Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகையிலை விவசாயிகள் பன்முக, நிலையான விவசாய நடவடிக்கைகளுக்கு மாற்றம்

Featured Replies

இலங்கையின் புகையிலை விவசாயிகளுக்கான நிலையான விவசாய செயற்திட்டமொன்றை 2013 ஆம் ஆண்டில் சிலோன் டொபாக்கோ கம்பனி பிஎல்சி அறிமுகம் செய்திருந்தது.
 
TOBACO.jpg
 
இந்த திட்டத்தின் ஊடாக, விவசாயிகள் மத்தியில் சிறந்த விளைச்சல் நிர்வாக நுட்பங்கள், தேசிய உணவு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் தமது சொந்த போஷாக்கு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மரக்கறி செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிப்பது போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 
 
சிலோன் டொபாக்கோ கம்பனியின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான நிலையான விவசாய அபிவிருத்தி திட்டத்தின் அங்கமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. SADP Ultra திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தமது மேலதிக விளைச்சல்களை விற்பனை செய்து, தமக்கு மேலதிக வருமானத்தை திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. 
 
இலங்கையர்களின் மதிப்பை பெற்ற கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், சிலோன் டொபாக்கோ கம்பனி, தனது வர்த்தக செயற்பாடுகளை சமூக பொறுப்புணர்வு வாய்ந்த வகையில் முன்னெடுக்க அர்ப்பணித்துள்ளது. இதற்கமைவாக, கம்பனி, இலை உற்பத்தியில் விசேட கவனம் செலுத்துவதுடன், தமது பிரதான துறைசார் பங்காளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது. ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 4100 விவசாயிகள் இதற்கமைவாக அனுகூலம் பெற்று வருகின்றனர். 2013 இல், நாட்டின் பின்தங்கிய பொருளாதாரத்தில் புகையிலை விவசாய துறை என்பது 1.4 பில்லியன் ரூபாவை வியாபித்திருந்தது. 
 
துறைசார் பங்காளர்களுடன் தொடர்பாடல்களின் மூலம் பெறப்படும் கருத்துக்களை கொண்டு, சிலோன் டொபாக்கோ கம்பனியின் இலை திணைக்களம், நிலையான இலை பறித்தல் 
 
தொடர்பான செயன்முறை ஒன்றை தனது விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டது. 
 
இதற்காக விவசாய திணைக்களம் மற்றும் தேசிய வளங்கள் முகாமைத்துவ நிலையம்  ஆகியவற்றின் உதவிகளையும் நாடியிருந்தது. இந்த ணைந்த செயற்பாடுகளின் மூலம் ADP Ultra  திட்டம் உதயமாகியிருந்தது. புகையிலை பயிரிடும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை இந்த திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது. 
 
இந்த செயற்பாட்டுக்கு அமைய, விவசாயிகளுக்கு தமது செய்கைகளுக்கு மேலதிகமாக சோளம், பயறு, அவரை, வெள்ளை கவுப்பி மற்றும் சின்ன வெங்காயம் போன்ற பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது தொடர்பிலான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிர்ச்செய்கைகள்  காற்று தடைகளாக செயற்பட வேண்டிய விவசாய தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், பூச்சி மேலாண்மை, இணைந்த அல்லது பரந்த செய்கைகளாக காணப்படுவதன் மூலம் சூழல் உயிரியல் பன்முகத்தன்மையை பேண உதவுகிறது. 
 
இந்த செயற்திட்டமானது, அனுகூலம் பெறும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சிறந்த விவசாய செயற்பாடுகளை பகிர்ந்து கொள்ளும் மாதிரி விவசாயிகளாக அவர்களை மாற்றியமைப்பதிலும் பங்களிப்பை வழங்குகிறது. 16000 அனுகூலம் பெறும் விவசாயிகள் மத்தியில் 4100 புகையிலை விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு SADP Ultra  மூலம் அறிமுகம் செய்யப்பட்ட வருடத்தில் முடிந்துள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.