப் படுகொலை உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் இணைத் தலைமை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெல்ஜியத்தின் பிரசெல்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்ட முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

- டோக்கியா உதவி வழங்கும் மாநாட்டின் இணைத் தலைமை நாடுகளான நோர்வேஇ ஐரோப்பிய ஒன்றியம்இ அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை பிரசெல்சில் செப்ரெம்பர் 12 ஆம் நாள் கூடின.

- சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிபந்தனையற்ற பேச்சுக்கு நோர்வே அனுசரணையாளர்களிடம் இணக்கம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். அனைத்து வன்முறைகளையும் இருதரப்பினரும் உடனே கைவிட வேண்டும். அனுசரணையாளர்களால் முன்மொழியப்படும் ஏற்பாடுகளின் அடிப்படையில் இச்சந்தர்ப்பத்தில் இருதரப்பும் மேலதிக நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்க வேண்டும். இருதரப்பும் ஒப்புக்கொண்டதற்கிணங்க ஒக்டோபரில் ஓஸ்லோவில் பேச்சுக்கள் நடைபெறும். ஒக்டோபர் இறுதியில் பேச்சுக்கள் குறித்து ஆராய இணைத் தலைமை நாடுகள் கூட்டம் நடைபெறும்.

- டோக்கியோவில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் விடுத்த அழைப்பை இருதரப்பும் நிராகரித்து போர் நடவடிக்கைகளில் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமை மீளத் திரும்ப இருதரப்பும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

- அண்மைய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக இணைத் தலைமை நாடுகள் கவலை கொள்கிறது.

- வடக்கு கிழக்கு அரசியல் பிரச்சனைக்கு போரின் மூலம் தீர்வு காண முடியாது. இருதரப்பும் பேச்சுக்களைத் தொடங்கி அரசியல் ரீதியான தீர்வுக்கான ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்- முஸ்லிம் மற்றும் சிங்கள இன மக்களின் சட்டப்பூர்வ அபிலாசைகள் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

- தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளை கைவிட வேண்டும். ஐக்கிய இலங்கைக் கட்டமைப்புக்குள் அரசியல் தீர்வு ஏற்பட தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியான சமரசங்களை மேற்கொள்ள வேண்டும். சிறிலங்கா இராணுவமானது யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை மதித்து அதன்கீழ்படிந்து நடப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

- சர்வதேச மனிதாபிமான சடங்கள் மற்றும் மனித உரிமை விதிகளை இருதரப்பும் மதித்து நடக்க வேண்டும். கணக்கிலடங்காத காணாமல் போதல்இ படுகொலைகள் மற்றும் பிரெஞ்சு அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலைஇ பேரூந்து கிளைமோர் தாக்குதல்இ முல்லைத்தீவு படுகொலை உள்ளிட்ட அனைத்து வன்முறைகளையும் இணைத் தலைமை நாடுகள் கண்டனம் செய்கிறது. குறிப்பாக பாரிய அளவிலான மனித உரிமை முறைகேடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்து இணைத் தலைமை நாடுகள் கவலை கொள்கிறது.

- அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பில் இருதரப்பும் உத்திரவாதம் அளிக்கவேண்டும். சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையிலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் பிரச்சனைக்குரிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

- சமூக ஆர்வலர்கள்இ ஊடக நிறுவனப் பிரதிநிதிகள்இ மதத் தலைவர்கள் ஆகியோரது பாதுகாப்புக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் உரிய தரப்பினர் உத்திரவாதம் அளிக்க வேண்டும். அச்சுறுத்தல்இ தாக்குதல்கள்இ படுகொலைகள் ஏற்க முடியாதது.

- நோர்வேயின் அனுசரணைப் பணிகளுக்கும் கண்காணிப்புக் குழுவினரது பணிகளுக்கும் இணைத் தலைமை நாடுகள் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28775

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.